Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உணவு பழக்கமும் ஆரோக்கியமான உடல் கட்டுப்பாடும்

உணவு பழக்கமும் ஆரோக்கியமான உடல் கட்டுப்பாடும்

60

உடல் கட்டுப்பாடு::உடல் ஆரோக்கியம் என்பது உடற்பயிற்சியிலும் வாழ்க்கை முறையையிலும் தங்கியிருப்பதில்லை.

அதற்கு சிறந்த ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களும் இன்றியமையாதௌ என்பதே உண்மை. நம்மில் பலர் அழகிற்காக செலவிடும் நேரத்தில் சிறிதளவேனும் உணவுகளைத் தேர்வு செய்வதில் செலவிடுவது இல்லை என்பதே நிதர்சனமானது.

ஆனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உணவுப் பழக்கங்களை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் ஏதோ ஒரு விதத்தில் அதனை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டியதற்கான அறிகுறிகள்.

1. குடற் காற்று.
குளுட்டன் அதாவது பால் உணவுப் பொருட்களை உட்கொள்வதனால் வயிறு ஊதுதல், குடற் காற்று அதிகரித்தல் போன்ற பிரச்சினைகள் வருவதுண்டு. எனவே பால்ப் பொருட்களையும், குளுட்டன் உணவுகளையும் உட்கொள்வதை தவிர்த்தல் சிறந்தது.

2. தொடர்ச்சியான பசி.
எப்போதும் பசி உணர்வு இருப்பதற்கு காரணம் போதியளவு புரோட்டின் கிடைப்பதில்லை என்பதும், சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ளாமையும் ஆகும். எனவே புரோட்டின் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதுடன் நேரம் தவறாது உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

3. மலச்சிக்கல்.
உணவுக் கழிவுகள் வெளியேறுவதில் பிரச்சினைகள் ஏற்படுவதுடன், அவை சிறு குடலில் தங்குவதனால் மலச் சிக்கல் ஏற்படுகின்றது. இக்தற்கு காரணம் நார்ப் பொருட்கள் அதிகளவில் உணவில் இல்லையென்பதே. நார்ப் பொருட்கள் அதிகம் உள்ள காய் வகைகளை உட்கொள்வதுடன் அதிகளவில் நீர் அருந்துவது முக்கியமானது.

4. தொடர்ச்சியான எரிச்சல் உணர்வு.
தொடர்ச்சியான எரிச்சல் உணர்வுகள், மனநிலையில் மாற்றம், ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மை இதற்கெல்லாம் காரணம் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதே. அவ் வேளைகளில் மாப் பொருட்கள், பழங்கள், கடலைகள் உட்கொள்வது சிறந்தது.

5. பருக்கள்.
பருக்கள் உருவாதற்கு காரணம் மாசுக்களும், சருமப் பராமரிப்பு இன்மையும். அத்துடன் சர்க்கரை, எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளால் பருக்கள் தோன்றுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன. எனவே அவற்றைத் தவிர்த்தல் சிறந்தது.

6. முடி உதிர்வு.
தொடர்ச்சியாக முடி உதிர்வு இருந்தால் அதற்கான காரணம் ஊட்டச்சத்தற்ற உணவு முறையே. எனவே அதிகளவான புரோட்டின், இரும்புச் சத்துக்கள் உள்ள உணவான கீரை, இறைச்சி, சானா போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளுதல் அவசியம்.

7. தொற்றுக்கள் ஏற்படுதல்.
அடிக்கடி சளி, காய்ச்சல், சிறுநீரகத் தொற்று, ஈஸ்ட் தொற்று, நுண்ணங்கித் தொற்று ஏற்படுவதற்கான காரணம் போதியளவு ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் நோய் எதிர்ப்பு சக்தி வலிமை இழந்து விட்டது என்பதே. இந் நேரங்களில் விட்டமின் சி அதிகம் உள்ள தோடம்பழம், பெரி பழங்கள், பப்பாசி போன்றவற்றை அதிகளவில் சேர்த்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

8. சோம்பல்.
உணவுகளே உடலில் சக்தியாக மாறுகின்றன. சரியான உணவுத் தேர்வுகள் இல்லாத போது உடலிற்கு தேவையான சக்தி கிடைக்காமல் உடல் சோர்வடைகிறது. எனவே ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தேர்வு செய்வதில் அதிக அக்கறை காட்ட வேண்டும்