Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களின் கண்இமை அழகாக இருக்க வீட்டு செய்முறை

பெண்களின் கண்இமை அழகாக இருக்க வீட்டு செய்முறை

52

பெண் அழகு:நம் முகத்துக்கு அழகு சேர்ப்பதே புருவங்கள்தான். சிலருக்கு புருவ முடி இல்லாமல் இருக்கும்… வேறு சிலருக்கு திடீரென்று அவற்றில் இருக்கும் முடி உதிர ஆரம்பித்து வயிற்றில் புளியைக் கரைக்கும்.. புருவத்தை காக்க வீட்டிலேயே பின்பற்றக்கூடிய இயற்கை வழிமுறைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

* விளக்கெண்ணெயை பஞ்சில் தொட்டு புருவங்களில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதை ஆறு வாரங்களுக்குத் தொடர்ந்து செய்துவரவும். விளக்கெண்ணெய் புருவ வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

* இதைத் தூங்குவதற்கு முன்னர் புருவத்தில் தேய்த்து, காலையில் கழுவிவிடவும். இது முடியின் புரோட்டீன் இழப்பைத் தடுக்கும். இதிலிருக்கும் லாரிக் அமிலம் (Lauric acid) புருவ முடி வேர்களை நுண்கிருமிகளிடம் இருந்து பாதுகாத்து, முடி வளர உதவும்.

* இதை விரலால் புருவங்களில் தடவி, மசாஜ் செய்து இரண்டு மணி நேரம் கழித்துக் கழுவவும். இரண்டு வாரங்களுக்கு இதைச் செய்துவந்தால் முடி வளரும். ஆலிவ் எண்ணெயில் இருக்கும் வைட்டமின் இ முடிக்கு ஊட்டச்சத்து அளிக்கும். வைட்டமின் ஏ உடம்பில் இயற்கையாகச் சுரக்கும் எண்ணெயை (Sebum) அதிகரிக்கும்.

* தூங்குவதற்கு முன்னர் இதைத் தேய்த்துவிட்டு காலையில் கழுவவும். இதிலிருக்கும் வைட்டமின் ஏ, பி, இ முடி வளர உதவும்.

* கற்றாழை ஜெல்லைத் தேய்த்து, 30 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இது விரைவில் முடி வளர உதவும்.

* ஒரு வெங்காயத்தைச் சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு, மூன்று டீஸ்பூன் தண்ணீர் கலந்து தேய்த்துவந்தால், முடி வளரும். வாரம் மூன்று முறை இதைச் செய்யலாம். இதிலிருக்கும் சல்ஃபர் முடி உதிர்வைத் தடுக்கும்.

* இதைப் புருவங்களில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். வாரத்துக்கு மூன்று முறை இதைச் செய்யலாம். இதிலிருக்கும் பயோட்டின் முடி வளர உதவும்.

* பாலைப் பஞ்சால் தொட்டுத் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். ஆறு மாதங்களுக்கு இதைத் தொடர்ந்து செய்துவர புருவ முடி சீராக வளரும்.

* செம்பருத்தி இலையை அரைத்து, புருவங்களில் தேய்த்துவர புருவ முடி வளரும்.