Home பெண்கள் தாய்மை நலம் பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் மார்பகங்களில் ஏற்படும் வலி

பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் மார்பகங்களில் ஏற்படும் வலி

115

தாய் நலம்:கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணினுடைய உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்று தான் வயிறு பெருத்தல். அதைப் போலவே அவளது மார்பகங்களிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

குழந்தையை வயிற்றில் சுமக்கும் குறித்த தாய்க்கு மார்பகங்களில் மாற்றம் ஏற்படுவதற்கான காரணம், குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தைக்கு தேவையான ஆகாரத்தை மார்பகங்கள் மூலம் வழங்குவதற்கேயாகும்.

இதனால், இந்தக் கால கட்டத்தில் மார்பகங்களில் நிகழும் மாற்றம் காரணமாக குறித்த தாய்க்கு வலி ஏற்படும். மார்பகங்களில் உள்ள கொழுப்பு அடுக்குகள் தடிப்பாவதுடன் பால் சுரப்பிகளும் அதிகரிக்க ஆரம்பிக்கின்றன. அத்துடன் முலைக் காம்புகளின் நிறமும் மாற ஆரம்பிக்கும்.

இவை அனைத்தும் தாய்மையின் படிப்படியான வளர்ச்சிக் கட்டங்களே. இந்த மாற்றங்கள் குறித்து எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. மார்பகங்களில் ஏற்படும் இந்த மாற்றங்கள் காரணமாக தோன்றும் வலி சிலருக்கு கர்ப்ப காலத்தின் சில கட்டத்திலேயே வழமைக்கு திரும்பி விடும். மேலும் சிலருக்கு இந்த வலியானது தொடர்ந்து காணப்படும்.

இப்படியான நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்?
01. தாய்மார்களுக்கு காணப்படும் இந்த மார்பக வலியைக் குறைக்க வேண்டுமெனில், மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையிலான ஸ்போர்ட்ஸ்பிராவினை அணிதல் வேண்டும். அத்துடன் கம்பி வைத்து உருவாக்கப்பட்ட பிராவகைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.

02. கர்ப்ப காலத்தில் அதிகளவு நீர் அருந்த வேண்டும். அதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற திரவங்கள் வெளியேற்றப்படுவதுடன், மார்பகங்களில் ஏற்படும் வலியும் கணிசமாக குறைவடையும். தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து பருகுதல், பெருஞ்சீரகம், பென்டொனைட் மற்றும் இஞ்சி கலந்து பருகுதல் என்பன சிறந்தது.

03. கர்ப்பகாலத்தில் இரத்த உற்பத்திக்கு உப்பும் தேவையென தெரிவிக்கப்பட்டுள்ள போதும், இந்த உப்பைக் குறைப்பதால் மார்பகங்களில் ஏற்படும் வலி குறைவடையும் எனின் உப்பைக் குறைப்பது சிறந்தது.

04. ஒரு மேசைக் கரண்டி ஆளி விதையை உட்கொள்வது சிறந்தது. அத்துடன் இதன் மூலம் மலச்சிக்கல் ஏற்படுவதும் கட்டுப்படுத்தப்படும். ஆளி விதைகளை தண்ணீர், பழச்சாறு அல்லது யோகட் போன்றவற்றுடன் கலந்து பருகலாம்.
05. விட்டமின்கள் மற்றும் கனியுப்புக்கள் உள்ளடங்கலான உணவுப் பொருட்களை தேர்ந்து உண்ண வேண்டும். பொதுவாக பச்சைத் தாவரங்கள், விதைகள் மற்றும் தானியங்கள் போன்றவை இதற்கு சிறந்தது.

06. மார்பகங்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதன் மூலம் வலியை குறைக்க முடியும். இதற்கு துவாயை தண்ணீரில் நனைத்து மார்பகங்களின் மீது 10 – 15 நிமிடங்கள் வரை வைத்திருப்பதன் மூலம் மார்பகங்களில் ஏற்படும் வலியைக் குறைக்கலாம்.

07. சுடுநீர்க் குளியல் மேற்கொள்வதன் மூலமும் மார்பகங்களில் ஏற்படும் வலியைக் குறைக்கலாம்.