Home சூடான செய்திகள் தொட்டு உணர்ந்த முத்தமும், உளவியலும்.!

தொட்டு உணர்ந்த முத்தமும், உளவியலும்.!

87

அன்பின் முதல் மொழி முத்தம்.அன்பு, நட்பு, பாசம், நேசம், காதல் என அனைத்து வகையான அன்பிற்கும் அடையாளமாக இருப்பது முத்தம். ஒவ்வொரு வகையான முத்தத்திற்கும் ஒவ்வொரு தன்மை உண்டு என்கின்றனர். அதை வெளிபடுத்தும் உறவுகளுக்கு ஏற்ப அதற்கான அர்த்தங்கள் வேறுபடுகின்றன.

காதலர்களும், தம்பதிகளும் தங்கள் இணையின் இதழில் முத்தமிடும் பொழுது கண்களை மூடிக் கொள்வதுண்டு. பலரும் இதை சுயமாகவே உணர்ந்திருக்க கூடும். ஏன் திரைப்படங்களில் கூட முத்தமிட்டுக் கொள்வது போல நடிக்கும் போது கண்களை தானாக மூடிக் கொள்வார்கள்.

இது ஏன் என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா? நீங்களாக நினைத்தாலும் இதை தடுக்க முடியாது. ஏனெனில், நாம் உணர்ச்சி ரீதியான செயல்களில் ஈடுபடும் போது மனித மூளையில் தானாக உண்டாகும் அன்னிச்சை செயல்பாடுதான் இது என மனோதத்துவ நிபுணர்கள் சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டறிந்து தெரிவித்துள்ளனர்.

தொட்டு உணர்ந்து அதன் உணர்வை அனுபவிக்கும் போது நமது மூளை அதனை காட்சியாகவும், மன பிம்பமாகவும் உருவகம் செய்ய தூண்டுகிறதாம். அதனாலும் கூட முத்தமிடும் போது கண்கள் தானாக மூடிக் கொள்கிறது. முத்தமிடும் போது காதலர்களின் மத்தியில் உண்டாகும் காட்சி திறனை வைத்து தான் கண்கள் மூடுவது கண்டறியப்படுகிறது.

முத்தமிட்டுக் கொள்ளும் போது அந்த ஜோடிகளின் தொடுவுணர்வு எந்தளவிற்கு மேலோங்குகிறது என்பதன் அடிப்படையில் தான், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடு உணர்வில் சிறிதளவு தாக்கம் ஏற்படினும் அதை சார்ந்து முத்தமிடுவதிலும் மாற்றங்கள் ஏற்படும். உதாரணமாக இறுக்கமான முறையில் அணைத்து முத்தமிட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென துணை தொடுதலை விடுத்துவிட்டால், முத்தமிடும் உணர்வில் இருந்து நீங்கள் வெளிவந்துவிடுவீர்கள்.

உணர்வு நிலை அல்லது இறுக்கம் அதிகரித்தாலோ, தீண்டுதல் வீரியம் அடைந்தாலோ முத்தமிடும் நேரம் அல்லது அளவு நீடிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இதை வைத்து அவர்கள் காட்சிப்படுத்தும் அளவையும் கூட கணக்கிட முடியுமாம். ஆழமான முத்தத்தை பரிமாறும் போது, அதை பரிமாறும் ஆண்பெண் இருவரது பால் சுரப்பிகளும் தூண்டப்படுவது அப்போது தெரிய வந்தது.

முத்தமிடும் போது மட்டுமல்ல, உணர்ச்சிப் பூர்வமான எந்த ஒரு செயல்பாடாக இருப்பினும் மூளை காட்சி வடிவில் பிம்பத்தை உண்டாக்கி பார்க்கவே முனையும். இது உடலுறவில் ஈடுபடும் போது, கட்டியணைக்கும் போதென உணர்ச்சி ரீதியான எல்லா செயல்பாடுகளின் போதும் உண்டாகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.