Home இரகசியகேள்வி-பதில் பாலியல் கேள்விபதில் வாசகர்களுக்கு

பாலியல் கேள்விபதில் வாசகர்களுக்கு

41

எனக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. என் வயது, 26; கணவரின் வயது, 28. ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவர் ஒரு கம்பெனியில் நல்ல வேலையில் உள்ளார். பார்க்க அழகு; அன்பான வர். நானும் சுமாராக இருப்பேன்.
என் பிரச்னை என்னவென்றால், என் குடும்பம் ஏழ்மையானது. ஒரு அண்ணன், திருமணமாகி மனை வியுடன் தனியே சென்று விட்டார். நான், என் மாமனார், மாமியார், கணவர், குழந்தை, மாமியாரின் அம்மா – இது என் குடும்பம். ஆரம்பம் முதற்கொண்டே
என் தாய், தந்தையரை என் கணவருக்கு பிடிக்காது. அவர்கள், என் னிடம் போனில் கூப்பிட்டால்கூட என் கணவர், நான் வெளியில் இருக்கிறே ன் என்று பொய் சொல்வார். இல்லை யென்றால் போனை, ‘கட்’ செய்துவிடு வார். என்அம்மா வீட்டிற்குசென்று திரு ம்பும்போது, ‘போய்வருகிறேன்..’ என்று கூட சொல்வது கிடையாது. நான்தான் சொல்ல வேண்டும். குழந்தையை அவ ர்கள் தொடக்கூடாது. சமீபத்தில், ஒரு விருந்தில் என் குழந்தையை என் அம் மா ஆசையாய் தூக்கியபோது, அனை வரின் முன்னிலையில், முகத்தில் அ றைந்தாற்போல், ‘குழந்தையை கீழே விடுங்கள்…’ என்று கூறி விட்டார் என் கணவர். என் அம்மாவிற்கு கண்ணீரே வந்துவிட்டது. இத்தனைக்கும் என் குழந்தையை வளர்த்தவர் அவர்தான். என் அம்மா, அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லை என்றால்கூட நான் பார்க்கப்போகக் கூடாது; என் வீட்டிற்கோ, உறவினர் வீடுகளு க்கோ தனியே செல்லக்கூடாது. போ னில் யாருடனும் பேசக்கூடாது. இப்ப டி சொல்லிக் கொண்டே போகலாம். நானும் பொறுமையாக இருந்து விட் டேன்; என்னால்முடியவில்லை. அன் பா, அழுது சண்டையிட்டும் சொல்லிப் பார்த்து விட்டேன்; திருந்துவதாக இல் லை. என்னைவிட்டு ஒரு நிமிடம் கூட பிரிந்து இருக்க மாட்டார் என் கணவர். என் மேல் அவ் வளவு காதல். எனக்கும் என் கணவர் என்றால் உயிர். என் குடும்பம் கூலி வேலை செய்யும் குடும்பம். என் கணவரிடம் பத்து பைசா கூட எதிர்பார்க்க மாட்டார் கள். கூலிவேலை செய்து, பிளஸ்2 வரை படிக்க வைத்தனர். காதல் வலையில் வீ ழ்ந்து, பெற்றோர் சம்மதத்துடன், இவரை கரம் பிடித்தேன். நான் எதிலும் சுதந்திரம் கேட்கவில் லை. என் தாய், தந்தைக்கு நான் ஒரு மகளாக செய்யும் கடமைக ளை செய்யவிட்டால் போதும். அவர்களி டம் அன்பாய் ஒரு வார்த்தை போனில் பேசினால் கூட நிம்மதி கிடை த்துவிடும். அவரின்தாய், தந்தைக்கு நான் இன்று வரை ஒரு மகளா கத் தான் இருந்திருக்கிறேன்; இது அவருக்கே தெரியும். என் மேல் கு ற்றம் இல்லை அம்மா. இப்படி பெற் றவர்களை நோகடித்து, நமக்கு ஒரு இன்பமான வாழ்க்கை தே வையா என்று, பல சமயம் நினைக் கிறேன். இத னால், என் கணவரை பிரிந்துவிடலாமா என, சில சமயம் தோன்றுகி றது. சரியான முடிவு சொல்லுங்கள் அம்மா.
– இப்படி
உங்கள் மகள்.

வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்து கொண்ட உன் கணவ னுக்கு, உன் பெற்றோரின் வறுமை இளப்பமாக தோன்றுகிறது. எல் லாவற்றையும் மீறி, தான், தம் குடு ம்பம் நன்றாக இருக்க வேண்டும். அடுத்தவர் குடும்பத்துடன் ஒட்டுத லோ, உறவோ தேவையில்லை என்கிற உன் கணவனின் சுயநலமே, உன்னை உன் வீட்டு மனிதர்க ளுடன் ஒட்ட விடாததற்கு காரணம். சில ஆண்களுக்கு, மாமனார் தேவையில்லை; மாமனார் பெற்ற மகள் தேவை.
தனியே போனில் உன்னை உன் பெற்றோரி டம் உன் கணவன் பேச அனுமதிக்காததற் கான காரணம், ஒன்று, கணவனின் குடு ம்பத்தினர்பற்றிய குறைகளை உன் பெற்றோரிடம் கூறிவிடுவாயோ என்ற பயம். இரண்டு – தனியே மணிக்கணக்கில் பேசி, பெற்றோர் மீ தான பாசத்தை பலமடங்கு பெருக்கிக்கொள்வாயோ என்ற சுய நலம் .
பெற்று, வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்கி, பெரும் செலவு செய்து திருமணம் செய்து வைக்கும் பெ ற்றோரை, புகுந்த வீட்டில் காலடி வைத்ததும், லகுவாக மறந்து விடுகின்றனர் சில பெண்கள். தந் தைக்கு, ‘ஹார்ட் அட்டாக்’ என்ற செய்தி வந்தாலும், மரணச் செய்தி வரட்டும் ஒரேயடியாக போய் கொள்ளலாம் என, இரும்பு மனதுடன் இருக்கும் மகள்களும் தமிழகத்தில் உண்டு. பெற்ற தாயை சமைய ல்காரியாகவும், ஆயாவாகவும் பாவிக்கும் பெண்களும் இருக்கின் றனர். அவர்களுக்கிடையே நீ அபூர் வமான பெண் தான்.
பெற்றோரின் மீது பாசத்தைப் பொ ழிய அனுமதிக்காத கணவனுடன், இன்ப வாழ்க்கை தேவையா என்ற குற்ற உணர்வில் மருகியிருக்கிறா ய். இந்த ஒரு பிரச்னைக்காக, கணவனை பிரிய நினைப்பது தவறு.
சிறிது சுயநலத்துடன் உன் பெற்றோர் மீதான அன்பை கொஞ்சமாக சுருக்கிக்கொள். நீ மாமனார், மாமியாரி டம் தனியேபேசி, பெற்றோருடன் மாதம் இருமுறையாவது பேசிக்கொள்ள கண வனை சம்மதிக்க வை. கணவன் நல்ல மூடில் இருக்கும்போது, உன் கணவனு க்கு அவனது பெற்றோர் எவ்வளவு முக் கியமோ, அவ்வளவு முக்கியம் உனக்கு உன் பெற்றோர், என்பதை விளக்கு.
இதற்கும் உன் கணவன், கணவன் வீட்டார் ஒத்துவரவில்லை என் றால், இறுகிய மனதுடன் கணவ ன் விதித்த தடைகளை முழுமை யாக பின்பற்று. நீ, உன் கணவ னை விட்டு பிரிந்து வந்து, தங்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என, உன் பெற்றோர் கனவிலும் விரும்ப மாட்டார்கள். எல்லா உற வுகளும், பிரிவதற்கே என்ற தத்து வார்த்த நிலைக்கு என்றோ வந்தி ருப்பர்.
அனைத்தையும்மீறி, நீ உன் பெற்றோருடன் பேசவேண்டும் என்றால், ரகசியமாக ஒரு கைபேசி வாங்கிக் கொண்டு பேசு. பெற்றோ ரை தலைமுழுகிவிட்டதுபோல நடித்தபடி, அவர்களிடம் அன்புபாராட்டு.
எனக்கு, வயது: 30. திருமணமாகி, 10 வருட ங்கள் ஆகிறது. எனக்கு, இரண்டு குழந்தை கள் உள்ளனர். என் கணவர் தங்கமான வர். என் மேல் உயிரையே வைத்திருக் கிறார்; நானும் அப்படித் தான்; அவர் மேல் உயிரையே வைத்திருக் கிறேன். கடந்த மூன்றா ண்டுகளாக, ஒரு ஜெரா க்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறேன்.
ஆறு மாதத்திற்கு முன், என் கடை முதலாளி, என்னை பார்த்து, “உன் னை எனக்கு பிடித்திருக்கிறது. தவறாக நினைக்க வேண்டாம். உன் அன்புதான் எனக்கு வேண்டும். மற்றபடி, நீ உன் குடும்பத்தை பார்த் துக் கொள், நான், என் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன். ஆனா ல், உன் அன்பு எனக்கு கண்டிப்பாக வேண்டும்…’ என்றார்; எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
ஆனால், என் மனமும் அவரை விரும்ப ஆரம்பித்தது. அவருக்கு திருமணம் ஆகி விட்டது;
வயது 44 ஆகிறது. அவருக்கும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆ னால், அவரும் என் மேல் மிகவும் அன்பாக இருக்கிறார். என் வீட் டுக்காரர் இல்லாத நேரத்தில், மொபைலில் அடிக்கடி பேசிக் கொள் வோம். ஆனால், கடையில் அதிகமாக பேச மாட்டோம். இன்று வரை , அவரும் என்னிடம் கண்ணியமாகவும், மரியாதையாகவும் நடந்து கொள்கிறார்.
இப்போதெல்லாம் அவரை பார்க்காமல், பேசாமல் என்னால் இருக்க முடிவதில்லை. அவரின் நினைவுகள், என்னுள் அதிகமாகி விட்டது. அவரும் அப்படித்தான் சொல்கிறார். நான் செய்வது தவறா என்று தெரியவில்லை. ஆனால், அவரை பார்க்காமல், பேசாமல் என்னால் இருக்க முடியவில்லை. நான் என்ன செய்வது என்று தெரிய வில்லை.
நான் தொடர்ந்து அவருடன் பழகலாமா? இதனால், என் வாழ்க்கை க்கு ஏதாவது பிரச்னை வருமா? தவறு என்று தெரிகிறது; ஆனால், மறக்க முடியவில்லை. நான் கோபமாக பார்த்தால் கூட, அவர் தாங் க மாட்டார். என்ன செய்வது? நீங்கள்தான் எனக்கு ஒரு நல்ல பதிலையும், என் மனதிற்கு ஒரு தெளிவையும் தர வேண்டும்.
— இப்படிக்கு,
உங்கள் மகளுக்கு —
நோய் தொற்றிய அறிகுறி, லேசாக தெரிய ஆரம்பித்திருக்கும் வே ளையில், மருத்துவரை அணுகியிருக்கிறாய். உன்னை தொற்றி இரு க்கும் நோயின் பெயர் – கள்ள உறவு. அது, மேலும் தீவிரமாக பரவி, உன்னை இரையெடுக்க, சில பல நாட்களாகலாம். இப்போதே சிகிச் சை மேற்கொண்டு குணமாக பார்.
தவறான உறவில் ஈடுபடும் எல்லா பெண்களும், தாங்கள் பழகும் ஆண்களை பற்றி கூறும் போது, “அவர் மாதிரி நல்லவரை, இந்த உல கத்தில் பார்க்க முடியாது…’ என்பர் அல்லது “என்கிட்ட மதிப்பும், மரி யாதையுமா பேசுவார்…’ என்பர்.
– இப்போது, உன் விஷயத்துக்கு வருவோம். நீ ஒரு ஜெராக்ஸ் கடையில் வேலை பார்க்கிறாய். மாதம், 2 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவார். உன் அழகை பார்த்து தூண்டில் போடுகிறான் உன் முதலா ளி. உன் அன்புதான் எனக்கு வேண்டும் என்கிறான் அல்லவா? அதன் உண்மையான அர்த்தம், “உன் உடம்பு தான் எனக்கு வேண்டும்…’ என் று அர்த்தம்.
இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா செல்லம்?
மொபைல் போன், ஜெராக்ஸ் கடை முதலாளி வாங்கிக் கொடுத்தது என்றால், திருப்பிக்கொடுத்துவிடு. உன் கைபேசி என்றால், முதலா ளி எண்ணை அழித்து விடு; புதிய எண்ணுக்கு மாறி விடு. வேலை யிலிருந்து தாமதிக்காமல் நின்று விடு. தையல் கற்று, லேடீஸ் டைலரிங் கடை வை. குழந்தைகளுடனும், கணவனுடனும் உட லால், மனதால் நெருங்கு. இரு குழந்தைகளுக்கு தாயான உனக்கு, கள்ள உறவு, ரொமான்ஸ் தேவைதானா என கேட்டு, உன் கன்ன ங்களில், நாலு அறை கொடுத்துக் கொள்.
வாரா வாரம் கோவிலுக்கு போய் வா. கெட்டவழிக்கு இழுக்கும் தோழியரிடம் இருந்து விலகு. மொபைல் போன் வைத்துக் கொள் ளாதே. பணத்துக்கு பணம், சபலத்துக்கு சபலம் மிச்சமாகும்.
திருமண வட்டத்திற்கு வெளியே நிற்கும் எல்லா ஆண்களும் விஷப் பாம்புகளே. கொத்தி உயிரெடுப்பது அவைகளின் பிறவிக் குணம். “அம்மா… நான் பழகும் சாமியார் பாம்பு, பிரண்ட்லி பாம்பு, ரொம்ப ரொம்ப மரியாதை பாம்பு, அதை மடியில் போட்டு கொஞ்சினால் என்னம்மா ஆகும்?’ என்று பச்சை பிள்ளை போல் கேட்காதே. கொத் தும்… உன்னை மட்டுமல்ல, உன்னை சேர்ந்தோரையும் உயிரெடு க்கும்.