Home சமையல் குறிப்புகள் சூப்பரான காரைக்குடி நண்டு மசாலா

சூப்பரான காரைக்குடி நண்டு மசாலா

24

தேவையான பொருட்கள் :

நண்டு – 1 கிலோ
புளிக்கரைசல் – 1 கப்
பட்டை – 2
பிரியாணி இலை -2
சோம்பு – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 1/2 டீஸ்பூன்
வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு :

துருவிய தேங்காய் – அரை கப்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கசகசா – 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
முந்திரி – 3
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

* நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மசாலாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, மிளகு, சீரகம், கசகசா, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் அடுத்து நண்டு சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பின் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நண்டுடன் பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, சில நிமிடங்கள் மூடி போட்டு வேக விடவும்.

* நண்டு ஓரளவு வெந்த பின்பு அதில் புளிக் கரைசல் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.