Home ஜல்சா ஆண்மை இல்லாதவன் கூறிய மனைவிக்கு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ அனுப்பிய கணவன்

ஆண்மை இல்லாதவன் கூறிய மனைவிக்கு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ அனுப்பிய கணவன்

248

ஜல்சா செய்திகள்:ஆண்மை இல்லாதவன் என்று கூறிய மனைவியின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி அளித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஐதராபாத் லால்பகதூர் நகரைச் சேர்ந்தவர் விபாவசு (32). இவருக்கும் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த அனுஷா (27) என்பவருக்கும் 2016 ஆம் வருடம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 15 நாட்களுக்குள் இருவருக்கும் கருத்து வேறுபாடு. இதனால் அனுஷா, கொடுங்கையூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். பின்னர் இரண்டு குடும்பத்தினரும் அவர்களை சேர்த்து வைக்க பலமுறை முடிவு செய்தனர். ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. பின்னர் விவாகரத்து கேட்டு மனு செய்துள்ளார் சனுஷா. அந்த மனுவில் அவர், தனது கணவர் ஆண்மை இல்லாதவர் என்று குறிப்பிட்டுள்ளாராம். இது குறித்து உறவினர்களிடமும் அனுஷா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அனுஷாவின் உறவினர்கள் விபாவசுவை தவறாகப் பேசியுள்ளனர். இதனால் கடுப்பான அவர், தான் ஆண்மையுள்ளவன் என்பதை நிரூபிக்க முடிவு செய்தார். அதன்படி மற்றொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்து அதை வீடியோவாக எடுத்தார். அந்த வீடியோவை அனுஷா வின் அப்பா, அவரது உறவு பெண் ஆகியோருக்கு, ’என்னயா ஆண்மை இல்லாதவன்னு சொல்றீங்க?’  என்று அனுப்பி வைத்துவிட்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து போலீசார் ஐதராபாத்துக்கு சென்று விபாவசுவை கைது செய்து விசாரித்தனர். அவர் அந்த வீடியோவை அனுப்பியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்