Home இரகசியகேள்வி-பதில் திருமணமாகி, இதுநாள் வரை, இந்த நிமிடம் வரை நான் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக் கிறேன்.

திருமணமாகி, இதுநாள் வரை, இந்த நிமிடம் வரை நான் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக் கிறேன்.

74

hqdefaultஎன் வயது 26. திருமணமாகி, ஒன்றரை வருட மாகிறது. இதுநாள் வரை, இந்த நிமிடம் வரை நான் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக் கிறேன். எத்தனையோ பேர் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சிக்கலை, தீர்த்து வைத்துள் ளீர்கள். என் வாழ்க்கையை உங்கள் கையில் ஒப்படைக் கிறேன். இதில் எழுதுகிற ஒவ்வொரு வார்த்தைகளும் என் கண்ணீரும், மன வேத னையும் தான். என்னுடைய பிரச்னைக்கு வருகிறேன்…
திருமணமாகி, மூன்று மாதங் கள் சந்தோஷமாக இருந் தோம். மூன்றா வது மாதத்திலிருந்து தான் பிரச்னையே வந்தது அம்மா. திருமணத்திற்கு முன், என் கண்ணில் ஒரு சின்ன பிரச்னையிருந்தது. இதனால், திருமண த்திற்கு பிறகு, இது ஒரு பிரச்னை யில்லை என்று சொன்ன பிறகு தான், எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. ஆனால், இதை பற்றி எதுவுமே என் வீட்டார் என் கணவரிடமோ, அவர்கள் வீட் டிலோ சொல்லவில்லை. திருமணத்திற்கு, இரண்டு மாதங்கள் இடை வெளி இருந்தது. நானும், என் வருங்கால கண வரும் அடிக்கடி போனில் பேசிப்போம். என்னால் எனக் கிருந்த பிரச்னையை சொல்லா மல் இருக்க முடியவில்லை; சொல்லி விட்டேன். அது மட்டுமல்ல, எந்த விஷயத்தையும் நான் வெளிப்படை யாக பேசி விடுவேன்; எதையும் மறைத்து வைத்துக் கொள்ள மாட்டேன். என் கண்ணில் இருந்த பிரச் னைக்கு தொடர்ந்து, ஒரு வருடம் மாத்திரை எடுத்துக்கணும் என்று சொல்லிட்டாங்க. என் குடும்ப சூழ்நிலையால் என்னால் தொடர்ந்து சிகிச் சை எடுத்துக்க முடியலை.

நான் தொடர்ந்து மாத்திரை எடுத்துக்கிறதால, என்னால் குழந்தை பெற முடியாதுன்னு பிரச்னை பண்ண ஆரம்பிச்சாங்க. அந்த மாத்திரை சாப் பிடுகிற சமயத்தில் என்னால் கர்ப்பம் ஆக முடியாதுன்னு எனக்கு தெரிய வே தெரியாது. வெளிப்படையாக எல்லா விஷயத்தையும் என் கண வரிடம் நான் பகிர்ந்து கொண்டேன். அதை புரிந்து கொள்ளாமல், “என்னி டம் மறைத்து, ஏமாற்றி கல்யாணம் பண்ணிட்டீங்க…’ன்னு சொல்லி பிரச்னை பண்ணி, “நீ, உங்க அம்மா வீட்டில் இரு; உனக்கு சரியான உடனே நான் கூட்டிட்டு போறேன்…’ என்று சொல்லி, எங்க வீட்டில் விட்டுட்டார் என் கணவர். நானும் எவ்வளவோ கெஞ்சியும் எதையும் காதில் வாங்கவேயில்லை. அதற்கப்புறம் என்னிடம் பேசவும் இல்லை; பார்க்கவும் வரவில்லை.
என் மாமியார் வீட்டில் எல்லாரும், “நாங்கள் எல்லாத்தையும் சரி செய்திடுவோம். கோபம் தணியட்டும், கொஞ்சம் பொறுமையாக இரு…’ என்று சொல்லி, என்னை சமாதானப்படுத்தினாங்க. நானும், ஐந்து மாதம் அமைதியாக இருந்தேன். அவங்க சொன்ன மாதிரி எதுவுமே நடக்கவில் லை. மாறாக, என்னிடம் எல்லாரும் சேர்ந்து, விவாகரத்து வேணும்ன்னு சொல்லி, ஊர் பெரியவர்களிடம் பேசினாங்க; யாரும் இதற்கு சம்மதிக்க வில்லை. அதனால், கோர்ட்டில் விவாகரத்து வேணும் என்று மனு கொடுத்திருக்காங்க. நான் சேர்ந்து வாழ வேணும்ன்னு மனு கொடுத்தி ருக்கிறேன். “என்னால் உன்னோடு வாழ முடியாது; எனக்கு விவாகரத்து வேணும்…’ன்னு பிரச்னை பண்றாங்க.

என் கணவர் ராணுவத்தில் வேலை பார்க்கிறார்; ரொம்ப நல்லவர். அவ ரோடு, மூன்று மாதம் குடும்பம் நடத்தினாலும், என்னால் அவரை நல்லா புரிஞ்சுக்க முடியும். நானும் எத்தனையோ டாக்டரிடம் காண்பித்து, ரிப்போர்ட்டும் கொடுத்தாலும் நம்பிக்கையில்லாமல் பேசறாங்க. எல்லாருமாக சேர்ந்து என் கணவருடைய மனதை மாத்திட்டாங்க. என் மேல் தப்பான அபிப் பிராயத்தை உண்டாக்கிட்டாங்க. அதனால், நான் என்ன சொன்னாலும் நம்ப மாட்டாங்க. என்னிடம் பேச கூடாது, பார்க்கக் கூடாதுன்னு, வெறுத்தாங்க. போன் நம்பரையும் மாத்தினாங்க. ஐந்து மாதம் சென்றதும், என் கணவரே எனக்கு போன் பண்ணி பேச ஆரம்பிச் சாங்க. அப்பவும் நான் பொறுமை யாகவும், அமைதியாகவும்தான் பேசி னேன்.
எங்க வீட்டிலேயும் உன் கணவர் தானே விட்டு போனார், கோர்ட்டில் மனு கொடுத்தார், அவரே திருந்தி வரட்டும்ன்னு சொல்லிட்டாங்க.

நான், என் கணவரை விட்டு பிரிந்து, ஒரு வருடம் ஆகிறது. என் மனதை திறந்து எல்லாத்தையும் எழுதி விட்டேன். என் நாத்தனரோ, நான் தப்பானவள்ன்னு சொல்லி, என் கணவர் மனசை கலைக்கிறாங்க.
என் கணவருக்கு அம்மா, தங்கச்சி மேல் பாசம் அதிகம். அவங்க எது சொன்னாலும் அப்படியே கேட்பார். எனக்கு வேற வழி தெரியலை. எனக்கு நல்ல காலம் வராதான்னு வேதனைப்படுகிறேன். எங்க வீட்டி லேயும் அமைதியாயிருக்காங்க. எங்க வீட்டினர் இறங்கி பேசணும்ன்னு அவங்க எதிர்பார்க்கிறாங்க. எங்க வீட்டில், “முடியாது… எப்ப வருவாங்க ளோ வரட்டும்…’ என்று சொல்றாங்க. என் கணவர் எதையும் எதிர் பார்க்கவில்லை. உன்னால், எனக்கு ஆரோக்கியமான குழந்தை தந்தால் போதும் என்று நினைக்கிறார்.
எனக்கு இருக்கிற பிரச்னை, எனக்கு பிறக்கப் போற குழந்தையும் ஊன மா போயிடும் என்ற தப்பான எண்ணத்தை உருவாக்கிட்டாங்க. யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க. நீங்களாவது என் வாழ்க்கைக்கு ஒரு நல்ல வழிகாட்டுங்க. அம்மா… இதற்குமுன் கடிதம் எழுதியிருந்தேன்; பதில் இல்லை. இதற்கு மறக்காமல், தாமதிக்காமல் எனக்கு பதில் கொடு ங்கள்.
— இப்படிக்கு,
உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் மகள்.

அன்பு மகளுக்கு —
உன் கண் நோய் பிறவியில் வந்ததா, இடையில் வந்ததா என நீ தெரிவி க்கவில்லை. ஆனால், உன் கண் பிரச்னை மரபியல் ரீதியானது என நினைக்கிறேன்.
நம் கண்களை பிரதானமாய் பாதிப்பது இரண்டு நோய்கள். ஒன்று – கண் புரை நோய். இரண்டு – கண் அழுத்த நோய். கண்புரை நோயை அறுவை சிகிச்சையால் சரி செய்து விட முடியும்; ஆனால், கண் அழுத்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது. கண் அழுத்த நோயில், திறந்த கோணக்கண் அழுத்த நோய், மூடிய கோணக்கண் அழுத்த நோய் என, இருவகை உண்டு.
கண் நோய்களை கண்டறிய விழித்திரை பரிசோதனை, விழி நரம்பு பரிசோதனை, பார்வை தளப் பரிசோதனை, ஆப்டிகல் கொஹரன்ஸ் டோமோகிராபி பரிசோதனைகள் இருக்கின்றன.
உன் பிரச்னை பற்றி, இரு மருத்துவர்களை அணுகினேன்.
“பிறவியில் வரும் கண் நோய்கள் நூற்றுக் கணக்கில் உள்ளன. நோய் க்கு மருந்து எடுத்துக் கொள்ளும் போது, கருத்தரிக்க முடியாது என்பது தவறு; கருத்தரிக்கக் கூடாது என்றுதான் மருத்துவர் கூறியிருப்பார். மரபியல் ரீதியாய், கண் நோய் உள்ள பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைக் கும், கண் நோய் வரும் என பொத்தம் பொதுவாய் கூறி விட முடியாது. நோயாளியுடன் பேசி, அவரது குடும்ப அங்கத்தினர் களின் கண் பிரச் னைகளையும் அலசி ஆராய்ந்து, ஒரு மரபியல் மரம் வரைவோம். நோயாளிக்கு மரபியல் ஆலோசனை வழங்குவோம். கண் நோய் உள்ள பெண்ணுக்கு, அதே குறையுடன் குழந்தை பிறக்க எத்தனை சதவீதம் வாய்ப்புள்ளது என கணக்கிட்டும் கூறுவோம். ஸ்டிராய்டு மருந்துகள் கர்ப்பதடை பண்ணாது…’ என்றார் ஒரு மருத்துவர்.

ஓமியோபதி மருத்துவர் கூறியது… “கடிதத்தில் அப்பெண் தனக்கு வந்திருக்கும் கண் நோயின் மருத்துவ பெயரை குறிப்பிடவில்லை. அப்பெண் ஸ்டிராய்டு மாத்திரைகள், ஒரு வருடம் தொடர்ந்து உட் கொண்டால், ஹார்மோனின் ஏற்ற இறக்கத்தால் கருத்தரிக்கும் வாய்ப் புகள் குறையலாம். அப்பெண் முறையான ஓமியோபதி மருத்துவம், இர ண்டு மாதம் எடுத்துக் கொண்டு, நோயிலிருந்து குணமாகலாம். நோய் பிறவியில் வந்ததாக இருந்தால், குணம் கிடைக்க தாமதமாகலாம்; ஆனால், நோயை கட்டுப்படுத்தலாம். அப்பெண்ணின் குழந்தைக்கும் அதே கண் நோய் வர வாய்ப்புகள் குறைவு…’ என்றார்.

வெண்புள்ளிகள் பிறவியில் உள்ளவருக்கும், கண்ணில் பிரச்னை இருக்கும். உன் குண்டு, குண்டான கையெழுத்தைப் பார்க்கும் போது, உன் கண் பார்வை பாதிக்கப்படவில்லை என தெரிகிறது.
திருமணத்திற்கு முன் உன் கண் பிரச்னை பற்றி மாப்பிள்ளை வீட்டாரி டம் கூறியிருக்கலாம். ஆனால், பெருந்தன்மையாய், அறிவுப்பூர்வமாய், அறிவியல் மனோபாவத்துடன் எந்த மாப்பிள்ளை வீட்டார் கிடைப்பார். இக்காரணத்தை வைத்தே உன்னை, நூறு மாப்பிள்ளைகள் தட்டிக் கழித் திருப்பர். பெரும்பாலான இடங்களில் மாப்பிள்ளைக்கோ, பெண்ணுக் கோ சிறு குறைபாடு இருந்தால், கல்யாணத்திற்கு பின் அதை பொரு ட்படுத்தாமல் விட்டு விடுகின்றனர். பெண்ணின் தலையணை மந்திரம் அல்லது மாப்பிள்ளையின் மூளைச்சலவை குறைபாடுகளை பூசி மெழு கி விடுகிறது.

உன் கணவருக்கு, உன் மீது கொள்ளைப் பிரியம் என எழுதியிருக் கிறாய்; ஆனால், அவர் விவாகரத்து கேட்டு மனு செய்திருக்கிறார். உன் கணவர் ரெண்டும் கெட் டானாக இருக்கிறார். அவர் உறுதியாக இருந்தால், உன க்கெதிரான பிரசாரங் கள் நம, நமத்துப் போயிருக்கும். உன் கணவர் ராணுவத் தில் பணிபுரிவதால் உனக் கும், அவருக்கும் தகவல் தொடர்பு முழுமையாக இல்லை.
உன் கண் பிரச்னையை உன் வீட்டார் மறைத்திருந்தாலும், நீ திரு மணத்திற்கு முந்தைய போன் பேச்சுகளில் உண்மையை கூறியிரு க்கிறாய்.

உன் கண் நோய் பற்றி மருத்துவ அறிக்கை எப்படி கிடைத்தாலும், அதை மட்டும் காரணமாக வைத்து குடும்ப நல நீதிமன்றம் உனக்கும், உன் கணவனுக்கும் விவாகரத்து தந்து விடாது.
நீதிமன்றத்தில் மனு செய்து நீயும், உன் கணவரும் ஒரு சேர ஒரு கண் மருத்துவரிடம் ஆலோசனை பெற வழி செய். உன் பெற்றோர், ஈகோ பார்க்காமல் இறங்கி வந்து பேசி, உன் கணவரின் மனதை மாற்ற வேண் டும்.
பிரச்னைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். நீ உன் கண் நோய் கூடாமல் மருந்துகள் தொடர்ந்து எடு. ஸ்டெம்செல் தெரபியில் மரபியல் குறை தொடராத ஆரோக்கிய குழந்தையை பெற்றெடுக்கலாம்.
தொடர்ந்து சாத்வீகமாய் போராடு. விரைவில் கணவனோடு சேர்வாய். ஆணொன்றும், பெண் ணொன்றும் பெறுவாய்; வாழ்த்துக்கள்!