Home ஜல்சா சுட்டுப்போட்டாலும் இந்திய ஆண்களால் இந்த 8 விஷயங்களை மாற்றிக் கொள்ள முடியாது!

சுட்டுப்போட்டாலும் இந்திய ஆண்களால் இந்த 8 விஷயங்களை மாற்றிக் கொள்ள முடியாது!

50

captureசில விஷயங்களை என்ன செய்தாலும் மாற்ற முடியாது. பெண்கள் எத்தனை தான் வெளியுலகை கண்டாலும், பெரும்பாலும் இன்றும் அழுது வடியும் சீரியலை தவறாமல் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். இது போல ஆண்களிடமும் பல விஷயங்கள் இருக்கின்றன. இது ஒருவிதமான ஹார்மோன் பிரச்சனையா, இயல்பாகவே ஆண், பெண் இப்படி தான் இருப்பார்களா என தெரியவில்லை. ஆனால், ஆண்களால் இந்த 8 விஷயத்தை அவர்களது வாழ்நாளில் மாற்றிக் கொள்ளவே முடியாது…

பெண்களின் கண்களை பார்த்து பேசுவது! ஆண்களால், பெண்களின் கண்களை பார்த்து பேசுவது கடினம் அல்ல. ஆனால், பேசும் போது கழுத்தின் கீழ் ஒரு நொடியாவது பார்வை சென்றுவிடும். இதை அவர்களால் தவிர்க்க முடியாத ஒன்று.

ஹெட்செட்! ஹெட்செட் மாட்டிக்கொண்டு பாடல் கேட்பது போல, மியூட் செய்துவிட்டு மற்றவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்பது.

கண்ணாடி! ஆண்கள் பலர் கருப்பு கண்ணாடி தான் பயன்படுத்துவார்கள். அதில் சில ஆண்கள் வெயில் இல்லாத போதிலும் கூட கூட்டத்தில் கருப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு ஃப்ரீயாக சைட் அடிப்பார்கள்.

சிறுநீர் கழிக்கும் போது… தியேட்டர், மால் போன்ற பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் போது, டாய்லெட்டே வெறிச்சோடி இருந்தாலும், ஒரு மூலைக்கு சென்று தான் சிறுநீர் கழிப்பார்கள். அல்லது யாராது சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தால், அவர் அருகே சென்று தான் சிறுநீர் கழிப்பார்கள்.

டிஸ்யூ பேப்பர் ! சிறுநீர் கழித்துவிட்டு அல்லது ரெஸ்ட்ரூம்-ல் முகம் கழுவிய பிறகு, டிஸ்யூ பேப்பர் இல்லாவிட்டால், டாய்லெட் பேப்பரை பயன்படுத்துவது.

வயிற்றெரிச்சல்! எவ்வளவு நெருங்கிய உயிர் தோழனாக இருந்தாலும், அவன் ஒரு பெண்ணிடம் சில நிமிடங்கள் தொடர்ந்து பேசினால் கூட வயிற்றெரிச்சல் படுவது!

சின்ன வயசு பழக்கம்! பள்ளியில் இருந்தே ஆண்களுக்கு இந்த பழக்கம் இருக்கும். தன் அருகில் அல்லது வகுப்பில் யாராவது சிறுநீர் கழிக்க எழுந்தால், உடனே எழுந்து தானும் போவார்கள். நண்பர்களுடன் நேரம் கழிக்க சிலர் முயற்சித்தாலும், பெரும்பாலும், உண்மையாகவே சிறுநீர் கழிக்க செல்பவர்களும் உண்டு.

அன்லிமிடெட் வை-பை! இன்டர்நெட் கையில் கிடைத்துவிட்டால் யாருமே அதில் இருந்து வெளியே வரமாட்டார்கள். ஆனால், ஆண்களின் கையில் அன்லிமிடெட் நெட் கிடைத்துவிட்டால் ஒருமுறையாவது பலான சைட்டை ஓபன் செய்யாமல் வெளிவரமாட்டர்கள்.