Home சூடான செய்திகள் பெண்கள் அனுமதி இல்லாமல் கட்டில் உறவில் ஈடுபடக்கூடாது

பெண்கள் அனுமதி இல்லாமல் கட்டில் உறவில் ஈடுபடக்கூடாது

64

சூடான செய்திகள்:உலகம் முழுவதும் பெண்களை எவ்வளவு தூரம் அவர்களைத் தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்களோ, அதே அளவுக்கு கொடுமைப்படுத்தவும் செய்கிறார்கள்.

உலகம் முழுவதும் பல பெண்களும் விருப்பம், அனுமதி இல்லாமல் அந்த விஷியத்தில் ஈடுபட நிர்பந்திக்கபடுகிறார்கள். பெரும்பாலும் காதலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அவர்களின் ஆண் நண்பர்களே இவ்வாறு நிர்பந்திக்கிறார்கள் என்ற புள்ளி விவரமும் அண்மையில் உண்மையை போட்டுடைத்தது.

உண்மையில் இதனை கற்பழிப்பு, பாலியல் தொல்லை, வன்மம், பலாத்காரம் என்று தான் கூற வேண்டும். ஒரு பெண்ணாக நீங்கள் யோசித்து பாருங்கள் உங்கள் அனுமதி இல்லாமல் ஒருவர் உங்களை தொடும், பாலியல் சீண்டல்கள் செய்யும் பட்சத்தில் உங்களின் மனநிலை எப்படி அருவருப்பாக இருக்கும் என்று.

இந்த நிர்பந்தம் உடல் ரீதியானது மட்டுமல்ல. உணர்வுகளாலும், வார்த்தைகளாலும், கூட அவர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். விருப்பம் இல்லாமல் யாரையும், யாரும் அந்த விஷியத்திற்கு நிர்பந்திக்க கூடாது. ஒரு பெண்ணை அவளின் அனுமதி இல்லாமல் தொடவே கூடாது. அது உங்கள் மனைவி என்றாலும் சரி, விலை மெதுவாக இருந்தாலும் சரி.