Home சூடான செய்திகள் உறவில் பெண்கள் உச்சமடைவதை குறித்த 3 மூடநம்பிக்கைகள்!

உறவில் பெண்கள் உச்சமடைவதை குறித்த 3 மூடநம்பிக்கைகள்!

23

Capture-153மூடநம்பிக்கை என்பது நமது நாடு, நமது கலாச்சாரம் என்று மட்டுமில்லாமல் உலக நாடுகள் அனைத்திலும் இருந்து வருகிறது. வேலை, வாழ்வியல், மருத்துவம், இல்லறம், தாம்பத்தியம் என அனைத்திலும் ஏதேனும் மூடநம்பிக்கை புதைந்திருக்கிறது.
இதில் விண்வெளி சார்ந்த பலவன அறிவியல் என்று அறியாமல் வேறு சில சக்திகள் என கருதும் மூடநம்பிக்கைகள் ஏராளம்.
விண்வெளி என்று மட்டுமில்லை, மனிதர்களின் உணர்ச்சி ரீதியாகவும் பல மூடநம்பிக்கைகள் சமூகத்தில் பரவிக் கிடக்கின்றன.
உறவில் ஈடுபடும் போது பெண்கள் உச்சம் அடைவது பற்றி பல கருத்துக்கள் நிலவி வருகின்றன. சில சமயங்களில் இவை பெண்களின் குறைபாடு என தவறாக கருதப்படுவதும் உண்டு. இவற்றில் பெரியளவில் பெண்களின் உச்சம் சார்ந்து நம்பப்படும் மூடநம்பிக்கைகள் பற்றி இனிக் காண்போம்…
பெரும்பாலும் இந்த கருத்து ஆண்கள் மத்தியில் நிலவிவரும் ஒன்றாகும். ஆண்குறியின் அளவுக்கும் பெண்கள் உறவின் போது அடையும் உச்சத்திற்கும் சம்மந்தம் இல்லை என உடலியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
பெண்ணுறுப்பில் முதல் இரண்டு அங்குலம் வரை தான் உணர்ச்சி தூண்டிவிடப்படும் என்றும், அதற்கு அப்பால் இவ்வுணர்ச்சி தூண்டுதல் இருக்காது எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கின்சே ஆராய்ச்சி நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பெண்கள் உறவில் ஈடுபடும் உச்சம் அடைவதற்கும் ஆண்குறி அளவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லையென கண்டறிந்துள்ளனர்.
உறவில் ஈடுபடும் போது உச்சம் அடைவதில், ஒவ்வொரு பெண்ணுக்கு மத்தியிலும் வேறுபாடுகள் இருக்கின்றன. ஒருசிலருக்கு வெஜினாவிலும், ஒருசிலருக்கு கிளிடோரிஸ்-லும் தூண்டுதல் ஏற்படுகிறது.
எதுவாக இருப்பினும், முப்பது சதவீதம் வரையிலான பெண்கள் உறவில் ஈடுபடும் போது உச்சம் அடைவதில்லை என பல ஆய்களில் கண்டறியப்பட்ட தகவலாகும்.
உறவில் ஈடுபடும் தான் பெண்கள் உச்சம் அடைவார்கள் என்பதில்லை. பெண்கள் ஃபோர் ப்ளேவிலும் கூட உச்சம் அடைவதுண்டு. மேலும், பெண்கள் உச்சம் அடைய இந்த ஃபோர் ப்ளேதான் பெரும்பாலும் உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
உறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இடையே உறவை பற்றியும், உணர்ச்சியை பற்றியும் துணையிடம் கேள்விக் கேட்க வேண்டாம். இது அவர்கள் தங்களுக்கு ஏதேனும் குறை உள்ளது என்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிடும். இது முற்றிலுமாக உறவை சிதைக்கும் கருவியாக கூட மாறலாம்.