Home பாலியல் விந்துக்கு முன்னாள் வெளிப்படும் திரவத்தால் கருத்தரிக்க முடியுமா?

விந்துக்கு முன்னாள் வெளிப்படும் திரவத்தால் கருத்தரிக்க முடியுமா?

46

நீங்கள் உங்கள் துணையுடன் உடலுறவில் ஈடுபட்டால் எப்போது கர்ப்பம் தரிப்பது என்பது பற்றிய பொதுவான தகவலை தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். ஆம், எந்த நிலையில் அண்டவிடுப்பு என்பது ஏற்பட்டு முட்டை வெளியேறுகிறது என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள இதனால், உடலுறவில் ஈடுபடும் போதிலும் தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க இயலும். இன்று பாதுகாப்பான உடலுறவுக்கான பல வித மருந்து, மாத்திரை மற்றும் பொருட்களும் காணப்படுகிறது. ஆனாலும், ஒரு சிலர் இயற்கை வழியையே இன்று வரை பின்பற்றி வருகின்றனர். இப்போது நாம் பார்க்க போவது விந்து வெளிப்படும் முன் வெளி வரும் ஒரு திரவம் பற்றியும், இதனால் பெண்கள் கருத்தரிக்க வாய்ப்பிருக்கிறதா? என்பதை பற்றி தான்.

என்ன திரவம்?
இது விந்து வெளியேற்றத்துக்கு முன் வெளிப்படும் ஒரு திரவம் என்றாலும், இதில் விந்தணுக்கள் இருப்பதில்லை. இந்த திரவமானது ஆணின் கௌபர் எனும் சுரப்பியில் காணப்படும் திரவமாகும். இந்த கௌபர் சுரப்பி என்பது சிறிய அளவிலிருக்க, ஆணின் சிறுநீர் கழிக்கும் உறுப்பின் அருகாமையில் காணப்படும். இந்த திரவமானது சிறுநீர் குழாயில் ஏற்படும் அமில வினையை சம அளவிற்கு கொண்டு வர உதவுகிறது. இதன் முடிவாக விந்து வெளியேற பாதை அமைத்து தர, இதனால் விந்துக்கள் வேகமாக உடலை விட்டு வெளியேறுகிறது.

இந்த திரவத்தால் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உண்டா?
இந்த திரவத்தில் ஓரிரு விந்தணுக்கள் இருக்குமென சொல்லப்படுகிறது. ஆம், ஏற்கனவே அதே நாளில் உடலுறவு கொண்டிருந்தால் அந்த விந்தணுக்களுள் ஒன்றிரண்டு இந்த திரவத்துடன் கலந்து காணப்படுமாம். நீங்கள் உடலுறவுக்கொள்ளும்போது விந்து வெளியேற போகும் உணர்வு என்பது உங்கள் மனதில் இருந்தால் உடனடியாக நிறுத்துவதன் மூலம் கர்ப்பம் தரிப்பதை தவிர்க்க முடிகிறது. ஆனால், சிலசமயத்தில் விந்தணுக்கள் வெளியேறியதை நீங்கள் அறியாமல் போனால் கர்ப்பம் தரிக்கவும் அதிக வாய்ப்பிருக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?
1. நீங்களும் உங்கள் கணவரும் ஆணுறை இன்றி உடலுறவில் ஈடுபட்டால், விந்தணுக்கள் வெளியாக போகும் சமயம் ஆணுறை அணிந்துக்கொள்வது நல்லது. இதனால் விந்தணுக்கள் எப்போது வெளியாகும் என்பதை நீங்கள் இருவரும் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

2. இந்த மேல்காணும் முறை என்பது ஓரிரு தடவைகள் கடினமாக இருந்தாலும், இதை பழகி கொள்வதன் மூலமாக தேவையற்ற கர்ப்பத்தை தவிர்த்து உடலுறவில் ஈடுபட உங்களால் முடிகிறது.

3. அதேபோல் முதல் முறை செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது எப்போது விந்தணுக்கள் வெளியாகிறது என்பதை கணக்கிடுவதன் மூலமாக அடுத்த முறை உங்களால் கவனமாக கர்ப்பத்தை தவிர்க்க முடிகிறது.

4. அதேபோல் ஆணுறை அணியாமல் உடலுறவில் ஈடுபடும்போது உடலுறவு தொற்று என்பது உண்டாக வாய்ப்பிருக்கிறது.

மாதவிடாயை கணக்கிடுங்கள்:
1. நீங்கள் தேவையற்ற கர்ப்பத்தை உடலுறவின் மூலம் தவிர்க்க விரும்பினால் உங்கள் மாதவிடாய் சுழற்சியை தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். கடைசி சில மாதம் எப்போது மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டது என்பதை பொறுத்து உடலுறவால் ஏற்படும் தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்கலாம்.

2. மாதவிடாய் சுழற்சியை நீங்கள் மறந்துவிட்டால் போனில் காணப்படும் ஆப் மூலமாக மாதவிடாய் நாளை நினைவில் வைத்துக்கொள்ள முயலலாம்.

3. மருத்துவரின் ஆலோசனை பெற்று உங்கள் குழப்பங்களை தீர்த்துக்கொள்ளலாம்.

எது சிறந்தது?
கர்ப்பத்தை தவிர்க்க சிறந்த வழி உடலுறவு கொள்ளும்போது ஆணுறை பயன்படுத்துவதே ஆகும். அதேபோல் மருத்துவரின் பரிந்துரையுடன் கர்ப்ப கட்டுப்பாடு மாத்திரைகளையும் நீங்கள் எடுத்து கொள்ளலாம். எந்த ஒரு முடிவை எடுத்தாலும், மருத்துவரின் பரிந்துரை என்பதை எக்காரணம் கொண்டும் மறந்துவிடாதீர்கள்.