Home உறவு-காதல் காமம் Vs காதல்

காமம் Vs காதல்

41

111கவிதைகள், ரோஜாமலர், பரிசுகள் போன்றவற்றை பயன்படுத்தி நீங்கள் காதலை வெளிப்படுத்தினாலும், கண்கள் வெளிப்படுத்தும் காதலே அதிக உணர்வுகள் நிறைந்தது.

காதலர்களே, இதனை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள், கண்களால் காதல் மொழி பேசி உங்கள் காதலியை கவரும் நீங்கள், அதில் காமம் கலந்துவிட்டால், உங்களை அறியாமலேயே வெட்ட வெளிச்சமாக காட்டிக்கொடுத்துவிடாதீர்கள்.

காதல் என்றால் “இரு இதயங்கள் இணைவது”, காமம் என்றால் “இரு உடல்கள் உறவால் இணைவது” என்று அர்த்தம் கூறப்படுகிறது.

இன்னும் சொல்லப்போனால், நினைக்கும்போதெல்லாம் இன்பம் தருவது காமம் என்றால், அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரம் போன்று உங்களுக்கு தீராத இன்பம் தருவது காதல்.

ஆகவே, காதலில் அளவான காமத்தை கலந்து கொண்டாடுங்கள், பல வருடங்கள் காதலித்துக்கொண்டிருப்பவர்கள் மனதில் காமம் எழ சந்தர்ப்ப சூழ்நிலைகளும் ஒரு வகையில் காரணமாக அமைகின்றது.

உதாரணத்திற்கு காதலர்கள் கடற்கரைக்கு செல்கையில், அங்கிருக்கும் மற்றொரு காதலர்கள் முத்தமழையில் நனைந்துகொண்டிருப்பார்கள், அதனைப்பார்த்த அடுத்த நொடியில் இவர்கள் இருவரின் தொண்டைக்குள் இருந்து வார்தைகள் வராது, மாறாக வெவ்வேறு திசையில் பார்வைகளை சுழறவிட்டுக்கொண்டு மவுனப்போராட்டம் நடத்துவார்கள்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் தான் காதலுக்குள் காமம் சற்று எட்டிப்பார்க்கிறது, அடுத்ததாக காதலி அணியும் ஆடையும் மிகவும் முக்கியமான ஒன்று, பெண்களே நீங்கள் குடும்பபாங்காக ஆடை அணிந்து கொண்டிருப்பீர்கள், ஒரு நாள் திடீரென கொஞ்சம் மொடனாக புறப்பட்டு காதலனை பார்க்க சொல்வீர்கள்,

அந்த ஆடையில் உங்களை பார்த்த காதலன், நன்றாக இருக்கிறது என்று சொன்னாலும், கண்கள் அங்கும் இங்கும் அலைபாயும். ஆண்கள் பார்க்கும் பார்வையில், காதல் மட்டும் தெரிந்தால் போதும், காமப்பார்வை கூடாது என்று பதில் பார்வையினை நீங்கள் அவர்கள் மீது தொடுக்க வேண்டும்.

உங்கள் காதலியிடமோ, காதலனிடமோ பேசும்போது கூட நாகரீகமாக பேசுங்கள், குறிப்பிட்ட அளவுவரை ஆபாச வார்தைகள் நிறைந்த வசனங்களை பயன்படுத்தாதீர்கள், ஏனெனில் இதுபோன்ற வசனங்கள் உங்கள் காதலுக்கு நீண்ட காலம் சந்தோஷம் தரப்போவதில்லை, மாறாக கவிதைகளை பயன்படுத்துங்கள், ஏனெனில் நாளடைவில் உங்கள் காதலில் பிரிவு ஏற்பட்டால் கூட, அன்று நீங்கள் பயன்படுத்திய காதல்மொழியே, உங்கள் காதல் சங்கமிக்க ஒரு வகையில் காரணமாக அமையும்.

மொத்தத்தில், அன்பும் காதலும் நிறைந்த காதலை கொண்டாடி மகிழுங்கள்.