Home பாலியல் சீரற்ற மாதவிடாய் காரணமும் – தீர்வும்

சீரற்ற மாதவிடாய் காரணமும் – தீர்வும்

34

இன்றைய காலகட்டத்தில் நூற்றில் 80 பெண்களுக்குக் காலம் தவறிய மாதவிடாய் (Irregular periods) பிரச்சனை இருக்கிறது. நமது கர்ப்பப்பையிலோ அல்லது சினைப்பையிலோ நீர்க்கட்டி (PCOS – Polycystic ovary syndrome), ஹார்மோனின் சம்மற்ற நிலை என்று இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. இந்த ஹார்மோன்களின் சமமற்ற நிலை தான் உடல் எடை அதிகரிப்புக்கு காரணம்.

இதுபோன்ற ஒழுங்கற்ற மாதவிடாயினால், குழந்தை பெறுவதிலும் சிக்கல் வருவதை அதிகமாக இருப்பதை பார்க்கிறோம். நம்முடைய உணவு முறை மாற்றம், லைஃப் ஸ்டைல் சேஞ்ச், மன அழுத்தம் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. சரியான அளவில் புரதச் சத்து, இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவினை எடுத்துக்கொள்ளுதல், உடற்பயிற்சி மற்றும் யோகாவின் மூலமே இந்த ஹார்மோன் சமமற்றநிலையினை சரி செய்து, காலம் தவறும் மாதவிடாய் பிரச்னையை சரிசெய்துவிடலாம்

மாதவிடாய்க்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இதன் விகிதம் சரியாக இருக்க வேண்டும். மற்றவை பற்றி பேசும் முன்பு ஒரு விஷயம். அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஹார்மோனை ரெகுலரைஸ் செய்ய, ஆளி விதைகள் மற்றும் சோம்பினை சரிவிகிதத்தில் எடுத்து, அதில் சிறிது ஓம நீரினை விட்டு, உண்ணலாம்.

ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை, ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து, தேன் கலந்து குடிக்கலாம். இதில் Anti-inflammatory, Anti-diabetic, ஈஸ்ட்ரோஜன் போன்றவை இருப்பதால், நமது உடலிலும் கர்ப்பப்பையிலும்இருக்கும் அழுக்குகளை நீக்கப் பயன்படுகிறது. அதனால், அடுத்த மாதவிடாய்க்கு தேவையான எண்டோமெட்ரியம் ஃபார்மேஷன் சரியாக நடக்கும்.

எள்ளுருண்டை சாப்பிடலாம். அதிலும், கருப்பு எள்ளுருண்டை மிகவும் நல்லது. இதில் இருக்கும் நல்ல கொழுப்பு, கால்சியம், மெக்னீஷியம் போன்றவை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை குறைக்கவும், எலும்பை உறுதி செய்யவும் பயன்படும். மேலும், இது உடல் எடையையும் சரி செய்யும்.

மருத்துவர் தீபா – Naturopathyகற்றாழையை, தேங்காய்ப் பால், பனங்கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டால், கொழுப்பின் அளவைக் குறைக்கும். மேலும், ஓவேரியன் ஸ்ட்ரெஸ் லெவலையும் சரிசெய்யும்.

ஒரு நெல்லிக்காய் 10 ஆப்பிள்களுக்குச் சமம். அதில், விட்டமின் சி இருப்பதால், அயர்ன் அப்சார்ப்ஷனுக்கு உதவும். வெறுமனே அயர்ன் அதிகமாக இருக்கும் உணவினை எடுத்துக்கொள்வதாலே உடம்பில் இரும்புச் சத்து அதிகமாகிவிடாது. விட்டமின் சி உணவுதான் அப்சார்ப்ஷனைக் கொடுக்கும். எனவே, நெல்லிக்கனி அவசியம்.

நெல்லிக்காயை முதல் நாள் தேனில் ஊறவைத்து, மறுநாள் உண்ணலாம். ஆனால், கடைகளில் விற்கும் நெல்லிக்காய் கேண்டியை வாங்கிச் சாப்பிடாதீர்கள்.

வெந்தயம் சாப்பிடலாம். அதில், குளூகோஸ் மெட்டபலிசம் தன்மை உள்ளது. நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால், ஹார்மோனை ரெகுலேட் செய்யப் பயன்படும்.

மாதுளைப்பழமே நம் கர்ப்பப்பை வடிவத்தில்தான் இருக்கும். அது, பீரியட்ஸை ரெகுலரைஸ் செய்ய பெரிய அளவில் உதவும். பீட்ரூட் மற்றும் கேரட்டை இணைத்து, சாப்பிடலாம்.

சிலருக்கு பீரியட்ஸ் மூன்று-நான்கு மாதங்கள் கழித்து வரும் போது, இயல்பிற்கு மீறியதாக ஏழு நாள்களுக்கு மேல் கூட அதிக ஃப்ளோ இருக்கும். கட்டிகட்டியாக இரத்தப்போக்கு இருக்கும். அவர்கள்,கருஞ்சீரகம் சாப்பிட வேண்டாம். அவர்கள் வாழைப்பூவை வறுத்து தயிருடன் சேர்த்துச் சாப்பிடலாம். பொட்டுக்கடலையை நெய்யுடன் வறுத்து, உலர்ந்த திராட்சையுடன் எடுத்துக்கொண்டால், அது அதிகப்படியான ஃப்ளோவினை சரி செய்யும்.

ஆனால், சீரற்ற மாதவிடாய் இருப்பவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக கருஞ்சீரகத்தை எடுத்துக்கொண்டு வந்தால், அந்தப் பிரச்சனையை சரி செய்யும்.

அடுத்ததாக, சிலருக்கு மாதவிடாய் சரியாக வரும். ஆனால், சரியான ஃப்ளோ இருக்காது. இதனைத் தவிர்க்க இரும்புச் சத்து அதிகமான உணவைச் சாப்பிட வேண்டும். பேரீச்சை, உலர்ந்த திராட்சை, அத்தி,மாதுளை, கருவேப்பிலை ஜூஸ், அகத்திக்கீரை, சுண்டக்காய் ஆகியவற்றை உண்பதன் மூலம் இதனைச் சரி செய்யலாம்.