Home பெண்கள் தாய்மை நலம் பெண்களே உங்களுக்கு இலகுவாக கர்ப்பம் தரிக்க ஆசையா? கவணுடன் இப்படி சேருங்கள்

பெண்களே உங்களுக்கு இலகுவாக கர்ப்பம் தரிக்க ஆசையா? கவணுடன் இப்படி சேருங்கள்

442

Easy to pragnency:திருமணத்திற்கு பின் உடனே கருத்தரிக்க வேண்டும் என விரும்பும் பெண்கள் குறிப்பிட்ட சில நாட்களில் உடலுறவு வைத்துக் கொண்டால், விரைவில் கருத்தரிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தற்போதைய வாழ்க்கை முறை, தாமதமாக நடக்கும் திருமணம், வாழ்க்கையை என்ஜாய் செய்ய தம்பதிகளே ஒத்திப்போடுவது, போன்றவற்றால் நிறைய தம்பதிகள் கருத்தரிப்பில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். கணவன் இதுபோன்றவற்றை ஆதரித்தாலும், பெண்கள் உரிய காலத்தில் கருத்தரிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

திருமணமானவுடன் கருத்தரிக்க பெண்கள் சில முக்கியமான நாட்களை மனதில் வைத்து, கணவருடன் உடலுறவில் ஈடுபட வேண்டும். அந்த நாட்கள் குறித்து பார்க்கலாம்.

மாதவிடாய் சுழற்சியின் 8வது நாளில் இருந்து அதே சுழற்சியின் 19வது நாள் வரை பெண்கள் உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் என பெண்கள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நாட்கள் ஒவ்வொரு பெண்களுக்கும் வேறுபடும், அப்போது அவர்களின் உணர்ச்சிகளில் வித்தியாசம் ஏற்படும்.

கருமுட்டை உருவாகி கருவுறும் காலம் கருமுட்டை வெளிப்படுதல் என கூறப்படுகிறது. கருமுட்டை வெளிப்படுவதற்கு 5 நாட்களுக்கு முன்பும், அது முடிந்து 2 நாட்கள் கழித்தும் உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாம். அந்த சமயத்தில் பெண்ணின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் உடலின் அடிப்பகுதியில் வெப்பநிலை சற்று கூடுதலாக இருக்கும்.

இதனை கண்காணிக்க காலையில் எழுந்ததும் படுக்கையில் தெர்மா மீட்டரை வைத்து சோதிக்க வேண்டும். முதல் நாளோடு ஒப்பிடுகையில் வெப்பநிலை குறைந்திருந்தால் அப்போது உடலுறவுக் கொண்டால் நிச்சயம் கருத்தரிக்கலாம். இதற்காக பெண்கள் அவர்களது மாதவிடாய் சுழற்சியை 2-3 மாதங்களுக்கு கூர்ந்து கவனிக்க வேண்டும். சுழற்சிக்கு இடையே உள்ள நாட்களை கணக்கிடுவது மிகவும் அவசியம் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.

பெண்களின் அந்தரங்க உறுப்பில் இருந்து வெள்ளை திரவம் வெளியேறும் போது உடலுறவில் ஈடுபட்டால், கருமுட்டையுடன் விந்தணு இணைந்து கருவை உருவாக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். சரியான நேரத்தில் உடலுறவு கொள்வதன் மூலம் குழந்தைபேறு மட்டுமின்றி தம்பதிகளின் அன்னியோன்யம் அதிகரித்து தாம்பத்தியம் சிறக்கும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.