Home ஜல்சா காதலுக்காக ஆணாக மாறிய கேரளா பெண் ஏமாற்றிய காதலி

காதலுக்காக ஆணாக மாறிய கேரளா பெண் ஏமாற்றிய காதலி

86

ஓரின காதல் உறவு:தன் காதலுக்காக அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறிய பெண்ணை அவரது காதலி விட்டுச்சென்றுவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அர்ச்சனா ராய் என்ற பெண் தனியார் நிறுவனம் ஒன்றி பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு பணிபுரியும் மற்றொரு பெண்ணுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இருப்பினும் இரண்டு பேரும் பெண் என்பதால் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் ஆலோசித்து ஒரு முடிவிற்கு வந்துள்ளனர். அதன்படி, அர்ச்சானா அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறுவதாக முடிவு செய்துள்ளார். அதன்பின்னர் திருமணம் செய்துகொண்டு இருவரும் இறுதிவரை வாழலாம் என முடிவெடுத்துள்ளனர். இந்த முடிவிற்கு அர்ச்சனாவின் காதலியும் சம்மதித்து, இறுதிவரை இருப்பேன் என வாக்குறுதி அளித்ததாக அர்ச்சானா கூறியுள்ளார். 

இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு அர்ச்சானா ஆணாக மாறியுள்ளார். அத்துடன் தனது பெயரை திபு எனவும் மாற்றிக்கொண்டார். இதைத்தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. 

ஆனால் சில காலம் சென்றதும் கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டு, தன்னை தனிமையில் தவிக்கவிட்டு தனது காதலி பிரிந்து சென்றுவிட்டதாக திபு குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் தான் ஆணாக மாறுவதற்கு முன்னர் தனது காதலியுடன் தொலைபேசி மற்றும் வாட்ஸ் அப் மூலம் நடத்திய உரையாடல்களை அவர் சாட்சியாக காண்பிடித்துள்ளார்.

ஆனால் பிரிந்து சென்ற காதலி திபுவிற்கு எதிராக காவல்நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார். இதனால் தான் வருத்தமடைந்துள்ளதாக திபு கூறியுள்ளார். இருப்பினும் தான் ஆணாகவே வாழ முடிவு செய்துள்ளதாகவும், தனது வாழ்வை கதையாக எழுதவுள்ளதாகவும் திபு கூறியுள்ளார். 

ஏனென்றால் தன்னைப் போன்று யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அதை எழுதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது சோகங்களை மறந்து வாழ முயற்சிக்கப்போவதாகவும், சொன்னதை மறந்து பிரிந்து சென்ற தனது காதலி ஒருநாள் கண்டிப்பாக புரிந்துகொண்டு திரும்பி வருவார் என்ற நம்பிக்கைவுள்ளதாகவும் திபு கூறியுள்ளார்.