Home ஆரோக்கியம் மார்பு வரை வேதனை தரும் வாயு தொல்லையை விரட்ட எளிய வழி இதோ!

மார்பு வரை வேதனை தரும் வாயு தொல்லையை விரட்ட எளிய வழி இதோ!

24

வாயு தொல்லை என்பது மிகப்பெரிய தொல்லையாக உருவெடுத்துள்ளது. இது பல்வேறு நோய்களுக்கு வழிவகுப்பதாய் இருக்கிறது. இதனை எளிதில் விரட்டலாம்.

தேவையான பொருட்கள்:

சுக்கு – 50 கிராம்
மிளகு – 50 கிராம்
திப்பிலி – 50 கிராம்
இந்துப்பு – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்
கருஞ்சீரகம் – 50 கிராம்
கடுக்காய் – 50 கிராம்
பெருங்காயம் – 50 கிராம்
சாதிக்காய் – 50 கிராம்

செய்முறை:

மேலே குறிப்பிட்ட அனைத்தையும் முதலில் முறைப்படி சுத்தம் செய்ய வேண்டும்.

இதையடுத்து, அனைத்துப் பொருட்களையும் தனித்தனியாக இடித்து பொடியாக்க வேண்டும். பின்னர், இடித்து பொடியாக்கிய பொருட்களை ஒன்றாக கலக்க வேண்டும்.

சாப்பிடும் முறை:

இந்தப் பொடியை ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொண்டு, தேனிலோ, மோரிலோ, வெந்நீரோ கலந்து காலை மற்றும் இரவு நேரங்களில் சாப்பிட வேண்டும்.

குணமாகும் நோய்கள்:

இதனை முறையாக அனுதினமும் கடைபிடித்தால் வாயு தொல்லை, இருக்கும் இடம் தெரியாமலேயே மறைந்து விடும்.

இந்தப் பொடியை சாப்பிடுவதால் விலா எலும்பு வலி, இடுப்பிலிருந்து மார்பு வரை வேதனை தரும் வாயு தொல்லை, மூச்சை அழுத்தி பிடிக்கும் நெஞ்சு வலி அனைத்தும் காணாமல் போய்விடும்.