Home உறவு-காதல் நீங்கள் காதல் தோல்வியை சந்தித்த நபரா ? இது உங்களுக்கு

நீங்கள் காதல் தோல்வியை சந்தித்த நபரா ? இது உங்களுக்கு

178

காதல் உறவு:காதல் தோல்வியில் விடுபடுவது என்பது இலகுவான விடயம் அல்ல. அந்த பிரிவு நமது வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடும்.

அதில் இருந்து விடுபடுவது எப்படி?

ஒருவரின் சிந்தனை இருந்தால், எதிலுமே கவனம் செலுத்த முடியாது.
மனம் அலைப்பாய்ந்து கொண்டிருக்கும்.
உயிரினும் மேலாக நேசித்தவர்களின் பிரிவு வெறுமையை ஏற்படுத்தும்.
அவருக்கான இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது.
இந்த வாழ்க்கை முடிந்து விட்டது என்றே தோன்றும்.
இந்த உணர்வு பெரும் இரணத்தை தரும்.

முதலில்,

பிரிவிற்கான காரணத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
அதை ஏற்று கொள்ளும் பக்குவத்தை அடைய வேண்டும்.
சிறிது கால அவகாசம் தேவைப்படும்.
நிதானமாக சிந்திக்க வேண்டும்.

துயரில்லாத பிரிவில்லை அதனால் அதனை கடக்க என்ன செய்யலாம்?

முதல் வழி

உறவை பற்றியும், வேதனை பற்றியும் பிறரிடம் பேசுவதால் பயன் இல்லை.
மேலும் உங்களை பலவீனமாக்கும்.
பிரிவுக்கு பின்னான காரணங்கள் என்ன? என்று யோசியுங்கள்.
இந்த முடிவு சரியானதா இல்லையா? என்று யோசியுங்கள்.
உடைந்து போகும் நேரத்தில் உங்களிடம் நீங்களே பேசிக் கொள்ளுங்கள்.
மனதை ஆற்றுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.
உங்கள் நண்பர்களிடத்தில், பேசுங்கள்
உங்கள் உறவை பற்றி கண்ணோட்டம் என்ன என அறிந்து கொள்ளுங்கள்.
எது உங்களுக்கு சரியானதாக கருதுகிறார்கள் என்பதை நண்பர்களிடம் கேளுங்கள்
இந்த ஆலோசனை நிச்சயம் உங்களுக்கு உதவும்.
மேலும், உங்களுக்கு ஒரு தெளிவை பிறப்பித்து கொள்ளும்
அந்த துயரில் இருந்து மீண்டு வர உதவி செய்யும்.

இரண்டாவது முறை

பெரும்பகுதியை உங்கள் துணையுடன் இருந்தே வீணாகியிருக்கும்.
உணவு, உறக்கம், வேலை, நண்பர்கள் என எல்லாவற்றையும் மறந்திருப்பீர்கள்.
காதலில் மிதந்து கொண்டிருந்திருப்பீர்கள்.
காதலின் பிரிவுக்கு பின், தற்போது உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்கும்.
அவற்றை நீங்கள் மிகவும் பயனுள்ளதாக்குங்கள்.
வாசிப்பை அதிகரித்து கொள்ளுங்கள்.
நடனம், விளையாட்டு, இசையில் கவனத்தை முழுமையாக செலுத்துங்கள்.
ஆற்றல் முழுவதையும் கற்றலில் பயன்படுத்துங்கள்.
உற்சாகமூட்டும் செயல்களை செய்ய தவற வேண்டாம்.

மூன்றாவது முறை

நண்பர்கள், குடும்பத்துடன் நேரம் செலவழியுங்கள்
நண்பர்கள், குடும்பத்தினருடனான நேரங்களை இழந்திருக்கக்கூடும்.
அவற்றை மீட்டெடுக்க இந்த பிரிவை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
உங்களை நேசிப்பவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.
உங்கள் மனநிலை முன்னேற்றம் அடையும்.
அவர்களும் மகிழ்ந்திருப்பார்கள்.
உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றலாம்.
காதல் தோல்வி என்றால், ஒரே இடத்தில் படுத்து, கொள்ள வேண்டாம்.
ஏதோ சிந்தனைகளை அசைப்போட்டு கொண்டிருக்க வேண்டாம்.
உங்களை மகிழ்விப்பவை அனைத்திலும் ஈடுபடலாம்.