Home ஆரோக்கியம் பெண்கள் மாதவிலக்கின்போது செய்யும் செயலால் ஏற்படும் நோய்கள்

பெண்கள் மாதவிலக்கின்போது செய்யும் செயலால் ஏற்படும் நோய்கள்

48

பொதுமருத்துவம்:சமீப காலமாக கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மிகவும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக கர்ப்பப்பையில் கட்டிகள் ஏற்படுதல், அது நாளடைவில் புற்றுநோயாக மாறுதல் ஆகிய பிரச்சினைகளால் இறுதியில் கர்ப்பப்பையையே எடுத்துவிடுகிற சூழல் உண்டாகிறது.

அப்படியே அதை எடுத்துவிட்டாலும் அதற்குப் பின்பாவது அவர்களால் நிம்மதியாக இருக்க முடிகிறதா என்ன? அதற்குப் பிறது இன்னும் ஏராளமான தொல்லைகளை அவர்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

மருத்துவம் ஆங்கில மருத்துவ ஆய்வின்படி, குணப்படுத்த முடியாத நோய்களின் பட்டியலில் 15 ஆவது இடத்தில் இந்த கர்ப்பப்ழப சம்பந்தப்பட்ட நோய்கள் இருக்கின்றன.

மாதவிலக்கு அன்றும் இன்றும் மாதவிலக்கு குறித்த சில அடிப்படைகளைப் புரிந்து கொண்டாலே போதும். நமக்கு இந்த பிரச்சினையில் உள்ள சிக்கல் குறித்து விளங்க ஆரம்பித்துவிடும். நம்முடைய முன்னோர்களுக்கு மாதவிலக்கு உண்டான போது எத்தனை நாட்களில் குணமானது? தற்போதைய பெண்களுக்கு எத்தனை நாட்களில் குணமானது?

ஒழுங்கற்ற மாதவிடாய் நம்முடைய முன்னோர்கள் காலத்திலும் முறையற்ற மாதவிலக்கு இருந்திருக்கும். இன்றைய பெண்களில் பெரும்பாலானோருக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது. ஆனால் அவர்களுக்கும் இன்றைய பெண்களின் முறையற்ற மாதவிலக்குக்கும் என்ன வித்தியாசம் என்பதில் தான் நாம் கவனம் கொள்ள வேண்டும்

மாதவிலக்கு என்பது என்ன? பெண்கள் பருவமடைந்த பின் ஏற்படுகிற ஒரு சுழற்சி முறை. பெண்ணுடைய சினைப்பைக்குள் இருக்கின்ற கருமுட்டை கருக்குழாயின் மூலமாக கருப்பைக்குள் சென்று, ஆணின் விந்து உயிரணுக்களுக்காக காத்திருக்கும். இந்த கருமுட்டை ரத்தத்தினால் ஆன ஒரு பை உருவாகி, தாங்கிப் பிடித்திருக்கும்.

சுழற்சி நாட்கள் ஆணின் உயிரணுக்கள் கிடைக்காத பட்சத்தில் கருமுட்டை மற்றும் ரத்தத்தினால் ஆன பை இரண்டுமே உடைந்து பிறப்புறுப்பின் வழியே வெளியேறும். இது 28 நாட்களுக்கு ஒருமுறை நிகழ்ந்து கொண்டே இருக்கும். இதுதான் இந்த சுழற்சி முறை. இது தொடர்ந்து மூன்று நாட்கள் வரையிலும் ரத்தப்போக்கை ஏற்படுத்தும்.

சுழற்சி மாற்றங்கள் ஆனால் இன்றைய காலத்தில் பெண்களுக்கு அந்த சுழற்சி முறைகள் முறையாக இருக்கிறதா என்று யோசித்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மூன்று நாட்களுக்குள் வெளியேற வேண்டிய இந்த கழிவுகள் 5 முதல் 6 நாட்கள் வரையிலும் தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கிறது. குறிப்பிட்ட சில நாட்களுக்கு முன்பாகவே வெளியேறுதல், அதிக வலி ஏற்படுதல், அதிக உதிரப்போக்கு, சில சமயங்களில் ஒரு நாள் மட்டும் வெளியேறுதல் போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. சிலருக்கு சில மாதங்கள் வரையிலும் மாதவிலக்கு ஏற்படாமல் இருக்கும்.

காரணங்கள் நம்முடைய உடலைப் பற்றிய தெளிவு இல்லாமல் போனதும் இதற்கு ஒரு காரணம். நம்முடைய வாழ்க்கை முறை ஒரு காரணம். அந்த காலத்தில் மாதவலிக்கு சமயங்களில் பெண்கள் குளிக்க மாட்டார்கள். எந்த வேலையும் செய்யாமல் தீட்டு என்று வீட்டுக்கு ஒதுக்குப்புறத்தில் ஓரமாக இருப்பார்கள். பருத்தித் துணிகளைச் செய்தார்கள்.

உடல் வெப்பமடைதல் மாதவிலக்கு கழிவுகளானது மிகவும் சரியாக வெளியேற உடலின் சூடு மிகவும் துணைபுரிகிறது. அதனால் அவர்கள் குளிப்பதைத் தவிர்த்தார்கள். அதனுடைய விளைவு உடலின் வெப்பம் குறையாமல் கழிவை வெளியேற்றுவதற்கு அந்த உடல் வெப்பம் பயன்பட்டது. ஆனால் இப்போது பெண்கள் அவர்களுடைய சூழ்நிலையின் காரணமாக தினமும் வழக்கம் போல குளித்துவிட்டு வருவதால் சூடு குறைவதால் கழிவுகள் சரியாக வெளியேறுவது தடைபடும்.

ஓய்வு அந்த காலக்கட்டங்களில் தீட்டு என்பது ஓரமாக அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் உடலில் எந்த வேலையும் செய்யாமல் இருந்ததால் வேலை செய்கின்ற பொழுது, ஆற்றல் வெளியேறாமல் முழு ஆற்றலும் கழிவை வெளியேற்றவே உபயோகப்படும். எப்போதும் போல் பசி எடுக்கின்ற பொழுது பிடித்த உணவுகளையும் தாகத்திற்கு தண்ணீரையும் உடல் கேட்கும்போதெல்லாம் ஓய்வும் தூக்கம் வரும்போது தூக்கத்தையும் உடலுக்குக் கொடுத்தாலே போதும்.