Home ஜல்சா திருமணத்திற்கு காதலி மறுப்பு; மர்ம உறுப்பை அறுத்துக் கொண்ட காதலன்!!

திருமணத்திற்கு காதலி மறுப்பு; மர்ம உறுப்பை அறுத்துக் கொண்ட காதலன்!!

36

picபஞ்சாப் மாநிலம் பதன்கோட் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலி, தன்னை திருமணம் செய்து மறுத்த காரணத்தால், தனது மர்ம உறுப்பை அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள சுந்தர்நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார். திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று அந்தப் பெண், காதலனுக்கு கட்டளை போட்டு வந்தார். இந்நிலையில், தனது பெற்றோரைப் பிரிந்து, அவர்களது சம்மதத்துடன், வாடகை வீட்டில் அந்தப் பெண்ணுடன் அவர் வசித்து வந்தார். அப்போதும், அந்தப் பெண் தொடர்ந்து சொந்த வீடு வாங்க காதலனை வலியுறுத்தி வந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனது ஆணுறுப்பை அறுத்துக் கொண்டார். ரத்த வெள்ளத்தில் இருந்த அவரைப் பார்த்த அவரது வீட்டினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஏற்கனவே இவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து செய்துள்ளார். விவாகரத்தாகி மூன்று மாதங்கள்தான் ஆகிறது. இந்நிலையில், வேறு ஒரு திருமணம் செய்து கொள்ள இருந்தவருக்கு இந்த கதி நேர்ந்துள்ளது.