Home சூடான செய்திகள் கட்டில் உறவில் ஆணும் பெண்ணும் ஆவலுடன் தேடும் புதையல்

கட்டில் உறவில் ஆணும் பெண்ணும் ஆவலுடன் தேடும் புதையல்

212

சூடான செய்திகள்:புணர்ச்சிப் பரவசநிலை’ (Orgasm)… உடலுறவின்போது ஆணும் பெண்ணும் ஆவலுடன் தேடும் புதையல். இன்பம் நிறைந்த இந்தப் பரவச நிலையை யாராலும் விளக்கிக் கூறமுடியாது, அதற்கு வார்த்தைகளும் கிடையாது.என்னிடம் ஒரு தம்பதி வந்தனர். “டாக்டர், எங்களுக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எனக்கு உச்சக்கட்ட இன்பம் என்றால் என்னவென்றே தெரியாது. இதுநாள்வரை அப்படியோர் உணர்வை நான் அனுபவித்ததே இல்லை. எங்களுக்குக் குறை ஏதும் இருக்குமா?’’ என்று அந்தப் பெண் கேட்டார். பரிசோதித்துப் பார்த்தபோது, அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லை. எனவே அவர்களுக்கு சில ஆலோசனைகளைச் சொல்லி அனுப்பினேன்.

புணர்ச்சிப் பரவசநிலை என்றால் என்னவென்று என்னைக் கேட்டால், ‘அது கடவுள் போல’ என்றுதான் சொல்வேன். ஆம், கடவுளை எப்படி உணரத்தான் முடியுமோ அதுபோலத்தான் இதுவும்; அனுபவித்தால்தான் புரியும். இதற்கு நெருக்கமான உதாரணமாகத் தும்மலைக் கூறலாம். கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி திடீரென வெடிக்கக்கூடிய தும்மலைப் போன்றதே புணர்ச்சிப் பரவசநிலை. இத்தகைய பரவசநிலை ஏற்படும்போது பெண்ணுறுப்பு, கர்ப்பப்பை, ஆணுறுப்பு என அனைத்தும் வேகமாகச் சுருங்கி விரியும். இந்தப் பகுதிகளில் உள்ள தசைகள் சுருங்கி விரிந்து தளர்வதால் புணர்ச்சிப் பரவசநிலை கிடைக்கும். இத்தகைய இன்பத்தை அடைந்த பிறகு, புயலுக்குப் பின் ஏற்படும் அமைதியைப்போல உடல் உறுப்புகள் முழுவதும் ஒருவித ஆழ்நிலைக்குச் சென்றுவிடும். நம்முடைய நரம்பு மண்டலம், நியூரோ ஹார்மோன்கள் என்று சொல்லப்படும் ஆக்ஸிடோசின் (Oxytocin), புரோலாக்டின் (Prolactin), எண்டார்பின் (Endorphin) ஹார்மோன்களின் கூட்டுச் செயல்களால் புணர்ச்சிப் பரவசநிலையை உணரச் செய்கிறது. இந்த இன்பம், செக்ஸ் மட்டுமல்லாமல், சுயஇன்பத்திலும் ஏற்படும். கனவு காணும்போது, மனரீதியாக செக்ஸ் இன்பம் தூண்டப்பட்டும் ஏற்படலாம். தூக்கத்தில் விந்து வெளியேறுவதை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

பொதுவான செக்ஸ் நிலை என்பது, பெண் கீழேயும், ஆண் மேலேயும் இருந்து புணர்வதே. இதில் 70 முதல் 80 சதவிகிதப் பெண்களுக்குப் பரவசநிலை கிடைப்பதில்லை என்கிறது ஓர் ஆய்வு. ஏனென்றால், பெண்ணுறுப்பில் இருக்கும் உணர்ச்சி மிகுந்த பகுதியான `கிளிட்டோரிஸ்’ (Clitoris) நேரடியாகத் தூண்டப்பட்டால்தான் பெண்கள் பரவசநிலையை அடையமுடியும். ஆண் கீழேயும், பெண் மேலேயும் இருந்து செயல்பட்டால் பெண்ணுக்கு இன்பம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ‘கிளிட்டோரிஸ்’ பகுதியில் சுமார் 8000 உணர்வு நரம்புகள் இருக்கின்றன.

எல்லாப் பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரே அளவு தீவிரமான பரவசநிலை ஏற்படாது. இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒரே மனிதருக்குக் கூட ஒவ்வொருமுறை செக்ஸ் வைத்துக் கொள்ளும்போதும், இந்த அளவின் தீவிரம் மாறுபடும். செக்ஸ் வைத்துக்கொள்ளும் சூழல், கணவன் மனைவிக்கிடையேயான புரிந்துணர்வு, ஆர்வம், மனக்கசப்பு போன்றவையெல்லாம் சேர்ந்துதான் பரவசநிலையின் அளவைத் தீர்மானிக்கின்றன. மருத்துவ ஆராய்ச்சியின் முடிவில், `ஆண்களுக்கு சராசரியாக 10 முதல் 15 விநாடிகளும், பெண்களுக்கு சராசரியாக 20 விநாடிகளும் புணர்ச்சிப் பரவசநிலை இன்பம் நீடிக்கும்’ என்கிறார்கள். உடலுறவில் ஈடுபடும்போது, ஆணும் பெண்ணும் ஒருவர்மீது ஒருவர் காதல் கொண்டு, காமக் கடலில் மூழ்கினால் தான் இந்தத் தெவிட்டாத இன்பம் கிடைக்கும்.