Home சூடான செய்திகள் உல்லாசம் அனுபவிப்பதை பார்க்க ஆசைப்பட்டு தோழியை கணவனுக்கு விருந்தாக்கிய பெண்

உல்லாசம் அனுபவிப்பதை பார்க்க ஆசைப்பட்டு தோழியை கணவனுக்கு விருந்தாக்கிய பெண்

31

வேறொரு பெண்ணுடன் உல்லாசம் அனுபவிப்பதை பார்க்க ஆசைப்பட்ட பெண், தனது தோழியை கணவனுக்கு விருந்தாக்கிய சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

பெங்களூர் ஜாலஹள்ளி, சிக்கபானவரா அப்பிகெரே பகுதியை சேர்ந்தவர் திலீப் (வயது 27). இவருடைய மனைவி ஆஷா (25). இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திலீப் அந்த பகுதியில் கேபிள் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார்.

இவர்களின் வீட்டிற்கு அருகே 26 வயதான பெண் மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வசித்து வருகிறார். அவருக்கு திருமணமாகி, 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது. மீனாவும், ஆஷாவும் பக்கத்து வீட்டில் வசித்து வருவதால் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர்.

இதனால் ஆஷாவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று மீனா நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பது வழக்கம். இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆஷாவுக்கு ஒரு விசித்திரமான எண்ணம் தோன்றியது. அதாவது, தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசம் அனுபவிப்பதை நேரில் பார்க்க வேண்டும் என்று அவருக்கு தோன்றியது. இதுபற்றி கணவர் திலீப்பிடம் ஆஷா தெரிவித்துள்ளார்.

இதற்கு திலீப்பும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனை நிறைவேற்ற கணவன், மனைவி இருவரும் ஒரு சதி திட்டம் தீட்டினார்கள். அப்போது தனது கணவருடன், பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது தோழியான மீனாவை உல்லாசம் அனுபவிக்க வைத்து, அதை தான் நேரில் பார்க்க வேண்டும் என்று ஆஷா முடிவு செய்தார். இதுபற்றி திலீப்பிடம் ஆஷா தெரிவித்தார். இதற்கு திலிப்பும் சம்மதம் தெரிவித்தார்.

அதன்படி, கடந்த ஜூலை மாதம் 27–ந் தேதி மீனாவை தனது வீட்டிற்கு ஆஷா அழைத்து சென்றார். அப்போது தன்னுடைய கணவருடன் உல்லாசம் அனுபவிக்கும்படியும், அதை தான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் மீனாவிடம் ஆஷா கூறியுள்ளார். இதனை கேட்ட மீனா அதிர்ச்சி அடைந்தார். உடனே ஆத்திரமடைந்த மீனா, ஆஷாவுடன் தகராறு செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு செல்ல முயன்றார்.

அப்போது ஆஷா திடீரென்று மீனாவை தனது கணவர் இருந்த அறைக்குள் தள்ளி, வெளிப்புறமாக கதவை பூட்டிக் கொண்டார். உடனே திலீப் தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக மீனாவை பலவந்தமாக 2 முறை கற்பழித்ததாக கூறப்படுகிறது. தனது தோழியுடன் கணவர் சல்லாபத்தில் ஈடுபட்டதை ஆஷா, அறையின் ஜன்னல் வழியாக பார்த்து ரசித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் திலீப்பும், ஆஷாவும், நடந்த சம்பவத்தை வெளியில் யாரிடமாவது சொன்னால், உனது குழந்தை, கணவர் மற்றும் உன்னையும் கொலை செய்து விடுவதாக மீனாவை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மீனா வெளியில் யாரிடமும் கூறவில்லை.

பின்னர் மீனா தனது குழந்தையுடன் சொந்த ஊருக்கு சென்று சில நாட்கள் இருந்து விட்டு, மீண்டும் பெங்களூருக்கு திரும்பி வந்தார். இதற்கிடையில், கடந்த 10–ந் தேதி திலீப்பும், அவரது மனைவி ஆஷாவும் மீனாவின் வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு மீனா மட்டும் தனியாக இருந்துள்ளார். அந்த சமயத்தில், மீனாவிடம் தனது கணவருடன் மீண்டும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று ஆஷா சொன்னதாக தெரிகிறது.

இதனை கேட்ட மீனா கடும் ஆத்திரம் அடைந்ததுடன், ஆஷாவிடமும், திலீப்பிடமும் சண்டை போட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவரும் அங்கிருந்து தங்களது வீட்டிற்கு சென்று விட்டனர். அதைத்தொடர்ந்து மீனா தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது கணவரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

அதன் பின்னர் கடந்த 11–ந் தேதி கங்கமனகுடி போலீஸ் நிலையத்தில் மீனாவின் கணவர் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீப்பையும், அவரது மனைவி ஆஷாவையும் கைது செய்தனர்.

விசாரணைக்கு பிறகு அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பெங்களுர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தனது கணவர், வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசம் அனுபவிப்பதை நேரில் பார்க்க வேண்டும் என்ற வினோத ஆசையில் தனது தோழியை கணவனுக்கு மனைவியே விருந்தாக்கிய சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.