Home பெண்கள் அழகு குறிப்பு அழகான சருமத்தை பெற சமையல் அறையில் உள்ள பொருட்கள் போதும்..!!

அழகான சருமத்தை பெற சமையல் அறையில் உள்ள பொருட்கள் போதும்..!!

64

பெண்கள் அழகு:வீட்டில் எவ்வளவு அறைகள் இருந்தாலும், அனைத்து வேலைகளையும் செய்வதற்கு செல்லும் அறையின் பெயரே சமையல் அறையாகும்.

அங்கு அழகு குறிப்புகளுக்கு பயன்படுத்த கூடிய பல விடயங்களை அறிந்து கொள்வோம். இது நம் தோல் பிரச்சினைகளை குணப்படுத்த மற்றும் எந்த பக்க விளைவுகள் இல்லாமல் எங்கள் அழகை அதிகரிக்க உதவும் என்று கூறப்படுகின்றது.

தேன்:

இது உங்கள் சருமத்திற்காக மிகவும் பாதுகாப்பானது. தேன் இயற்கையான ஆண்டிசெப்டிக் மற்றும் மருந்தாக செயல்படுகிறது, இது தோலில் ஈரப்பதத்தை பாதுகாக்கும் ஒரு அருமையான பொருள். முகத்தை பிரகாசிக்க செய்கின்றது.

கடலை மாவு:

கடலை மாவு பாரம்பரியமாக அழகுக்காக பயன்படுத்தப்படுகிறது. , முக்கியமாக ஆழ்ந்த சுத்திகரிப்பு மற்றும் தோலை பாதுகாப்பதற்கு கடலை மாவு உதவுகின்றது. அத்துடன் இறுகிய தோலை மென்மையாக்குவதற்கும் கடலை மாவு உதவுகின்றது.

கடலை மாவுடன், யோகர்ட், எலுமிச்சை சாறு, மஞ்சள் மற்றும் பாதாம் ஆகிய பொருட்களை கலந்து கொள்ள வேண்டும். அதனை முகத்தில் பூசி 20 – 30 நிமிடங்களின் பின்னர் கழுவ வேண்டும். இது முகத்தின் நிறத்தை மாற்ற உதவும்.

முகத்தில் எண்ணெய் தன்மையை குறைக்க, தயிர் சேர்த்து கலந்து பூசவும். 20 நிமிடங்களுக்கு பிறகு அதை கழுவவும்.

முகப்பரு பாதிப்புக்கு உள்ளான தோல்களுக்கு, சந்தன தூள், மஞ்சள் மற்றும் பாலை, கடலை மாவுடன் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்களின் பின்னர் கழுவவும்.

முகத்தில் உள்ள ரோமங்களை நீக்குவதற்கு கடலை மாவினை நீருடன் சேர்த்து முகத்தில் பூச வேண்டும். அது காய்ந்தவுடன் முகத்தை கழுவ வேண்டும்.

முட்டை

முட்டைகளை பொதுவாக அவித்து அல்லது சமைத்து சாப்பிடுவோம். எனினும் அதனை முகத்தில் பூசினால் பல நன்மைகள் உண்டு. சுருக்கங்களைத் தடுக்கவும், சருமத்தை இறுக்கமடைய செய்யவும் உதவுவதற்காக முகத்தில் முட்டை பயன்படுத்தலாம். நேரடியாக உங்கள் முகத்தில் முட்டையின் வெள்ளை கருவை பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் நிறைய பணம் செலவு செய்யாமல் பொழிவான முகத்தை பெற முடியும். முட்டையின் வெள்ளை கரு சருமத்தை இறுக்கமாகவும் உறுதியானதாக்கவும் மாற்ற உதவுகின்றது.

முகத்திற்கு முட்டையை பயன்படுத்துவதற்கு முன்னர் வெள்ளை கரு மற்றும் மஞ்சள் கருவை தனியாக பிரித்து கொள்ள வேண்டும். முட்டை வெள்ளை கருவை முகத்தில் 10 நொடிகள் பூச வேண்டும். பின்னர் வெள்ளை கருவை முகத்தில் பூசி நன்று விரல்களில் மசாஜ் செய்ய வேண்டும்.

பின்னர் 30 நிமிடங்கள் முகத்திற்கு முட்டையை அப்படியே காய விட வேண்டும். காய்நத பின்னர் வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். உங்கள் தோல் வகையை பொறுத்து அனைவரும் பயன்படுத்த முடியும்.

உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கில் ஒரு குறிப்பிட்ட கலவை உள்ளது, இது வீக்கம் மற்றும் சரும பின்னடைவு குறைக்க உதவுகிறது. உருளைக்கிழங்கை ஒரு சிறிய அளவாக எடுத்து கந்தை துணியில் வைத்து, சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் குளிர விடவும், பின்னர் 15 நிமிடங்கள் உங்கள் கண்களுக்கு கீழ் குளிர்ந்த உருளைக்கிழங்கை வைக்கவும். அவற்றை அகற்றும்போது, அந்த கண்களின் கீழ் குறைவான வீக்கத்தை காண முடியும். மேலும் தொடர்ந்து இதனை பயன்படுத்தினால் கரு வளையங்களை குறைப்பதற்கும் இது உதவுகிறது.

இலவங்கப்பட்டை:

இலவங்கப்பட்டை தூளை உங்களுக்கு பிடித்த உதட்டு சாயத்திற்குள் கலந்து பூசவும். தேன் மற்றும் இலவங்கப்பட்டை தூளை சேர்த்து முகத்திலும் பூசி வரலாம். அது வரட்சியை போக்கும். இலவங்கப்பட்டை மிகவும் பலமான மசாலாப் பொருளாக உள்ளது, எனவே ஒரு சிறிய அளவு மிகப்பெரிய பலனை வழங்குகின்றது.

இந்த பொருட்களை உங்கள் சமையலறையில் மிகவும் எளிதாக காணலாம், சமையலறையில் இருந்து இந்த இயற்கை அழகு குறிப்புகள் உங்களுக்கு மிகவும் உதவும்.