Home ஜல்சா நண்பனை நம்பிச் சென்ற பெண் : நால்வரால் துஷ்பிரயோகம்

நண்பனை நம்பிச் சென்ற பெண் : நால்வரால் துஷ்பிரயோகம்

47

இந்தியாவின் டெல்லியில் மாணவியொருவர் 2 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவது,

தெற்கு டெல்லியின் கல்காஜி பகுதியை சேர்ந்த 16 வயதுதான பெண் குர்கானில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த சனிக்கிழமை பாதிக்கப்பட்ட அந்த பெண்ணும் அவரது நண்பரான கரணும் இருச்சக்கர வாகனத்தில் ஒன்றாக கோவிலுக்கு சென்றனர்.

பின்னர் கரண் தனது தோழியை கல்காஜியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் அந்த பெண்ணை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரை அடைத்து வைத்து மேலும் தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர். இதனை அவர்கள் வீடியோ எடுத்த பின்னர் அந்த பெண்ணை அனுப்பியுள்ளனர்.

நண்பன் மற்றும் அவனது நண்பனால் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த பெண் நடந்ததை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

காவல்துறையில் முறைப்பாடு அளித்த பின்னர் அந்த பெண்ணை பரிசோதித்ததில் அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை காவல்துறை தீவிரமாக தேடிவருகிறது.