Home பெண்கள் தாய்மை நலம் கணவருடன் மனைவி எப்பொழுது சேர்ந்தால் கர்ப்பம் தரிக்கலாம்

கணவருடன் மனைவி எப்பொழுது சேர்ந்தால் கர்ப்பம் தரிக்கலாம்

719

தாய் நலம்:இன்றையகால‌க்கட்ட‍த்தில் பெண்களுக்கு திருமணமாகி, பல வருடங்களாகியும் அவர்கள்கருத்த‍ரிப்பதில்லை. இதனால், அவர்களுக்கு குழந்தை இல்லையே என்கிற ஏக்க‍ம் தலைத்தூக்குகிறது. இதன் காரணமாக குடும்ப பிரச்சினைகள் வெடிக்கின்றன.

ஒரு பெண் எந்தெந்த நாட்களில் தனது கணவருடன் சேர்ந்தால் கருத்த‍ரிக்க‍ வாய்ப்புண்டு என்பதை தெரிந்துகொண்டு இணைந்தால், குழந்தைபேறு ஏற்பட 90% வாய்ப்புண்டு.

ஓரு பெண்ணிற்கு மாதவிடாய் என்பது மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் வரை நீடிக்கும். மாதவிடாய் முடிந்த முதல் 7 நாள்வரை புதிதான கரு உருவாகி, ஆரோக்கியமான நிலை அடையும்.

8வது நாளில் இருந்து மாதவிடாய் சுழற்சியின் 19வது நாள் வரை அந்த கரு நல்ல வலிமையோடு இருக்கும். பின் மீண்டும் கரு கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து மாதவிடாய் ஏற்பட்டு இரத்தப் போக்காக வெளியேறிவிடும்.

ஒரு சிலருக்கு 28 நாட்களும், ஒரு சிலருக்கு 32 நாட்களுமாக மாதவிடாய் சுழற்சி ஏற்படும். 28 நாட்கள் மாத விடாய் சுழற்சி ஏற்படுபவர்கள் மொத்த நாட்களில் இருந்து 18 நாட்களை கழித்து இடைநாட்களான 10 நாட்களில் உடலுறவுக் கொள்ளவேண்டும். 32 நாட்கள் உள்ளவர்கள், மொத்த நாட்களில் 11 நாட்களை கழித்து இடைப்பட்ட 21 நாட்களில் உடலுறவுக் கொள்ளலாம்.

இந்த இடைப்பட்ட நாட்களில் கரு நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.

பெரும்பாலும் மாதவிடாய்சுழற்சி 28 நாட்களாகதான் இருக்கும். இதில் இருந்து இரத்தப் போக்கு ஏற்படும் அந்த 5 நாட்களை கழித்து விட்டால் மீதம் 23 நாட்கள் இருக்கும். இரத்தப் போக்கு முடிந்த 8 நாட்களுக்கு பின் கரு நல்ல நிலையில் இருக்கும்.

9-15வது நாள் வரையிலான 7நாட்கள் கரு ஆரோக்கியமாக இருக்கும். பின் கடைசி 8 நாட்களில் கொஞ்சம், கொஞ்சமாக வலு விழந்து விடும். எனவே அந்த இடைப்பட்ட 7 நாட்களில் உடலுறவுக் கொண்டால் கருத்தரிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

கரு முட்டை தோன்றி வெளிவரும் நாட்கள் பெண்களின் உடல் மிகவும் வெப்பமாக இருக்கும்.

இதை, நீங்கள் உடலின் அடிப்பகுதியில் தெர்மாமீட்டர் வைத்து கணக்கிட்டு பார்க்கலாம். கருமுட்டை அதன் நிலையை அடையும் வரை இந்த சூடு இருக்கும். அது தனது நிலையை 6-8 வது நாளில் அடைந்து விடும். அந்த நாட்களில் இருந்து நீங்கள் உடலுறவுக் கொள்ள ஆரம்பித்தால் எளிதாக கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு.

உடலுறவில் ஈடுப்படும்போது, ஆண்களுக்கு விந்தணு வெளிப்படுதல் போன்று, பெண்களுக்கு அவர்களது பிறப்புறுப்பில் இருந்து ஓர் திரவம் வெளிப்படும். அந்த திரவம் நீர் போன்று இல்லாது கொஞ்சம் அடர்த்தியாக வெளிவருகிறது எனில், நீங்கள் கருத்தரிக்க அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது என்று அர்த்தம். அந்நாட்களில் ஆணுறையின்றி உடலுறவுக்கொண்டால் கருத்தரிக்க நிறைய வாய்ப்பிருக்கிறது.

பெண்களின் உடல்கூறில் சில அறிகுறிகள் தென்படும். வயிற்றின் ஒரு பகுதியில் மந்தமான வலி ஏற்படுதல், மார்பக பகுதியில் நிலைமாற்றம் அடைதல் அல்லது மென்மையாக உணர்தல் போன்ற அறிகுறிகள் நீங்கள் கருத்தரிக்க தயாராவதை குறிப்பிடுவன ஆகும். அந்த நாட்களில் நீங்கள் சரியான முறையில் உடலுறவுக் கொண்டால், கருத்தரிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன