Home ஆரோக்கியம் பருவப் பெண்களின் நாப்கின் மாற்றுவது பற்றிய ஒரு தகவல்

பருவப் பெண்களின் நாப்கின் மாற்றுவது பற்றிய ஒரு தகவல்

162

பெண்களின்பெண்கள் மருத்துவம்:நாப்கின் பயன்படுத்தும் முறை பற்றி உங்கள் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. உங்கள் வீட்டு பெண் குழந்தை மாதவிடாய் சுழற்சி பருவத்தை அடைந்து விட்டாரா? பெற்றோர் உங்களின் முக்கிய கடமையானது நாப்கின் பயன்படுத்தும் முறை பயிற்றியும், மற்றும் அந்த சமயங்களில் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரத்தைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.

பெரும்பாலான தாய்மார்களும் பெண் பிள்ளைகளும் தங்களுக்குள்ளாக இதைப் பற்றி பேசிக் கொள்ளவே கூச்சப்படுகிறார்கள். அப்படி இருக்கும்போது அந்த குழந்தை யாரிடம் சென்று இதையெல்லாம் கற்றுக் கொள்ளும். அதனால் உங்களிடம் இருக்கும் தயக்கங்களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு கீழ்கண்ட விஷயங்களைக் கொஞ்சம் கற்றுக் கொடுங்கள்.

நாப்கின் பயன்படுத்தும் முறை சுத்தமான கைகளால், நாப்கின்னை சுற்றியுயள்ள பேப்பர உள்ளிட்ட அனைத்து பேக்கேஜன்களையும் நீக்க உங்கள் குழந்தைக்கு அறிவுறுத்துங்கள். நாப்கினை உள்ளாடை நடுவே வைத்து நன்கு அழுதவேண்டும், நாப்கின்களில் இரு ரேக்கைகள் இருந்தால் அதை உள்ளாடையின் முன்பகுதியில் அழுத்தி விடவேண்டும் எது நாப்கினை நகராமல் இருக்க உதவும் .இறுதியாக உள்ளாடை அணிந்து சவுகரியமாக இயல்பான வேளை செய்ய முடிகிறதா என்று பரிசோதித்து கோல்லும்படி உங்கள் குழந்தைக்கு அறிவுறுத்துங்கள் . ரசாயனம் இல்லாத நாப்கின் வாங்குவது மிகவும் நல்லது .

சுத்தமும் சுகாதாரமும் சாதாரண நாட்களை விட மாதவிடாய் நாட்களில் அதிக அளவில் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பது நல்லது. குறைந்தபட்சம் ஒவ்வொரு 3 முதல் 4 மணிநேரத்திற்கு ஒரு முறை நாப்கின் மாற்றும்படி உங்கள் குழந்தைக்கு அறிவுறுத்துவது மிகவும் அவசியம். அவளின் மாதவிடாய் சுழற்சி ஓட்டத்தை பொறுத்து நாப்கின் பயன்படுத்தும் கலாலாவை மாற்றி கொள்ளும்படி வலியுறுத்த வேண்டும் .

இரவில் நாப்கின் பயன்படுத்தும் முறை எப்போதும் அல்ட்ரா நைட் நாப்கின்கள் தூங்கும் போது பயன்படுத்துவது மிகவும் நல்லது. 100% கசிவு பாதுகாப்பு கொடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக பகல் நேரத்தில் இருக்கும் உதிரப்போக்கை விடவும் இரவில் சற்று அதிகமாகவே இருக்கும். பகலில் நாப்கினை விட்டு ரத்தம் வெளியேறாமல் கொஞ்சம் கவனமாகவோ அல்லது பாத்ரூம் போய் சரிசெய்து கொள்ளவோ முடியும். ஆனால் இரவில் தங்களை அறியாமல் தூங்கும்போது இவற்றில் கவனமாக இருக்க முடியாது. அதனால் இரவு நேரத்தில் மட்டும் எப்போதும் எக்ஸ்ட்ரா அல்ட்ரா நாப்கின்களை பயன்படுத்த சொல்லிக் கொடுக்க வேண்டும். அது அணிந்திருக்கும் ஆடைகளில் ரத்தக் கறை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.