Home சூடான செய்திகள் செக்ஸ் உணர்வுகள் பொது இடத்தில் வந்தால் என்ன செய்வது?

செக்ஸ் உணர்வுகள் பொது இடத்தில் வந்தால் என்ன செய்வது?

54

இன்றைய காலக்கட்டத்தில் இது பலரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாகும். பொதுஇடத்தில் நம் செக்ஸ் உணர்வுகளானது மிகவும் அதிகரித்து காணப்படுவதால், நாம் என்ன செய்ய போகிறோம் என்பதை அறியாமல் அரங்கேறும் அவலங்கள் பல. குழந்தை கற்பழிப்பில் தொடங்கி பேருந்தில் பெண்ணை பலாத்காரம் செய்வது வரையிலான அனைத்து பிரச்சனைகளும் பலர் வாழ்வை இன்றைய நாளில் சீரழித்து கொண்டுதான் வருகிறது. எதனால் இத்தகைய எண்ணங்கள் என நீங்கள் அறிவீர்களா? இந்த செக்ஸ் உணர்வை பொது இடத்தில் நாம் தவிர்ப்பது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்.

பொது இடங்களுக்கு செல்லும் முன் அமைதி:
நீங்கள் பொது இடங்களுக்கு செல்லும்முன் அமைதியாக இருத்தல் வேண்டும். குறிப்பாக, உங்கள் ஹார்மோனை தூண்டும் எந்த ஒரு செயல்களையும் செய்யக்கூடாது. ஒரு சிலர் அந்தரங்க திரைப்படம் பார்த்துவிட்டு உடனடியாக வெளியில் செல்வார்கள். அப்போது உங்களின் ஹார்மோன் தூண்டுதல் என்பது உடனடியாக நார்மல் நிலையை அடைவதில்லை. படிப்படியாக தான் அது இயல்பு நிலையை எட்டக்கூடும். அதனால், உங்கள் செக்ஸ் ஹார்மோன்களை தூண்டும் எந்த ஒரு செயலையும் வெளியில் செல்லும் முன் செய்யாதீர்கள்.

மது அருந்துதல்:
பொது இடங்களுக்கு செல்லும்முன் மது அருந்துதல் என்பது அறவே தவிர்க்க வேண்டிய ஒரு விஷயமாகும். ஒருசிலர், மது அருந்திவிட்டு பொது இடங்களுக்கு செல்வார்கள். இதனால், தன் நிலை மீறிய செயல்களை செய்யக்கூடும். அதனால், ஒரு ஆண்/பெண்ணுக்கு மானபங்கம் ஏற்பட்டாலும்… யாராலும் தடுக்க முடியாத பிரச்சனையாக இது அமைகிறது.

மனக்கட்டுப்பாடு:
இது மிகவும் அவசியமான ஒன்றாகும். நாம் வெளியில் செல்லும்போது காலத்தின் சூழ்நிலையால் ஒரு சில மாற்றங்களை நம் உடம்பில் சந்திக்கக்கூடும். அந்த மாதிரி நேரங்களில், நீங்கள் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி கையாள வேண்டியது அவசியமாகும். பொதுவாக பேருந்தில் பயணம் செய்யும்போது, கால நிலையால் ஏற்படக்கூடிய மாற்றத்தால் உங்கள் ஹார்மோன்கள் அதிகமாக சுரந்திடலாம். ஏதாவது அழகிய நினைவை, அந்தரங்கம் தவிர்த்து யோசிப்பதனால்… உங்கள் மன நிலை இயல்புடன் இருக்கக்கூடும்.

தனிமையை தவிர்த்திடுங்கள்:
பொது இடங்களுக்கு செல்லும் முன்… தனிமையில் இருப்பது போன்ற உணர்வை உங்கள் மனதில் ஊடுருவ செய்யாதீர்கள். நீங்கள் தனிமையில் இருப்பது போன்ற உணர்வை உங்கள் மனதில் கொண்டால், உங்கள் உடலோ/மனதோ துணை தேட ஆசைப்படலாம். தனிமையில் இருக்கும் ஒருவரிடம் காதலை சொல்ல, “அவர் கருப்போ, சிவப்போ… ஒல்லியோ, உயரமோ… நல்லவரோ, கெட்டவரோ…” ஒரு ஆண்/பெண் சம்மதிக்க இதுதான் காரணமாய் அமைகிறது. அதனால், முடிந்தளவிற்கு உங்கள் நெருங்கிய நட்பு வட்டாரத்துடன் இருந்திடுங்கள்.

பருவ பழக்கவழக்கம்:
ஒருவர் பருவ நிலையை அடையும் போது, அவருக்கு தேவையான ஒரு சில இயற்கை உணர்வுகள் என்பது கண்டிப்பாக கிடைத்திட வேண்டும். அந்த உணர்வுகளை மற்றவருக்கு தீங்கு விளைவிக்காத வகையில் கையாள கற்றுக்கொள்ளுங்கள். சுயஇன்பம் காண்பது கூட இந்த வகையை சார்ந்தது தான். ஒருவர் தன் மன நிலையை வெளிப்படுத்தாமல் அடக்கி ஆள…அதனால் கூட இன்னொருவரை துன்புறுத்தக்கூடும்.

ஓர் உதாரணம்,
உடலில் ஏற்படும் மாற்றத்தை ஒருவர் சரியாக செலுத்த மறுக்கும் நிலையில் தான் திருமணத்தை உடலுறவுக்காக மட்டுமே பயன்படுத்த ஆசைப்படுகிறார்கள்.

இதனால், அவர்களுக்குள் புரிதல் என்பது இருக்காது. பிரிதல் என்பது மட்டுமே இருக்கக்கூடும். இறுக்கி அணைத்து முத்தம் தருவது எதற்கு என தெரியாத வரையிலும்…

ஒருசிலருக்கு இதனால்… செக்ஸ் மீது இருக்கும் ஈடுபாடும் குறையக்கூடும்.

மனித உடல் என்பது பல வித அசைவ பொருளால் ஆனது என்றாலும், மனிதன் மனம் என்பது அவ்வாறு இருப்பதால் தான் குழந்தையை துன்புறுத்துதல், பாலியல் வன்புணர்வு ஆகியவை நடந்தேறுகிறது. அதனால், மற்றவர் உடலுக்கு மரியாதை கொடுத்திடுங்கள். மனது தானாக உங்களிடம் வந்து சேரும். 100 சதவிகிதம் காதல் மட்டுமே கொண்டு…