Home பெண்கள் பெண்குறி குழந்தை பிறந்த பிறகு பெண்ணின் பிறப்புறுப்பு விரிந்து விடுமா?

குழந்தை பிறந்த பிறகு பெண்ணின் பிறப்புறுப்பு விரிந்து விடுமா?

456

பெண்ணுறுப்பு தகவல்:மதமும் சமுதாயமும் பெண்ணின் உடல் மீது பல போலியான நம்பிக்கைகளை கட்டமைத்துள்ளன. அதில் முக்கியமானது கன்னித்திரை.

இதுகுறித்து ஏகப்பட்ட கதைகள் உலா வருகின்றன. முதலிரவன்று கன்னித்திரை கிழிந்தால், அந்தப் பெண் கன்னித்தன்மை இழக்காமல் ஒழுக்கமாக இருக்கிறாள் என்று அர்த்தம் என பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கன்னித்திரை குறித்த மக்களின் எண்ணமும் மருத்துவத்தின் உண்மையும் என்னவென்று பார்க்கலாமா…

கன்னித்திரை என்பது என்ன?

பெண்ணின் பிறப்புறுப்பின் உட்பக்கத்தில் ஒரு இஞ்ச் தூரத்தில் இந்த கன்னித்திரை மெல்லிய சவ்வு படலம் போல் இருக்கும். ஒவ்வொரு பெண்ணுக்கும் வெவ்வேறு வடிவத்தில் இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு பிறை நிலா வடிவத்தில் இருக்கும்.

கன்னித்திரையும் போலி நம்பிக்கைகளும்…

திருமணமாகப் போகும் ஒவ்வொரு ஆணுடைய நண்பர்களும் ‘இரத்தம் பார்த்தால் தான் நாம ஆம்பிளை’ எனச் சொல்லி, சட்டைக் காலரை பெருமையாகத் தூக்கிவிட்டுக் கொள்வார்கள்.

ஆப்பிரிக்க பழங்குடி கிராமங்களில் திருமணமான அன்று, முதலிரவுப் படுக்கைக்காக வெள்ளை நிற விரிப்பை பயன்படுத்துவார்கள். அந்த விரிப்பில் பெண்ணின் ரத்தம் படிந்திருந்தால்தான் அந்தப் பெண் ஒழுக்கம் தவறாமல் கன்னியாக இருந்திருக்கிறாள் என அர்த்தம். அந்த விரிப்பை வீட்டின் முன்புள்ள கொடியில் போட்டு ஊருக்கே அதை அறிவிப்பார்கள். அப்படி ரத்தம் படிந்திராவிட்டால் அந்தப் பெண்ணின் அப்பாவும் அண்ணாவும் கல்லால் அடித்தே அந்த பெண்ணை கொன்றுவிடுவார்கள்.

இரத்தம் வராததும் இயல்பே…

திருமணமான புதிதில் உடலுறவின் போது இரத்தம் வராவிட்டால், அதற்கு தவறான நடத்தை உடைய பெண் என்று அர்த்தம் ஆகாது. 42 சதவீதப் பெண்களுக்கு மட்டுமே கன்னித்திரை கிழிந்து இரத்தம் வரும். “பெரும்பாலான பெண்களுக்கு கன்னித்திரை எலாஸ்டிக் போன்று நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையுடன் இருக்கும். உடலுறவில் ஈடுபட்டு முடிந்ததும் அது பழைய நிலைக்கு திரும்பிவிடும்’’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

சில பெண்களுக்குக் கன்னித்திரை சின்னதாக இருப்பதால் சின்ன வயதிலேயே கிழிந்து விடும். பெண்கள பூப்படைந்த பின் சைக்கிள் ஓட்டும் போதோ, பைக்கில் காலைத் தூக்கி உட்காரும்போதோ அல்லது விளையாட்டுகளில் ஈடுபடும் போதோ கூட இயல்பாக கன்னித்திரை கிழிந்துவிட வாய்ப்புள்ளது.

கன்னித்திரைக்கும் வந்துவிட்டது அறுவை சிகிச்சை

இந்திய மக்கள் தங்களின் கலாச்சாரத்தோடு கன்னித்தன்மையைத் தொடர்புபடுத்திப் பேசி வருகிறார்கள். மக்களின் தேவையே விற்பனை பொருளாகிவிடும், இந்தக் காலத்தில் கன்னித்திரை சவ்வு அமைப்பதற்கும் அறுவைசிகிச்சைகள் வந்துவிட்டன.

“கிழிந்த சவ்வுக்கு பதிலாக வேறு சவ்வு வைத்து அறுவைசிகிச்சை செய்து கொள்ள முடியும். இந்த அறுவைசிகிச்சை 40 நிமிடத்தில் முடிந்துவிடும்’’ என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்தியாவிலும் இந்த அறுவைசிகிச்சைகள் தற்போது பிரபலமடைந்து வருகிறது.

முதல் குழந்தை பிறந்த பிறகு பெண்ணின் பிறப்புறுப்பு விரிந்து விடுகிறது. அதை இறுக்கமாக்கி கொள்வதற்கும் பெண்கள் இந்த அறுவை சிகிச்சையைச் செய்துகொள்கிறார்கள்.