Home சமையல் குறிப்புகள் food-curry மணமணக்கும் கருவாடு கத்திரிக்காய் தொக்கு

food-curry மணமணக்கும் கருவாடு கத்திரிக்காய் தொக்கு

22

கத்திரிக்காய் கருவாடு சேர்த்து சமைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும். கருவாடுடன் கத்திரிக்காய் சேர்த்து தொக்கு எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கத்திரிக்காய் – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 1/4 கிலோ
கருவாடு – 100 கிராம்
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 4
பூண்டு – 4 பல்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு -சுவைக்கேற்ப

செய்முறை

கத்திரிக்காய், வெங்காயம், மிளகாய், தக்காளி, கொத்தமல்லி தழையை பொடியாக அரிந்து கொள்ளவும்.

பூண்டை தட்டிக் கொள்ளவும்.

கருவாட்டை நன்றாக மண் இல்லாமல் சுத்தமாக கழுவி சிறிய துண்டாக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்ட கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு வெடித்தவுடன் கறிவேப்பிலை, மிளகாய், தட்டிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

கத்திரிக்காய் பாதியளவு வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பிரட்டி விடவும். தேவைப்பட்டால் சிறிது நீர் தெளித்து கொள்ளலாம். கருவாடு சேர்த்து சிம்மில் 10 நிமிடம் ஞமடி வைக்கவும்.

ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது மூடியை திறந்து கொத்தமல்லி தழை தூவி கிளறி விட்டு இறக்கி பரிமாறவும்.

கமகமக்கும் கருவாடு கத்திரிக்காய் தொக்கு ரெடி!