Home பெண்கள் அழகு குறிப்பு எதனால் உங்களுக்கு முகப்பரு வருதுன்னு தெரியுமா?

எதனால் உங்களுக்கு முகப்பரு வருதுன்னு தெரியுமா?

25

Captureமுகப்பரு அதிகம் வருவதற்கு முக்கிய காரணம், இரவில் படுக்கும் போது மேக்கப்பை நீக்காமல் இருந்தாலோ அல்லது நீரால் முகத்தைக் கழுவாமல் தூங்கினாலோ, சருமத்தில் அழுக்குகள் தேங்கி சருமத்துளைகளில் அடைப்புக்களை ஏற்படுத்தி, முகப்பருக்களை உண்டாக்கும்.

சிலர் முகத்தை அளவுக்கு அதிகமாக கழுவுவார்கள். இப்படி அதிகமாக முகத்தைக் கழுவினால், முகப்பரு வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கும். எனவே ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் முகத்தை கழுவாதீர்கள். இல்லாவிட்டால் சருமம் வறட்சியடைந்து, சருமத்தில் சுரக்கும் எண்ணெயின் அளவு அதிகரித்து, பிம்பிள் அதிகம் வர ஆரம்பிக்கும்.

சிலர் தங்களது முகத்திற்கு தினமும் ஏதேனும் க்ரீம் அல்லது மாய்ஸ்சுரைசர்களைப் பயன்படுத்தி வருவார்கள். இப்படி ஒருவர் அதிகமான அளவில் கெமிக்கல் கலந்த சரும பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தும் போது, அதில் உள்ள கெமிக்கல்கள் சருமத்துளைகளில் அடைப்புக்களை உண்டாக்கி, பருக்கள் அதிகம் வர வழிவகுத்துவிடும்.

தலைமுடி பராமரிப்பு பொருட்களுக்கும் முகப்பருவிற்கும் சம்பந்தம் இருக்காது என்று நினைக்காதீர்கள். நீங்கள் தலையில் கையை வைத்த பின், நேரடியாக முகத்தில் கையை வைக்கும் போது, அதில் உள்ள சிலிக்கான், சருமத்துளைகளை அடைத்து, பருக்களை உண்டாக்கும்.

சருமத்தை புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் வெளிக்காட்ட இறந்த செல்களை நீக்க ஸ்கரப் செய்ய வேண்டியது அவசியம். ஆனால் இந்த ஸ்கரப்பை ஒருவர் அதிகமாக செய்யும் போது, சருமத்தில் பாக்டீரியாக்கள் வேகமாக பரவி, பருக்கள் வர வழிவகுக்கும்

தலையணை உறையை வாரக்கணக்கில் பயன்படுத்தி வந்தால், அதனால் முகப்பருக்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும். எனவே தவறாமல் வாரத்திற்கு ஒருமுறையாவது தலையணை உறையை மாற்றுங்கள்.