Home இரகசியகேள்வி-பதில் கணவரின் நண்பர் என்னுடன் தவ­றான முறையில் நடக்க முற்பட்டார் என்ன செய்வது?

கணவரின் நண்பர் என்னுடன் தவ­றான முறையில் நடக்க முற்பட்டார் என்ன செய்வது?

479

இரகசியகேள்வி-பதில்:எனக்கு வயது 31. என் கண­வ­ருக்கு 33. திரு­ம­ண­மாகி ஒரு மகள் இருக்­கிறார். கணவர் வெளி­நாட்டில் வேலை செய்து வரு­கிறார். அவர் கொடுத்­த­னுப்­பிய ஒரு பொதியை என்­னிடம் தரு­வ­தற்­காக என் கண­வ­ரது நண்பர் ஒருவர் வீட்­டுக்கு வந்தார். வீட்டில் யாரு­மில்­லா­ததைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு என்­னிடம் தவ­றான முறையில் கதைக்க ஆரம்­பித்தார். பயந்­து­போன நான் அவரை திட்டி அனுப்­பி­விட்டேன். இப்­போது என் கணவர் என்­னிடம் சரி­யாகப் பேசு­வ­தில்லை. மக­ளிடம் மட்டும் கதைப்பார். நான் கதைக்க முயற்­சித்தால் இரண்டு வார்த்தை பேசி­விட்டு வைத்­து­வி­டுவார். எனக்கு ஒரே குழப்­ப­மாக இருக்­கி­றது.

பதில்:
இன்­னுமா புரி­ய­வில்லை?
தனக்கு நேர்ந்த அவ­மா­னத்­துக்குப் பதி­லாக உங்கள் கண­வ­ரது நண்பர் உங்கள் கண­வரை பலிக்­க­டா­வாக்கி உங்­களைப் பழி­வாங்­கி­யி­ருக்­கிறார். இதுதான் நடந்­தி­ருக்க வேண்டும்.

தன் நண்­ப­னது மனை­வியைத் தங்­கை­யாகப் பார்க்­க­வேண்­டிய அந்தக் கயவன், தன்னைக் காப்­பாற்­றிக்­கொள்ள உங்­களைப் பற்றி உங்கள் கண­வ­ரிடம் அவ­தூ­றாகக் கூறி­யி­ருக்க வேண்டும். நீங்கள் அவ­ரிடம் தவ­றாக நடந்­து­கொள்ள முயற்­சித்­த­தா­கவோ அல்­லது உங்­க­ளுக்கும் வேறொ­ரு­வ­ருக்கும் தொடர்­பி­ருப்­பதை அவன் கண்ணால் கண்­ட­தா­கவோ உங்கள் கண­வ­ரிடம் பொய்­யாகக் கூறி­யி­ருக்க வேண்டும்.

தொலைக்­காட்சி நாட­கங்­களில் வில்லன் யார் என்­பதைப் பார்­வை­யா­ளர்கள் தெரிந்­து­கொண்­டாலும் அந்தக் கதா­பாத்­திரம் அறிந்­தி­ருப்­ப­தில்லை அல்­லவா? அது­போ­லத்தான் தன் நண்பர் சொன்­னதை முழு­மை­யாக நம்­பி­யி­ருப்பார் உங்கள் கணவர்.

இதை வைத்துப் பார்க்­கும்­போது, இந்தச் சம்­பவம் குறித்து நீங்கள் உங்கள் கண­வ­ரிடம் பகிர்ந்­து­கொள்­ள­வில்லை எனத் தோன்­று­கி­றது. சரிதான்! இம்­மா­தி­ரி­யான சமாச்­சாரங்களை கண­வ­ரிடம் பகிர்ந்து கொள்­வதில் ஒரு குழப்பம் பெண்­க­ளுக்குத் தோன்­று­வது சக­ஜம்தான். ஆனால், அதுதான் அந்தக் கய­வ­னுக்கு வாய்ப்­பாகப் போய்­விட்­டது.

இந்த நிலையில் நீங்கள் செய்­ய­வேண்­டி­ய­தெல்லாம், இனியும் தாம­திக்­காமல் இது­பற்றி உங்கள் கண­வ­ரிடம் கூறு­வதே! எடுத்த எடுப்பில் நீங்கள் சொல்­வதை உங்கள் கணவர் நம்ப மறுக்­கலாம். உங்கள் தவறை மறைப்­ப­தற்­கா­கவே நீங்கள் இவ்­வாறு கூறு­கி­றீர்கள் என்றும் அவர் சொல்­லலாம். ஏனென்றால், இதை­யெல்லாம் அந்தக் கயவன் முன்­கூட்­டியே சிந்­தித்து அதற்­கேற்­ற­ப­டியே உங்கள் கண­வ­ரிடம் திரித்துக் கூறி­யி­ருப்பான்.
எனவே, பொறு­மை­யாக எடுத்துக் கூறுங்கள். அவர் நம்ப மறுத்­தாலும் பர­வா­யில்லை. வேண்­டு­மானால், இந்தச் சம்­பவம் குறித்து அந்தக் கய­வ­னிடம் உங்கள் கண­வரைக் கேட்கச் சொல்­லுங்கள். அப்­போது அவ­னது முகமே அவனைக் காட்­டிக்­கொ­டுத்­து­விடும் என்­ப­தையும் கூறுங்கள்.
நீங்கள் உங்கள் கண­வ­ரிடம் இருந்து பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மைல்கள் பிரிந்­தி­ருக்­கி­றீர்கள். அப்­ப­டி­யி­ருக்க உங்கள் கூற்றில் உள்ள உண்­மையை உட­ன­டி­யாக உங்கள் கணவர் புரிந்­து­கொள்ள மாட்டார். எனவே, எது நடந்­தாலும் பொறு­மையை மட்டும் கைவிட்டு விடா­தீர்கள்.
———————————————-

வாரத்துக்கு ஒரு முறையோ அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறையோதான் நாங்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடுகிறோம். என் மனைவியை உற்சாகப்படுத்தி எப்படி இந்த இடைவெளியைக் குறைப்பது? குறைந்த பட்சம் நான்கு நாட்களுக்கு ஒரு முறையாவது உறவில் ஈடுபடுவதற்கு அவளைத் தயார்படுத்துவது எப்படி?

திருமணமான புதிதில் ஒரு நாளைக்குப் பலமுறை, அதன் பிறகு ஒரு வாரத்துக்கு இரு முறை, குடும்பம் குட்டி என்றான பிறகு வாரத்துக்கு ஓரிரு முறை, குடும்பச் சுமைகள் கூடும்போது மாதத்துக்கு ஓரிருமுறை என்று தான் பெரும்பாலான தம்பதிகள் உறவுகொள்கிறார்கள் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

ஒவ்வொருவரது தாம்பத்திய வாழ்க்கையும் வித்தியாசமானது. உங்களுக்கும் உங்கள் துணைக்கும் உள்ள புரிதலைப் பொறுத்து நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் கூடிக்கொள்ளலாம். இதை எல்லாம் வெளியாட்கள் வரையறை செய்ய முடியாது

——————————————–
கேள்வி
எனக்கு வயது 47. எனது கணவர் இறந்து 6 வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில், குடும்பத்தைப் பிரிந்து வாழும் ஒரு 63 வயது நபர், தன்னுடைய பாலியல் பங்காளராக இருக்குமாறு என்னைக் கேட்டார். நான் மறுத்துவிட்டேன். ஆனால், தற்போது அவருடைய விருப்பத்துக்கு சம்மதம் தெரிவிக்கலாம் என்று எண்ணுகிறேன். இதனால் நான் கர்ப்பம் தரித்துவிடுவேனோ என்று பயமாக உள்ளது. எனக்குத் தகுந்த ஆலோசனையை வழங்கி உதவுங்கள்.

பதில்
உங்களுக்கு இன்னமும் மாதவிலக்கு ஏற்படுகிறது என்றால், நிச்சயமாக கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால், ஏன் இந்த விபரீத ஆசை என்று சற்று எண்ணிப் பாருங்கள்.

உங்களது பிரச்சினை பற்றிச் சொல்லியிருக்கும் நீங்கள், உங்கள் குடும்ப விபரம் எதையும் தெரிவிக்கவில்லை. உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கினறனரா? நீங்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறீர்களா? உங்களைப் பற்றிய உங்கள் அயலவர்களின் எண்ணம் எவ்வாறிருக்கிறது என்பன பற்றிய விபரங்களை நீங்கள் தரவில்லை.

உடல் வேட்கையானது, ஓரிரு மணித்துளிகளுக்குள் அடங்கிவிடும். ஆனால், அது உண்டாக்கும் மனக் குழப்பம் பல்லாண்டு காலம் நிலைத்து நிற்கும். ஒருவேளை, உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கலாம். அவர்கள் இதுபற்றி அறிந்துகொண்டால், அவர்கள் மனதில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் சுற்றம் சூழ வாழ்ந்து வருகிறீர்கள் என்றால், இந்த விடயம் தெரியவரும் பட்சத்தில், நிச்சயமாக அவர்கள் உங்களை விலக்கியே வைப்பார்கள். அதை உங்களால் தாங்கிக்கொள்ள முடியுமா?

இளம் வயதில் கணவரை இழந்த பெண்கள் மறுமணம் செய்துகொள்வதில் உள்ள தயக்கமே இன்னும் நம் சமூகத்தை விட்டு விலகாத சூழலில், இந்த வயதில், இப்படியொரு ஆசைக்கு நீங்கள் அடிமையாவது நிச்சயம் உங்களையும், உங்களைச் சார்ந்தவர்களையும் பல வழிகளில் பாதிக்கும்.

உங்களது ஆசை தவறானது என்று யாரும் சொல்லிவிட முடியாது; சொல்லவும் கூடாது. ஏனெனில், அது உங்களது தனிப்பட்ட விருப்பம். ஒருவேளை உங்களுக்கு சாதகமாக நாங்கள் பதிலளிக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணினால், பாதுகாப்பான நாட்களில், பாதுகாப்பான முறைகளை பின்பற்றி அவருடன் பாலியல் உறவில் ஈடுபடலாம். இதனை நீங்கள் ஒரு முறை பரீட்சார்த்தமாக முயற்சித்து பாருங்கள் என்று பரிந்துரைக்கிறோம். ஆனால், நாம் இந்த சமுதாயத்தில் தனித்தனி மனிதர்களாக வாழவில்லை. ஒரு மக்கட்தொகுதியாக இணைந்தே வாழ்கிறோம். அப்படி வாழும்போது, அந்த மக்கட்தொகுதிக்கென்றான சில பண்புகளை நாம் விரும்பியோ, விரும்பாமலோ கடைப்பிடித்தே ஆகவேண்டும். அதில் தவறும் பட்சத்தில், பாதிப்புகள் பாரதூரமானவையாக இருக்கும்.

எனவே, நம்முடைய சமூகத்தில் தொடர்ந்தும் இணைந்து வாழ உங்களுக்கு விருப்பம் இருந்தால், இந்த விபரீத விளையாட்டைத் தவிர்ப்பதே நல்லது.