Home பாலியல் தினமும் சுய இன்பமா..? ஹார்ட் அட்டாக் வராதா…. இம்புட்டு பலன்களா…!

தினமும் சுய இன்பமா..? ஹார்ட் அட்டாக் வராதா…. இம்புட்டு பலன்களா…!

41

இன்று தெருவிற்கு தெரு ஆண்மைக் குறைவு மருத்துவர்கள் தோன்றி விட்டார்கள். தேவையற்ற பயம் காட்டி இளைஞர்களை வரவைத்து கண்ட லேகியங்களை கொடுத்து கல்லாக் கட்டுகிறார்கள்.

எனவே சுய இன்பம் சரியா, தவறா என்பதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் எல்லோருக்கும் இருக்கிறது. பொறுமையாக படியுங்கள்.

சுய இன்பத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கியத்தகவல்கள் என்னென்ன?…

சுய இன்பம் என்பது பொதுவாக ஒருவர் தனது உடம்பின் பாகங்களை, அதுவும் குறிப்பாக செக்ஸ் உறுப்புகளை செக்ஸூவல் மகிழ்ச்சி தரும் விதத்தில் தானே தொட்டும், தடவியும் இன்னபிற வகையிலும் செயல்பட்டு இன்பம் அனுபவித்தலாகும்.

சுய இன்பம் என்பது பொதுவானதொரு பாதுகாப்பான செக்ஸ் விளையாட்டுதான். சுய இன்பத்தினால் பல நல்ல ஆரோக்கியப்பலன்களும் இருக்கின்றன.

நம்மில் பலருக்கு சுய இன்பத்தை பற்றி பேசுவதென்பதே ஒரு பாவப்பட்ட, அசிங்கமான செயலாகத்தெரியலாம்.

பழங்காலத்திலிருந்தே சுய இன்பத்தை பற்றி நிலவி வரும் பல கருத்துக்களால் இன்றளவும்கூட நமது சமூகத்தில் சுய இன்பம் என்ற சொல் மூஞ்சை சுழிக்கச்செய்வதாகத்தான் உள்ளது.

இந்த பழைய கருத்துக்களால்தான் இன்னமும் சுய இன்பம் ஒரு அசிங்கமான உணர்வையும், தவறு செய்கிறோமோ என்ற உணர்வையும், ஒரு பய உணர்வையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுய இன்பத்தை பற்றிய உண்மைத்தகவல்களை ஒவ்வொரு மனிதரும் கட்டாயம் அறிந்து தெளிதல் வேண்டும். சுய இன்பம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்குமான ஒரு பொதுவான இயற்கையான விஷயம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

சுய இன்பம் சாதாரணமானதொரு செய்கைதானா?…

சுய இன்பம் மிகச்சாதாரணமான பொதுவானதொரு செய்கைதான். பெரும்பாலும் சுய இன்பம் உச்சகட்ட இன்பத்தில்தான் முடிகிறது.

உலகின் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் பத்தில் ஏழு ஆண்களும், பத்தில் ஐந்து பெண்களும் சுய இன்பத்தை அனுபவிப்பதாக தெரிவிக்கின்றது. இது பெரும்பாலும் டீன் ஏஜ் தலைமுறையில் பொதுவாக நிகழ்வதாகும்.

மக்கள் ஏன் சுய இன்பத்தை அனுபவிக்கிறார்கள்?…

பல்வேறு ஆய்வுகளில் சுய இன்பத்துக்கான காரணங்களாக மக்கள் தெரிவித்திருப்பது இதுதான்…

Ø சுய இன்பம் செக்சுவல் டென்ஷனிலிருந்து விடுதலை அளிக்கிறது.

Ø சுய இன்பம் செக்சுவல் ஆனந்தத்தை அளிக்கிறது.

Ø துணை இல்லாதபோதும் செக்ஸ் சுகத்தை அனுபவித்துக்கொள்ள உதவுகிறது.

Ø மனதிற்கு பெரும் ரிலாக்ஸ் வழங்குகிறது.

பெரும்பாலும் செக்ஸ் பார்ட்னர் இல்லாதவர்களும், திருமணம் ஆகாதவர்களும் தான் சுய இன்பத்தை அனுபவிப்பதாக நினைக்கிறார்கள்.

இது மிகத்தவறானதொரு கூற்று. திருமணமானவர்களும், சரியான செக்ஸ் பார்ட்னர் அமைந்தவர்களும்கூட ரெகுலராக சுய இன்பத்தையும் அனுபவிப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சுய இன்பம் அனுபவிப்பதன் பலன்கள் என்னென்ன?…

சுய இன்பம் மனம் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மனதில் எவ்வித குற்றவுணர்ச்சியும், குழப்பமுமில்லாமல் சுய இன்பத்தை அனுபவிப்பது பல்வேறு பலன்களை அளிக்கக்கூடியது.

சுய இன்பம் மட்டுமே அனுபவிப்பதனால் பால்வினை நோய் மற்றும் தேவையற்ற கர்ப்பம் போன்றவற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளமுடியும்.

அது மட்டுமின்றி சுய இன்பம்தான் ஒருவரது செக்ஸீவாலிட்டி குறித்து அறிந்து கொள்ள உதவுவது. அதாவது எந்த உறுப்பு, எந்தவிதமான செய்கைகள் உச்சகட்ட செக்சுவல் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்ள உதவக்கூடியது.

இது செக்ஸ் பார்ட்னருடன் வைத்துக்கொள்ளும் செக்ஸ் உறவிலும் உச்சகட்ட மகிழ்ச்சியை பெறுவதற்கான முன்னோட்ட வழிகளை தெரிவிக்கக்கூடியது.

சுய இன்பமானது…

ஆரோக்கியமான மனநிலையை உருவாக்கும்

பார்ட்னருடன் வைத்துக்கொள்ளும் செக்ஸை, உடல் மற்றும் மனரீதியாக மேம்படுத்தும் ஒரு உடல் உச்சகட்ட செக்ஸ் இன்பத்தைப்பெறுவதற்கு எவ்வாறு மீட்டப்படவேண்டும்.

என்பதை அறிந்து கொள்ள உதவும்.உச்சகட்ட மகிழ்ச்சியை அடையும் வழிமுறைகளை மேம்படுத்த உதவும்.செக்ஸூவல் திருப்தியை அளிக்க உதவும்.

தூக்கத்தை மேம்படுத்தும். இதயத்துக்கும், நுரையீரலுக்கும் ஒரு சரியான உடற்பயிற்சியாய் அமையும்.

செக்ஸூவல் துணை இல்லாதவர்களுக்கும் செக்ஸூவல் மகிழ்ச்சியை அளிக்கும். தூக்கத்தில் வரும் செக்ஸ் கனவுகளினால் ஆடைகளும், பெட்ஷூட்டும் நனையும் வண்ணம் தானே வெளியேறும் விந்துவைக்கட்டுப்படுத்தும்.

செக்ஸ் குறைபாடுகளுக்கான ட்ரீட்மெண்ட்டாக அமையும். மன அழுத்தத்தை குறைக்கும். செக்ஸூவல் டென்ஷனிலிருந்து விடுபட உதவும்எதிர்காலத்தில் ஆண்களுக்கு வரவிருக்கும் ப்ராஸ்டேட் கேன்சருக்கான வாய்ப்புகளைக்குறைக்கும்.

மாதவிடாய் குறைபாடுகளையும், தசை வலிகளையும் நீக்கும்.பெண்களை கட்டுப்பாடில்லாமல் யூரின் கசியும் பிரச்சினை, கருப்பை இடம் மாறுதல்(Prolapse) பிரச்சினை போன்றவற்றிலிருந்து காக்கும்