Home இரகசியகேள்வி-பதில் உன் கணவருக்கும், அவளுக்கும் இடையே செக்ஸ் தாம்பத்யம் நடந்தது

உன் கணவருக்கும், அவளுக்கும் இடையே செக்ஸ் தாம்பத்யம் நடந்தது

77

Captureநான், பிரவுசிங் சென்ட ரில் வேலை செய்கி றேன்; என் வயது 27. ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் கணவர், ” டிவி’ மெக்கானிக். நான் , என் கணவரை உயிரு க்கு மேலாக நேசித்தே ன். எங்களுக்கு திரும ணமாகி, மூன்று வருட ங்களாகிறது. என் கண வர், எங்கள் மீது பாச மாக இருப்பார். எங்கள் சொந்த ஊர் தஞ்சாவூர். ஒரு வருடமாக திருச்சி யில் வசிக்கிறோம். என் கணவர் ஒரு பெண்மணியிடம் வேலைக்கு சேர்ந்ததாக கூறி னார். அங்கு வேலைக்கு சென்று, இரவில் வீட்டுக்கு வராமல் இருப் பார். சில நாட்கள் கேட்டால், வெளியூர் சென்று விட்டேன் என்று கூறுவார்.

இரவில் அடிக்கடி வராததால், அந்த வேலைக்கு செல்ல வேண்டாம் என்று நான் கூறினேன். அப்போது, ஒரு போட்டோவை தன்னுடைய பர்சில் வைத்திருப்பதை பார்த்து, “இது யார்?’ என்று கேட்டேன். “மேடம் போட்டோ… அக்கவுன்ட் ஓபன் செய்ய கொடுத்தார்…’ என்று கூறினார். மூன்று மாதங்களுக்கு முன், எனக்கு தெரியாமலே அரிய லூரில் கடை வைத்திருப்பதாக கூறி, அந்த வேலையை விட்டு நின்று விட்டார். நானும், கடைக்கு வேலைக்கு செல்கிறார் என்று நினைத்து கொண்டிருந்தேன்.

இவருக்கு அடிக்கடி ஒரு பெண்மணி போன் செய்து கொண்டிருந் தாள். நான் அவரிடம், “அந்த பெண் யார், உங்களுக்கு ஏன் அடிக்கடி போன் செய்கிறார்…’ என்று கேட்டேன். அதற்கு அவர், “அந்த பெண், என் அண்ணனோட நண்பனின் மனைவி. “டிவி’ பழுது பார்ப்பதற்காக அழைக்கிறார்…’ என்று கூறினார். அவள் போன் செய்யும் போது, என்னிடமும் கொடுத்தார். அந்த பெண் என்னிடமும் பேசுவாள். இரு தடவை வீட்டிற்கு வந்துள்ளார். அவளுக்கு திருமணமாகி, மூன்று குழந்தைகள் உள்ளன.

என் கணவர், சில நாட்களாக வீட்டிற்கு வருவதில்லை. மாதத்தில், 10 நாட்கள் மட்டுமே வீட்டில் இருப்பார். அவர் அம்மாவை பார்க்க செல்வதாக கூறிவிட்டு செல்பவர், இரண்டு – மூன்று நாட்கள் வர மாட்டார். கேட்டால், ஏதாவது ஒரு காரணம் கூறி விடுவார். கடைக்கு செல்வதாக கூறி விட்டு செல்பவர், இரவு வர மாட்டேன், என்னிடம் பணம் இல்லை என்று கூறினார்; நானும், அதை நம்பி னேன். சில நாட்களுக்கு முன், கடைக்கு சென்ற என் கணவர், என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால், அங்கு சென்று விட்டு, நாளை வருகிறேன் என்று கூறியவர், இரண்டு நாட்களாக வரவில்லை.

நானும் போன் செய்தால், “ஸ்விட்ச் ஆப்’ என்று வந்தது. அப்போது, நான் வேலை பார்க்கும் இடத்திற்கு, ஒரு வயதான அம்மா வந்து, “உன் கணவரை கண்டித்து வை. என் மருமகள் வீட்டிற்கு ஏன் அடிக் கடி வருகிறான். இனி வந்தால், ஆளை காலி செய்து விடுவேன்…’ என்று கூறினார். “என் மருமகளை இரண்டு நாட்களாக காண வில்லை; போனும் எடுக்கவில்லை. என் மகன் வெளிநாட்டில் வேலை செய்கிறான்…’ என்றும் கூறினார். நானே அவரிடம், “என் கணவரை கண்டித்து வைத்து கொள்கிறேன்; அவரை ஒன்றும் செய்து விடாதீர்கள்…’ என்று கூறினேன்.

“இருவரையும் காணவில்லை; அவர்கள் எங்கோ ஓடி விட்டனர்…’ என்று, அவரது மாமியார் கூறினார். நானும், என் கணவருக்கு போன் செய்தால் எடுக்கவில்லை. நான், என் கணவரை முழுமையாக நம்பினேன். அவர் இப்படி செய்து விட்டார் என்று வேதனைப் பட்டு, தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். மறுநாள் அவர் வந்தார். கேட்டதற்கு, “இல்லை… அவருக்கு பணம் வேண்டும் என்று கேட் டார்; அதற்கு ஜாமின்தான் போட்டேன்…’ என்று கூறினார்.
அந்த பெண்மணியை வண்டியில் அழைத்து சென்றிருக்கிறார். வெளிநாடு செல்வதற்காக ஏஜென்டிடம் பணம் கட்டுவதற்கு சென் னை சென்றுள்ளனர். அந்த பெண்ணின், அப்பா – அம்மா வீட்டிற்கு, காரில் அரிசி எடுத்து கொண்டு சென்றிருக்கிறார். அவர் வைத்தி ருந்த போட்டோவும், அந்த பெண்ணின் போட்டோவே! அவரிடம் இதைப் பற்றி கேட்டதற்கு, “உண்மைதான்… ஆனால், நான் தவறாக நடக்கவில்லை. இனி, ஒழுங்காக இருப்பேன்…’ என்று, பைபிள் மீது சத்தியம் செய்தார்.
என் கணவர், ஏன் இப்படி மாறினார் என்று எனக்கு தெரியவில்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், “மந்திரம் செய்து, உன் கணவரை மாற்றி வைத்திருப்பாள். அதனால், நீயும் ஏதாவது செய்து கணவரை மாற்று; இல்லையென்றால், திரும்பவும் அவளிடம் சென்று விடு வார்…’ என்று கூறுகின்றனர். என் கணவர் சில நாட்களாக தாம்பத்யத்தில் ஈடுபடுவதில்லை; கேட்டால், “விருப்பம் இல்லை…’ என்று கூறுகிறார். இதையெல்லாம் பார்த்து, என் மனம், இவர், அவளுடன் தொடர்பு வைத்திருந்தாரா, இனி, இவர் அவளுடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பாரா என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது? என் வாழ்க்கையை காப்பாற்றி தாருங்கள் அம்மா. இவருடைய கடை, அந்த பெண் ஊரின் அருகில் உள்ளது. இதற்கு என்ன வழி என்பதையும் கூறுங்கள்.
— இப்படிக்கு,
பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

அன்புள்ள மகளுக்கு—
நீயும், உன் கணவரும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். பாவங் களை செய்ய மிகவும் பயப்படுவீர்கள். உன் கணவர் சில மாத கால மாகத்தான் தடம் புரண்டுள்ளார்.
தப்புகளை புதிதாய் செய்வதால், உன் கணவருக்கு எளிதாக பொய் சொல்ல தெரியவில்லை.
கள்ள உறவுப் பெண்ணை, வீட்டுக்கு வரவழைத்து, உனக்கு அறிமு கம் செய்து வைத்தது, பின்னாளில் நீ காட்டப் போகும் எதிர்ப்பை, புஸ்வாணமாக்க. அந்தப் பெண்ணின் தவறான வழிகாட்டலில்தான், உன் கணவர் முன்னுக்குப்பின் முரணான செயல்களில் ஈடுபடுகி றார். இருவரும் வெளியூருக்கு ஓடிப் போய் வாழ தீர்மானித்திருக் கின்றனர். ஆனால், அந்தப் பெண்ணின் மாமியாரின் நடவடிக் கைகள் அவர்களை பயமுறுத்தி, அவரவர் வீட்டுக்கு கொண்டு போய் விட்டு விட்டது.

அப்பெண், உன் கணவரின் மீது, எந்த மந்திரமும் செய்யவில்லை. நீ ஏதாவது மந்திரம் செய்து, கணவரை மாற்றுவது வீண் வேலை, வெ ட்டி வேலை. உன் கணவருக்கும், அவளுக்கும் இடையே எண்ணில டங்கா தடவை தாம்பத்யம் நடந்துள்ளது. உன் கணவருக்கு இது குற்றம், இது, மிக மிக ஆபத்தானது என தெரிகிறது; ஆனாலும், சபலம் எந்த ஆணை விட்டது?

உன் பிரச்னைக்கான தீர்வை பார்ப்போமா மகளே…
* இருவரும் வாராவாரம் செல்லும் தேவாலயத்துக்கு செல்லுங்கள். பங்கு தந்தையிடம் உன் கணவரை பாவ மன்னிப்பு பெறச் சொல். உன்னிடம் சொல்லாத, பல உண்மைகளை உன் கணவர் பங்கு தந்தையிடம் கூறி விடுவார்.
* அப்பெண்ணின் ஊரின் அருகிலிருக்கும் உன் கணவரின் கடையை மூடச் சொல்; நீ விரும்பும் புதிய இடத்தில் கடை வைக்கச் சொல். “டிவி’ மெக்கானிக் தவிர, வேறு ஏதாவது தொழில் உன் கணவருக்கு தெரிந்தால், தொழிலை மாற்று.
* கணவரின் மணிபர்சில் நீ, உன் கணவர், குழந்தை சேர்ந்த குரூப் போட்டோ இருக்கட்டும். வேறு புகைப்படங்கள் இருந்தால், யாரென கேட்காமல், கிழித்துப் போட்டு விடு.
* உன் வெளிதோற்றத்தையும் கம்பீரமாக வைத்துக் கொள்.
* எந்த வேலைக்குப் போனாலும், இரவுக்குள் வீடு திரும்பும் பழக்கத்தை கட்டாயப்படுத்து.
* அடுத்த குழந்தை பெற முயற்சி செய். அடுத்து பிறப்பது பெண் குழந்தையானால், உன் கணவரின் பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும்.
* அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்ல, யார் வாங்கும் கடனுக்கும் உன் கணவரை ஜாமின் கையெழுத்து போட விடாதே.

* கடிதத்தில், உங்களது இருதரப்பு பெற்றோர் பற்றி குறிப்பிடவில் லை. நீங்களிருவருமே காதலித்து, ஊரை விட்டு ஓடி வந்து, திரு மணம் செய்து கொண்டவர்கள் போல் தெரிகிறது. இரண்டு பக்கமும் சமாதானக் கொடி காட்டு. வீட்டுப் பெரியவர்கள் கண்காணிப்பில் இருந்தால், உன் கணவரின் தவறுகள் குறையும்.
* தினமும், அவர் வேலை முடிந்து வந்ததும், குழந்தையைக் கொடு த்து கொஞ்ச சொல். குழந்தைக்கும், உன் கணவருக்கும் இடையே இருக்கும் பாசப் பிணைப்பை அதிகரி.
* மாதம் ஒருமுறை நீ, உன் கணவர், குழந்தை மினி சுற்றுலா செல் லுங்கள்.
“கொள்ளையிடப்படாதிருந்தும் கொள்ளையிடுகிறவனும், துரோக ம் பண்ணாதிருக்கிறவர்களுக்கு துரோகம் பண்ணுகிறவனு மாகிய உனக்கு ஐயோ… நீ கொள்ளையிட்டு முடிந்தபின் கொள் ளையிடப் படுவாய்; நீ துரோகம் பண்ணித் தீர்த்த பின், உனக்கு துரோ கம் பண்ணுவர்…’ – பரிசுத்த வேதாகம வரிகளை, உன் கணவருக்கு ஞாபகப்படுத்து மகளே!