Home இரகசியகேள்வி-பதில் பெண்களுக்கான உடலுறவு பற்றிய சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும்

பெண்களுக்கான உடலுறவு பற்றிய சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும்

554

இரகசியகேள்வி-பதில்:திருமணமான புதிதிலும், கர்ப்பமான புதிதிலும் பெண்களுக்கு பல சந்தேகங்கள் ஏற்படும். திருமணமான புதிதில் உடலுறவு பற்றியும், உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் பலவித பயங்களும், சந்தேகங்களும் எழும். அதே போல முதல் முறை கர்ப்பமானவுடன் கர்ப்பகாலம் பற்றியும், பிரசவம் பற்றியும் பல்வேறு குழப்பங்களும், பயங்கள் எழும். இந்த சூழ்நிலையில் நமது சந்தேகங்களை தீர்த்து கொள்ள நமக்கு இருக்கும் ஒரே வழி மகப்பேறு மருத்துவர்களை அணுகுவதுதான்.

எவ்வளவுதான் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தாலும் மருத்துவரை நேரில் பார்த்து அவர்கள் வாயால் நமக்கு தேவையான பதில்களை கேட்பது போல் இருக்காது. ஆனால் நமக்கு எழும் அத்தனை கேள்விகளுக்கும் ஒவ்வொரு முறையும் மருத்துவரை தொடர்பு கொண்டு இருக்க முடியாது. எனவே மருத்துவர்கள் கூறிய பதிலை உங்கள் வீட்டிற்கே கொண்டு வருவதுதான் இந்த பதிவு. இந்த மருத்துவர்கள் கூறும் உடலுறவு, கர்ப்பகாலம், பிறப்புறுப்புகளில் ஏற்படும் மாற்றம் தொடர்பான பதில்கள் பெரும்பாலும் உங்கள் மனதில் இருக்கும் கேள்விகளுக்கான பதிலாக இருக்கும். பிரபல மகப்பேறு மருத்துவர்கள் தங்கள் நோயாளிகள் தங்களிடம் கேட்கும் முக்கியமான கேள்விகளைஇங்கே பார்க்கலாம்.

எனது பிறப்புறுப்பு சாதாரணமாக இருக்கிறதா? ” பெரும்பாலான பெண்களுக்கு அவர்களின் பிறப்புறுப்பு பற்றி எழும் முதல் கேள்வி , தன் பிறப்புறுப்பு மற்றவர்களுடையது போன்றுதான் இருக்கிறதா? இல்லையா? என்பதுதான் என்று கூறுகிறார் மவுண்ட் சினாயை சேர்ந்த இனப்பெருக்க மற்றும் மகப்பேறு பேராசிரியர் மருத்துவர் ரெபேக்கா சி. பிரைட்மன். ” அவர்கள் முதலில் கேட்பது, என்னுடைய யோனி சாதாரணமாக இருக்கிறதா?” உண்மையில் அவர்கள் கேட்கவருவது ” என்னுடைய பிறப்புறுப்பு சாதாரணமாக இருக்கிறதா?” என்பதைதான். சாதராண ” பிறப்புறுப்பு” என்று எதுவுமே இல்லை, அதில பல வகைகள் இருக்கிறது, பெண்கள் முதலில் அதனை புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக இதனை பற்றி நிலவி வரும் ஒரு கருத்து என்ன? ” அனைத்து பெண்களுக்கும் சீரான பெண்குறி இதழ்கள் இருக்கும் என்பதுதான். மருத்துவர் ரெபேக்கா கூறுகையில் ” சமசீரற்ற தன்மை அனைத்து பெண்களுக்கும் இருக்கும், ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்கள் ஆண்களின் பிறப்புறுப்பு போன்று பெண்குறியின் இதழ்களும் அளவிலும், வடிவத்திலும் மாறுபடும். எனவே எது சாதாரணமானது என்று கூதை வைத்து றுவது இயலாது. ” எனது அனுபவத்தில் பெண்கள் பெண்குறியை புரிந்து கொள்வதே சிறந்தது ” என்று ரெபேக்கா கூறுகிறார். மேலும் பல பெண்கள் தன்னிடம் ” 20 முதல் முப்பது வயது வரை உள்ள பெண்கள் அந்தரங்கள் பகுதியில் வளரும் முடியை பற்றி கேட்பதாகவும், அதற்காக சில மருந்துகளை பயன்படுத்துவதாகவும்” கூறுகிறார். அவ்வாறு மருந்துகளை உபயோகிப்பது அலர்ஜிகளை ஏற்படுத்தும் என்று ரெபேக்கா கூறுகிறார்.

ஒரு மார்பகத்தை விட மற்றொன்று பெரிதாக இருப்பது சாதாரணமானதா? ” இரண்டு மார்பகங்களுமே பெண்களுக்கு முக்கியம்தான் என நினைக்கிறன்”, மேலும் ” இளம்பருவத்தில் மார்பகங்கள் சீரற்று இருப்பது சகஜம்தான்” என்று ரெபேக்கா கூறுகிறார். இது வயதை பொறுத்தது என மருத்துவர் கூறுகிறார். சுய மார்பக பரிசோதனை அபாயகரமானது என்ற நம்பிக்கை நிலவி வருகிறது, ஆனால் நான் என் நோயாளிகளை சுய மார்பக பரிசோதனை செய்துகொள்ள ஊக்குவிக்கிறேன். அப்போதுதான் அவர்களுக்கு இது சாதாரணமானது என்பது புரியும். அந்த சமயத்தில் நீங்கள் ஏதேனும் வித்தியாசத்தை உணர்ந்தால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகலாம்.

மாதவிடாயின் போது எவ்வளவு வலி இருக்கும்? மருத்துவர் கோர்ட்னி லிம் கூறுகையில், ” 90 சதவீத பெண்கள் தங்கள் மாதவிடாயின் போது அதிகளவு வலியை உணருகிறார்கள்”. ” அது முதுகுவலி அல்லது வயிற்றுவலியாக இருக்கலாம், சிலசமயம் குமட்டல் அல்லது வயிற்றுப்போக்கு போன்றவையும் ஏற்படலாம். பெருமபாலானோருக்கு “சாதாரணமான” என்பதற்கு அர்த்தமே புரியவில்லை. மாதவிடாயின் போது வலி ஏற்படும் என்ற காரணத்திற்காக ” அதனை பற்றி கூறும் அனைத்து பொய்களையும் நம்பவேண்டும் என்ற அவசியமில்லை”. முதலில் இபியூரபின் போன்ற எதிர் அழற்சி மருந்துகளை பயன்படுத்தலாம். ஆனால் சிலசமயம் மாதவிடாயின் போது ஏற்படும் வலி மிகவும் கடுமையானதாக இருக்கலாம். அதுபோன்ற சமயங்களில் மருத்துவரை அணுகுவது நல்லது. இது தொடர்பான கேள்விகளை மருத்துவரிடம் கேட்க ஒருபோதும் தயங்கக்கூடாது. பெண்களுக்கு பாலியல் ரீதியாக ஏற்படும் பெரும்பாலான நோய்கள் குணப்படுத்த முடியாமல் போவதற்கான காரணம் அது சரியான சமயத்தில் கண்டறியப்படாததுதான். சமீபத்தில் 2500 பெண்களிடையே நிகழ்த்திய ஆய்வில் 66 சதவீத பெண்கள் நீண்ட கால வலியை அனுபவிப்பதாக கூறினார்கள். காரணம் அவர்களின் மருத்துவர்கள் வித்தியாசமான முறைகளை கையாண்டதுதான். எனவே முதலில் உங்கள் பிரச்சினைக்கு சரியான சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை கண்டுபிடியுங்கள். மாதவிடாய் கால வலிகளுக்கு சிகிச்சை உண்டு என்பதை பெண்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

பிறப்பு கட்டுப்பாடு எடுத்துக்கொள்வது மாதவிடாயை கட்டுப்படுத்துமா? இது பாதுகாப்பானதா இல்லையா என்பது இன்றும் விவாதத்திற்குரிய ஒன்றாகவே உள்ளது, என்று மகப்பேறு மருத்துவர் மற்றும் பேராசிரியர் மருத்துவர் ரேச்சல் சீய் கூறுகிறார். வழக்கமான மாதவிடாய் சுழற்சியில், கருப்பை புறணி தடிமனாக வளர்க்கப்பட்ட கரு வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு தயாராக உள்ளது, மற்றும் ஒன்று இல்லாவிட்டால், லைனிங் கொட்டுகிறது. ஹார்மோன் பிறப்பு கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படும் போது, கருப்பையின் புறணி தடிமனாக இருப்பதைக் காணலாம், ஆனால் கரு தங்க இயலாது என்ற கருத்து உள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல, ஹார்மோன்கள் பிறப்பு கட்டுப்பாடே கொண்டுவரும்போது அது தடிமனாக இருப்பதுடன், மாதவிடாயை தள்ளி போடவும் செய்கிறது. ஆரோக்கியமான மாதவிடாய் பற்றி பலவிதமான கருத்துக்கள் நிலவி வருகிறது. அதாவது ஆரோக்கியமான மாதவிடாய் என்பது காலஅளவு, இரத்தப்போக்கு போன்றவற்றை பொறுத்துதான் கணக்கிடப்படும். சராசரி வயது மாதவிடாய் சுழற்சி 28 முதல் 35 நாட்கள் வரை நீடிக்கிறது. பாதிக்கும் குறைவான பெண்களுக்கு ஒரு 28-நாள் சுழற்சியைக் கொண்டிருக்கிறது, பல பெண்களுக்கு இது தெரியாது.

பிறப்பு கட்டுப்பாடு எவ்வாறு என் கருத்தரிப்பை பாதிக்கிறது? டாக்டர் அபர்ணா ஸ்ரீதர் மகப்பேறு பேராசிரியராகப் பணியாற்றியவர் கூறும்போது, இன்று பிறப்பு கட்டுப்பாட்டுக்கு எடுத்துக்கொள்வது கர்ப்பமாக இருப்பதற்கான ஒரு பெண்ணின் தன்மையை பாதிக்கிறதா என அடிக்கடி கேட்கப்படுகிறது. முற்காலத்தில் இந்த கருப்பை சாதனம் சிலசமயம் கருப்பையை பாதிக்கக்கூடும். இப்போதுள்ள தொழில்நுட்ப உதவியுடன் உபயோகிக்கும் மாத்திரைகள், கருப்பை சாதனம் என அனைத்தும் கச்சிதமாக செயல்பட கூடியது மேலும் தேவைப்படும்போது உடனடியாக கர்ப்பமாகவும் இயலும். பெண்ணின் உடல் இதற்கு சில மாதங்கள் எடுத்துக்கொள்ளும். ஹார்மோன் சிகிச்சை தொடங்கும்முன் மருத்துவருடன் ஆலோசிப்பது நல்லது.

ஹெச்பிவி(HPV) பற்றி நான் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்? ஹியூமன் பாபிலோமா வைரஸ்(HPV) இன்று பாலியல்ரீதியாக அதிகளவில் பரவி வரும் நோயாகும். செக்ஸில் ஆர்வம் இருக்கும் என்பது சதவீதத்தினருக்கு இந்த தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மகப்பேறு மருத்துவரை அணுகும் அனைத்து பெண்களுக்கும் இந்த கேள்வி இருக்கும். இது என்ன செய்யும்? பலருக்கும் இந்த நோய்க்கான தாக்கியதோ அல்லது இந்த நோய்க்கான அறிகுறிகளோ ஆரம்பத்தில் தெரிவதில்லை. பிறப்புறுப்பு அலர்ஜிகள், புற்றுநோயை ஏற்படுத்தும் பெரும்பாலும் கர்ப்பப்பை புற்றுநோயைத்தான் உண்டாக்கும். பொதுவா வாய்வழி, யோனி வழி அல்லது குதவழி உடலுறவில் ஈடுபடும்போதும், ஆணுறை உபயோகிக்காத போதும் இந்த நோய் பரவுகிறது. இந்த நோய்க்கு சிகிச்சையே இல்லை என மருத்துவர் மேரி ரோசர் கூறுகிறார். ஆனால் நம்மால் நம்மை பாதுகாத்து கொள்ளமுடியும் என கூறுகிறார். கேரடாசில் 9 என்னும் தடுப்பூசி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உடலுறவுக்கு முன்னர் மட்டுமின்றி உடலுறவுக்கு பின்னும் இந்த தடுப்பூசியை பயன்படுத்தலாம். சில பெண்கள் எனக்கு ஏற்கனவே இந்த னாய் உள்ளது எனவே இந்த ஊசி என்னை பாதுகாக்காது என்று கூறுகிறார்கள், ஆனால் உண்மை அதுவல்ல உங்களுக்கு நோய் தாக்கியிருந்தாலும் இது அதன் வீரியத்தையும், பரவும் வேகத்தையும் குறைக்கும். இந்த வியாதி ஆண், பெண் இருவரையும் தாக்கக்கூடும், இருந்தாலும் இருவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது, இந்த நோய் இருக்கிறதா என்று ஆணுக்கு சோதனை செய்ய இயலாது, பெண்ணுக்கு மட்டுமே சோதனை செய்ய இயலும் என மருத்துவர் ரோசர் கூறுகிறார்.

வருடம்தோறும் மார்பு சோதனை செய்ய வேண்டுமா? ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் இல்லை. மருத்துவர்கள் கர்ப்பபையிலிருந்து செல்களை எடுத்து புற்றுநோய் அறிகுறிகள் இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்வார்கள் என்று மருத்துவர் சூசன் க்ளிப்பார்ட் கூறுகிறார். இந்த பரிசோதனை 21 வயதில் இருந்து தொடங்குமென்று அனைத்து பெண்களும் அறிந்து கொள்ளவேண்டும். பிறகு 29 வயது அடையும்வரை ஒவ்வொரு மூன்று வருடத்திற்கும் இந்த சோதனையை செய்ய வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பரிசோதனை ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்பட்டது, ஆனால் புதிய விதிமுறைப்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்தால் போதும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மருத்துவ விதிகளின் படி பெண்கள் உடலுறவில் ஈடுபட்டு வந்தாலும் 21 வயதிற்கு முன் இந்த பரிசோதனையை இதனை செய்ய மாட்டார்கள்.