Home சூடான செய்திகள் கணவனுடன் செக்ஸ் குறித்து தோழிகளுடன் உரையாடும் இன்றைய பெண்கள்

கணவனுடன் செக்ஸ் குறித்து தோழிகளுடன் உரையாடும் இன்றைய பெண்கள்

101

பெண்கள் தங்களது செக்ஸ் குறித்த விசயங்களை கணவரை விட அதிகமாக தங்கள் தோழிகளிடமே அதிகம் பகிர்ந்து கொள்கின்றனர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

பொதுவாக ஒரு விசயத்தை தங்களது துணையிடம் விவாதித்து அது குறித்த விவரங்களை பரிமாறி கொள்வது வழக்கமான ஒன்று. ஆனால், பெண்கள் இந்த விசயத்தில் வேறுபடுகின்றனர்.

இது குறித்து ஆய்வு முடிவு வெளியிட்டுள்ள தகவலில், மற்ற பெண்களுடன் இருக்கும்போது பல விசயங்களை பெண்கள் பகிர்ந்து கொள்கின்றனர். தங்களது தோழிகளுடன் இரவு வெளியே செல்லும் பெண்கள், அவர்களிடம் பல விசயங்களை பகிர்ந்து கொள்வதுடன் அதிகமாக செக்ஸ் குறித்த விசயத்தை ஆர்வமுடன் பேசுகின்றனர்.

இவ்வகையை சேர்ந்த பெண்கள் 34 சதவீதத்தினர் உள்ளனர் என ஆய்வு தெரிவித்துள்ளது.

ஆனால், 16 சதவீத பெண்களே தங்கள் கணவருடன் இரவு நேரத்தில் வெளியே செல்கையில் செக்ஸ் தொடர்பான பேச்சை தொடங்குகின்றனர். இரவு கொண்டாட்டத்தில் இருக்கும் பெண்களில் 57 சதவீதத்தினர் குடும்பம் குறித்த விவரங்களை அலசி ஆராய்கின்றனர் என்றும் 54 சதவீதத்தினர் தங்களது விடுமுறை கொண்டாட்டங்கள் குறித்து பேசுகின்றனர் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆண்கள் குறித்த பேச்சு

இதில் பெரும்பாலும் திருமணம் குறித்த பேச்சு தவிர்க்கப்படுகிறது. பொதுவாக பெண்கள் ஒன்று சேர்ந்து விட்டால் அவர்கள் பல விசயங்களையும் அலச ஆரம்பித்து விடுவார்கள்.

அந்த வரிசையில் பெண்களின் பேச்சில் முதல் இடம் வகிப்பது ஆண்கள் குறித்த பேச்சுதான். அவர்களில் 64 சதவீதத்தினர் தங்களது கணவர்மார்களை குறித்து பேசுவதாக ஒப்பு கொண்டுள்ளனர். மேலும், பாதிபேர் மற்றவர்களின் உறவுமுறைகள் குறித்த விசயங்களை ஆர்வமுடன் பேசுவதாக கூறியுள்ளனர்.

12 சதவீதம் பேர் பொதுவான விசயங்கள் குறித்து விவாதிப்பதாக தெரிவித்துள்ளனர். பெண்கள் இரவு நேரத்தில் தோழிகளுடன் வெளியே செல்வதற்காக அதிகமான முயற்சிகளை எடுக்கின்றனர்.

3ல் ஒருவர் தோழிகளுடன் வெளியே சென்று புது ஆடைகளை வாங்கி உடுத்துகின்றனர். 5ல் ஒருவர் தங்கள் கணவருடன் மாலை நேரத்தில் வெளியே செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

தங்களை அழகுபடுத்தி கொள்வதற்காக 50 நிமிடங்களை அவர்கள் அர்ப்பணிக்கின்றனர். 9 சதவீதத்தினர் மெல்லிய உள்ளாடைகளை அணிந்து கொள்கின்றனர் என்று ஆய்வு தெரிவிக்கின்றது.

இந்த ஆய்வு குறித்து அதன் செய்தி தொடர்பாளர் லெஸ்லி கிளிப்போர்டு என்பவர் கூறுகையில், பெண்கள் இரவு பொழுதை தங்களின் நெருங்கிய நண்பர்களுடன் மிக மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர். மிக சிறப்புடன் பொழுதை கழிப்பதற்கு தேவையான அனைத்து விசயங்களிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

அதற்கான தலைமை ஏற்று நடத்தல், தயார்படுத்துதல், ஒருங்கமைத்தல் மற்றும் மகிழ்ச்சியுடன் இருத்தல் ஆகிய அனைத்தையும் அது கொண்டிருக்கிறது என கூறுவதுடன் ஆண்கள் தங்கள் நண்பர்களுடன் இரவு நேரங்களில் வெளியே செல்லும்போது அதிகமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுட்டி காட்டியுள்ளார்.