Home காமசூத்ரா இன்பத்தை அதிகரிக்க பயன்படும் 8 வகை நுணுக்கங்கள்!

இன்பத்தை அதிகரிக்க பயன்படும் 8 வகை நுணுக்கங்கள்!

184

கலவி இன்பத்தை அதிகரிக்கச் செய்ய மகரிஷி பப்ரவ்யாரின் மாணவர்கள் ஆணும், பெண்ணுமாக சேர்ந்து அனுபவிக்கும் இன்பத்தை மொத்தம் எட்டு வகையாகப் பிரித்துள்ளனர். அவை ஒவ்வொன்றும் காம இன்பத்தை பன்மடங்கு அதிகாpப்பதாகக் கூறப்படுகிறது. அவை….
தழுவுதல், முத்தமிடுதல், நகக்குறி பதித்தல், கலவி புரிதல், மாற்றுப்புணர்ச்சி, சும்பனம், பல்குறி பதித்தல், தட்டுதல் அழுத்துதல்.

இந்த எட்டு வகையில் ஒவ்வொன்றும் எட்டு வகைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவற்றைப் பெருக்கினால் மொத்தம் சதுஸ் சஷ்டி என்ற 64 கலை என்று கூறப்படுகிறது. இதில் தழுவுதல் என்பது சேர்க்கையில் ஈடுபட ஒருவரையொருவர் தயார் படுத்த வேண்டி, அதன் தொடக்கத்தில் செய்யப்படுவது. இதை ஆலிங்கனம் எனக் கூறுகிறhர்கள். இந்த ஆலிங்கனத்தை மேலும் இரண்டு வகையாகப் பிரிக்கிறhர்கள்.
அதாவது,
இதற்கு அந்த விதமான இன்பத்தையே அறியாத காதலர்களைக் கட்டித்தழுவுதல் என்பது ஒரு வகை,. மற்றெhன்று,. ஏற்கனவே அந்த வித இன்பத்தை அனுபவிரத்தவர்களைக் கட்டித் தழுவுவது. இதிலும் உட்பிரிவுகள் உண்டு. அதாவது இதற்கு முன் அந்த இன்பத்தை அனுபவித்திராதவர்கள் தழுவல்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவையாவன…

ஸ்பரிசம், அதவாது உடலைத் தொடுதல், அல்லது மென்மையாகத் தீண்டுதல்
வித்தக, அதாவது பெண்ணின் மார்பகங்கள் அழுந்துமாறு தழுவுதல்
உத் க்ருஷ்டக, அதாவது ஒருவரை ஒருவர் உரசிக் கொள்ளும் விதத்தில் தழுவுதல்
மற்றெhரு வகை, பிடிதக, அதாவது ஒருவரை ஒருவர் இறுகத் தழுவுதல்., (இருவருக்கும் இடையில் காற்றுப்புக முடியாத அளவுக்கு அவளைக் காதலன் கட்டித் தழுவினான் என்பது நமது தமிழ்க்கவிஞர்களின் கற்பனை…)

ஆணும், பெண்ணும் திருப்தி அடைவதே செக்சின் நோக்கம். இதில் ஒருவர் திருப்தி அடைந்து மற்றவருக்கு இல்லையென்றhல் அதில் நிறைவு இருக்காது. இதில் முக்கியமாக ஆண் தான் பெண்ணுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும். காரணம், பொதுவாகவே ஆண் பெரும்பாலும் உச்சக்கட்டத்தை விரைவிலே எட்டி விடுகிறhன்.

ஆனால் பெண்ணைப் பொருத்த வரை அப்படி இல்லை. அவளுக்கு வெகு நேரம் பிடிக்கிறது. இது இயற்கையின் நியதி போலும். எனவே ஆண் தான் நிதானமாக ஈடுபட்டு அவளது ஆசையையும் நிறைவேற்ற வேண்டும்.

அதற்கு முக்கியமான விஷயம், முன் விளையாட்டுக்களில் ஈடுபடுவது. அதாவது செக்ஸ் பண்ணும் முன் சிறிது நேரம் பெண்ணைத் தயார் நிலைப்படுத்த வேண்டும். அவளது அங்கங்களில் உணர்ச்சிமிக்க பாகங்களை விரல்களால் தொட்டோ, தடவியோ, தூண்ட வேண்டும்.
அப்போது தான் அவள் உறவுக்கு முழுமையாகத் தயாராக முடியும். இதனால் அவள் விரைவாகத் தயாராவதோடு கலவியிலும் முழு மனதுடன் ஈடுபடுவாள். விரைவாக உச்சக்கட்ட இன்பத்தையும் எட்டுவாள்.

உடலுறவில் பெறப்படும் திருப்தியை 4 வகையாகப் பிhpக்கலாம். அவை…

1) கலவியைப் பற்றியே ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பதால் ஒரு திருப்தி உண்டாகும்

2) அடிக்கடி கலவியில் ஈடுபடுவதால் காம இச்சையானது தணிந்து ஒரு வகைத் திருப்தி கிடைக்கும்

3) மனதிற்குப் பிடித்தவருடன் ஈடுபடுவதால் உருவாகும் ஒரு ஆத்மார்த்தமான திருப்தி

4) தனக்குப் பிடித்தவரை மனதில் எண்ணிக்கொண்டு மற்றவருடன் உடலுறவில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கும் திருப்தி.