Home ஜல்சா கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் தொழிலாளியாக மாறிய கதை இது

கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் தொழிலாளியாக மாறிய கதை இது

178

ஜல்சா செய்திகள்:தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 8 ஆண்டுகள் கன்னியாஸ்திரிகள் மடத்தில் வாழ்ந்த இளம்பெண் ஒருவர் துறவறத்தை விடுத்து பாலியல் தொழிலாளியாக மாறிய சம்பவம் பரவலாக பேசப்படுகிறது.

குறித்த இளம்பெண்ணின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பாதிரியார் இவருடன் பேச முயற்சித்ததாகவும் ஆனால், அதை தாம் நிராகரித்ததாகவும் இவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கொலம்பியாவின் Ituango பகுதியில் குடியிருந்து வருபவர் 28 வயதான Yudi Pineda. சிறுவயதிலேயே கன்னியாஸ்திரியாக துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசையால் அங்குள்ள மடம் ஒன்றில் தமது 10-வது வயதில் இணைந்துள்ளார்.

நீண்ட 8 ஆண்டுகள் அங்கே அவர் கன்னியாஸ்திரிகளுக்கான பயிற்சி மேற்கொண்டுள்ளார். அந்த 8 ஆண்டுகளும் தமது வாழ்க்கையில் மறக்கவே முடியாத மகிழ்ச்சியான நாட்கள் என குறிப்பிட்டுள்ள Pineda,

ஆசிரியர் ஒருவருடன் காதலில் விழுந்ததாகவும், அதன் பின்னர் தமது வாழ்க்கை தலைகீழாக மாறியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து தமது நீண்ட நாள் கனவான கன்னியாஸ்திரியாகும் முடிவை கைவிட்டு, மடத்தில் இருந்தும் வெளியேறியுள்ளார்.

பின்னர் நெஸ்லே நிறுவனத்தில் பணியாற்றி வந்த காலகட்டத்தில் ஜுவான் என்பவரை சந்திக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது.

அவர் ஆபாச வலைதளங்களுக்கான மொடல்களை தெரிவு செய்யும் பணி செய்து வந்துள்ளார். அவரது ஆலோசனையின்படி ஆபாச இணையதளம் ஒன்றில் மொடலாக இணைந்துள்ளார் Pineda.

துவக்க காலத்தில் மிகவும் அருவருப்பாக உணர்ந்ததாக கூறும் அவர் தற்போது அவ்வறாக இல்லை எனவும், ஒரு தொழில் எனவே இதையும் தாம் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மாதத்தின் ஒவ்வொரு ஞாயிறும் தாம் தேவாலயம் செல்வதாகவும், அது 8 ஆண்டுகள் கன்னியாஸ்திரி மடத்தில் இருந்தபோது பழக்கத்தில் கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.