Home இரகசியகேள்வி-பதில் எனக்குத் திருமணமாகி 15 நாட்கள் ஆகின்றன. நான் என் மனைவியுடன் இணைய முடியாமல் இருக்கிறது

எனக்குத் திருமணமாகி 15 நாட்கள் ஆகின்றன. நான் என் மனைவியுடன் இணைய முடியாமல் இருக்கிறது

181

கேள்வி: எனக்கு திருமணம் செய்துகொள்ளும் வயது. ஆனால் நான் பெண் போன்று நடந்து கொள்ளும் ஆணாக இருக்கிறேன்.

எனக்கு ஆண்களைப் பார்த்தால் மட்டுமே அந்த எண்ணங்கள் தோன்றுகின்றன. பெண்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் சகோ தரத்துவமே தோன்றுகிறது. நான் திருமணம் செய்துகொள்ளலாமா?

திருமணம் செய்தாலும் எனக்காக அல்ல, என் பெற்றோருக்காக! ஆனால் அப்படிச் செய்து கொண்டால் அந்தப் பெண்ணின் வாழ்க்கையும் வீணாகி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

பதில்: இரண்டில் ஒன்றுதான் சாத்தியம். நீங்கள் ஓரி னச்சேர்க்கையாளர் என்பது உங்களுக்கே உறுதியாகத் தெரிகிறது.

அப்படியானால் நீங்கள் திருமணம் செய்து கொண்டபின், உங்கள் மனைவி என்ன ஆவார்?

அவரது ஆசைகளுக்கு வடிகாலை உங்களால் அமைத்துத் தர முடியுமா? அவரது சந்தோஷம் நிறைந்த வாழ்க்கைக்கு உங்களால் என்ன உறுதி வழங்க முடியும்?

உங்கள் பெற்றோரைத் திருப்திப்படுத்தத்தான் நீங்கள் திருமணம் செய்யப்போகிறீர்கள் என்றால், உங்களது பிரச்சினை உங்கள் பெற்றோருக்குத் தெரியாது என்று அர்த்தம்.

அவர்களிடம் உங்களைப் பற்றிச் சொல்லி அவர்களை வருந்தச் செய்ய நீங்கள் விரும்பவில்லை. அப்படித்தானே?

இந்த உண்மையை மறைத்து நீங்கள் திருமணம் செய்துகொண்டால், சீரழியப்போவது ஒரு பெண்ணின் வாழ்க்கை மட்டுமல்ல. அந்தப் பெண்ணின் ஒட்டுமொத்த குடும்பத்தினரதும் சந்தோஷம்தான்.

எனவே, உங்கள் பெற்றோரிடம் உங்கள் நிலை பற்றி எடுத்துக்கூறுங்கள்.

அப்படிக் கூறும் பட்சத்தில் அவர்களே உங்களுக்குத் திருமணம் செய்துவைக்கும் எண்ணத்தைத் தம் மனதைவிட்டு அகற்றிவிடுவார்கள். தவறியும் அவர்கள் உங்களைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தினால் எக்காரணம் கொண்டும் அதுபோன்ற பாதகமான செயலைச் செய்யாதிருங்கள்.

ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் காப்பாற்றிய திருப்தி உங்களுக்குக் கிடைக்கும்.

—————————————–

கேள்வி: எனக்கு கடந்த தை மாதம்தான் திருமணமானது. தற்போது என் மனைவி இரண்டு மாத கர்ப்பிணித் தாய்.

அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று நினைத்தாலும் எனக்கு ‘அந்த’ நினைவு வரத்தான் செய்கிறது. மனைவி கர்ப்பம் தரித்துவிட்டால் அவள் குழந்தை பெறும்வரை அவள் உறவில் ஈடுபடக்கூடாதா?

பதில்: இன்னும் சில மாதங்களில் பெற்றோராகப் போகும் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்!

அனேகமானோர் இப்படி நினைத்துக்கொண்டுதான் கர்ப்ப காலத்திலும் சரி, பிரசவ காலத்திலும் சரி பல பிரச் சினைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் தமது கர்ப்பகாலத்தில் உறவு கொள்ளவே கூடாது என்று எங்கும் சொல்லப்படவில்லை.

ஆனால், கருத்தரித்த முதல் மற்றும் கடைசி மூன்று மாதங்களில் உடலுறவைத் தவிர்க்க வேண்டும் என்பது பொதுவான விதியாக கடைப்பிடிக்கப்படுகிறது. காரணம், முதல் மூன்று மாதங்களின்போதுதான் கரு கருப்பைச் சுவற்றை உறுதியாகப் பற்றிக்கொள்ளத் தொடங்கும் காலம்.

அதுபோலவே, கடைசி மூன்று மாதங்கள் கர்ப்பிணிகளுக்கு உடலுறவின்போது சிரமங்கள் ஏற்படக் கூடும். இடைப்பட்ட மாதங்களில் உடலுறவு வைத்துக் கொள்ளலாம்.

கர்ப்பமாயிருக்கும் மனைவியைக் கட்டாயப் படுத்தி உறவு வைத்துக்கொண்டால், அவரது உடல் மற்றும் மனம் மட்டுமல்லாமல் பாதிக்கப்படுவதோடு பிறக்கவிருக்கும் குழந்தையின் மனநிலையும்கூட பாதிக் கப்படலாம்.

சுகப்பிரசவமா, சிசேரியனா போன்ற ஒரு சில காரணிகள்தாம் பிரசவத்துக்குப் பின்னான உங்களது தாம்பத்திய வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.

குழந்தைப் பேற்றுக்குப் பிறகு ஒரு பெண்ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலையை அடைய ஆறு வாரங்களாகும். அதுவரை தாம்பத்தி யத்தைத் தள்ளிப்போட வேண்டும்.

அதேவேளை பிரசவத்தின்போது பெண்ணின் உடலுறவுப் பாதையில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் அவை ஆறுகிற வரை உறவைத் தவிர்க்க வேண்டும்.

கைக்குழந்தையிருக்கும் போது உறவில் ஈடுபட்டால் தாய்ப்பால் இல்லாமல் போய்விடும் என்று கூடப் பல பெண்கள் நம்புகிறார்கள்.

இது மூட நம்பிக்கை. குழந்தை பிறந்து, குறுகிய காலத்திலேயே உறவு கொண் டால் கடுமையான வலி இருக்கும் என்ற பயத்திலேயே அதைத் தவிர்க்கச் சொல்கிறார்கள்.

கர்ப்பிணிப் பெண்கள், கர்ப்ப காலத்தின்போதும், பிரசவத்தின் பின்னான காலத்தின்போதும் வைத்தியரின் சிபாரிசின் பேரில் தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்.

===============================================
கேள்வி: உறவின் மீது விருப்பம் ஏற்படுவதற்கு சில உணவுப் பொருட்கள் உதவுகின்றன என்று சொல்லப்படு வது உண்மைதானா?

பதில்: உண்மைதான். பாலுணர்வை அதிகரிக்கும் உணவுப் பொருட்களில் வெங்காயத்துக்கு மிக முக்கிய இடம் உண்டு.

முக்கியமாகச் சிறிய வெங்காயம். இதனால் தான் இல்லற வாழ்க்கையைத் துறந்த ஆண்களும், உடலுறவு நாட்டத்தைக் குறைத்துக்கொள்ள விரும்பும் ஆண்களும் வெங்காயம் சாப்பிடக் கூடாது என்பார்கள்.

அதிலும், சமைக்காத பச்சை வெங்காயமாகச் சாப்பிடும்போது இதன் முழுப்பலனையும் பெற முடியும். முருங்கைக்காய் மற்றும் முருங்கைக் கீரையும் இவ்வகையினதே.

வெற்றிலை போடும் பழக்கத்தாலும் பாலுணர்வு அதி கரிக்கும் என்பார்கள். இது தவிர, நன்கு வெயிலில் காய்ந்த ஆட்டிறைச்சியை எண்ணெய்யில் வறுத்துச் சாப்பிட்டாலும் பாலுணர்வு அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஒரு சில வைத்திய முறைகளில் அஜமாமிச லேகியம் என்று கூறப்படுவது ஆட்டிறைச்சியை அடிப்படையாகக் கொண் டவையே. அதிலும் ஆண்மைத்தன்மை சுத்தமாகக் குறைந்து போனவர்களுக்கு இது நல்ல பலன் அளிப்ப தாகவும் கூறப்படுகிறது.

கடலில் காணப்படும் சிப்பி வகை உணவு, ஆண்களின் பாலுணர்வை அதிகரிக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாகக் கூறுகின்றன சமீபத்திய ஆராய்ச்சிகள்.

==========================================================
கேள்வி: எனக்குத் திருமணமாகி 15 நாட்கள் ஆகின்றன. நான் என் மனைவியுடன் இணைய முடியாமல் இருக்கிறது

. காரணம், அவரது பெண்ணுறுப்பு சிறிதாக இருப்பதே. நாம் உறவுக்கு முயற்சித்தாலும் அவருக்கு வலி, வேதனை ஏற்படுவதால் அந்த முயற்சியைத் தொடரவில்லை.

இந்தப் பிரச்சினைக்கு சத்திர சிகிச்சை தவிர வேறேதும் தீர்வு இருக்கிறதா? ஏனெனில், எம் இருவருக்குமே சத்திர சிகிச்சை செய்துகொள்வதில் விருப்பம் இல்லை.

பதில்: இந்தப் பிரச்சினை சாதாரணமானதுதான். ஆனால் அவரவரது பிரச்சினையின் தீவிரத்தைப் பொறுத்தே சத்திர சிகிச்சை வரை இந்தப் பிரச்சினை தொடரும்.

இதுபோன்ற பிரச்சினையின்போது, கொஞ்சம் கொஞ்ச மாகத்தான் முழுமையான உறவுக்கு வழிவகுக்க முடியும். இதற்கு ஓரிரு வாரங்கள் ஆகலாம். உங்கள் மனைவியை உறவுக்குத் தயார்செய்வதற்காக, முன்விளையாட்டுக்காக சற்று அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ‘ஜெல்’ போன்ற உராய்வு நீக்கிகளையும் பயன்படுத்துவது நல்லது.

உறவின்போது வலியை உணர்பவர் உங்கள் மனைவி யாக இருப்பதனால், பிரதான பாத்திரத்தை, அதாவது உறவைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை அவரிடம் விட்டு விடுங்கள்.

இதற்காக, பக்கவாட்டில் படுத்துக்கொண்ட அல்லது அவர் மேலேயும் நீங்கள் கீழேயுமான நிலையில் உறவில் ஈடுபடலாம்.

இதன்மூலம், அவருக்கு வலி தோன்றாதவரை உறவைத் தொடரவும், வலி ஏற்படும் பட்சத்தில் நிறுத்திவிடவும் அவருக்கு வாய்ப்புக் கிடைக்கும். இது வலியினால் பயந்திருக்கும் அவரது பய உணர்வைக் குறைக்கும்.

எந்த நிலையிலான உறவாக இருந்தாலும், பெண் கால்களை அகட்டியபடி இணைந்தால் வலி சற்றுக் குறையும்.

இவை எதுவும் சரிவராத பட்சத்தில் நீங்கள் சத்திர சிகிச்சை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.