Home ஜல்சா மனைவியை நண்பனுடன் படுக்க வைத்தவனின் நிலை..?

மனைவியை நண்பனுடன் படுக்க வைத்தவனின் நிலை..?

62

Sri-Lanka-Sexதனது மனைவியை பயமுறுத்தி தனது நண்பன் மூலம் பாலியல் துஸ்பிரயோகப்படுத்திய நபருக்கு 22 வருட சிறைத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தனது மனைவியை ஆயுதங்களை காட்டி பயமுறுத்தி தனது நண்பணுடன் உறவுகொள்ள செய்துள்ளார்.
இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் கேகாலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்தமைக்கு அமைவாக அவரது கணவனும்,நண்பனும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இது தொடர்பான விசாரணையானது நேற்று முன்தினம் கேகாலை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது குறித்த கணவனுக்கும் இவரது நண்பணுக்கும் முதலாவது குற்றச்சாட்டுக்காக 12 வருட சிறைத்தண்டணையும்,இரண்டாவது குற்றச்சாட்டுக்காக 10 வருட சிறைத்தண்டனையும் நீதிவானால் வழங்கப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் 25,000 ரூபாய் தண்டப்பணமும் அறவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு சந்தேகநபர்கள் இருவரும் 3 இலட்சம் இழப்பீட்டு தொகையும் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, குறித்த வழக்கின் தீர்ப்பினை அவதானிக்க நீதிமன்றிட்கு வந்திருந்த குறித்த பெண் தீர்ப்பினை அடுத்து தலை குனிந்தவாரே நீதிமன்றை விட்டு வெளியேறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது