Home இரகசியகேள்வி-பதில் இறங்காத விந்தகங்கள் மற்றும் இடம் மாறும் விந்தகங்கள்

இறங்காத விந்தகங்கள் மற்றும் இடம் மாறும் விந்தகங்கள்

48

மாதவிடாய் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியிலோ, குறைந்தோ அல்லது நாள் தவறியோ ஏற்படலாம். குறைந்தது 21 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது அதிகபட்சமாக 35 நாட்களுக்கு ஒரு முறையோ ஏற்படுவது நார்மல் என்று கருதப்படுகிறது. ஒருவருக்கு மாதவிடாய் ஏற்படும் தினத்திலிருந்து 5 அல்லது அதற்கு மேற்பட்ட தினங்களுக்கு ஏற்படவில்லை எனில் தாமதமான மாதவிடாய் என்றும், 6 வாரங்களுக்கு நீடித்தால் மாதவிடாய் தவறியது என்றும் பொருள்.

இதற்கான காரணங்கள்:

கருத்தரிப்பு: கருத்தரித்திருந்தால் மாதவிடாய்த் தவறும். மருத்துவரை அணுகி கர்ப்பம் தரித்திருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொண்டு மாதவிடாய் தவறியதற்கான மற்ற காரணங்களை பரிந்துரை செய்யலாம்.

சாதாரண நடைமுறை: மாதவிடாய் ஏற்படத் துவங்கிய முதல் 2 ஆண்டுகளுக்கு, உடலின் ஹார்மோன்கள் மாதவிடாய் மாறுதல்களுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளாத நிலையில் இருக்கும், இதனால் சூலகத்திலிருந்து மாதமொருமுறை கரு முட்டையை வெளியேற்ற தாமதமாகும்.

கவலை: மனக்கவலையோ, அழுத்தமோ இருந்தால் மாதவிடாய் தாமதமாவதற்கும் தவறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. அல்லது கடுமையான காய்ச்சல், பாலியல் உறவால் ஏற்பட்ட கிருமியின் தாக்குதல், கடுமையான உடல் எடையிழப்பு அல்லது எடை கூடுதல், கடுமையான உடற்பயிற்சி இவைகளாலும், விரதம் போன்றவற்றாலும் கூட மாதவிடாய் சுழற்சி பாதிப்படையும்.

ஹார்மோன் சமச்சீரின்மை: இது அரிதாகவே ஏற்படும் ஒரு காரணமாகும். சில சமயங்களில் கருத்தடை மாத்திரைகளை நிறுத்தியிருந்தீர்களானால் தற்காலிகமாக ஹார்மோன்கள் சமன்நிலை குலையும். இதனால் மாதவிடாய் தவறும். தைராய்டு சுரப்பி கபச் சுரப்பு, அட்ரினல் சுரப்பிகள் மற்றும் கருசூலகம் ஆகிய பிரச்சினைகளால் அரிதாக மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்படலாம்.

உறவு கொள்ள சிறந்த இடம்?

செக்ஸ் உறவு கொள்ள எது சிறந்த இடம்..? இப்படி ஒரு சர்வே எடுக்கப்பட்டுள்ளது ‘காமசூத்ரா காண்டம் நிறுவனம் சார்பில். முதலிடத்தை பெற்றது கார், அடுத்து பாத்ரூம், பப்ளிக் பார்க்.

காண்டம்ன்னா காமசூத்ராதான் என்று பலரும் தெரிந்திருக்கும். அது அவ்வப்போது காண்டம் விழிப்புணர்வுகாக பிரசாரம் செய்வதும், இது போன்று சர்வே எடுப்பதும் உண்டு. அப்படி சமீபத்தில் ஒரு வித்தியாசமான சர்வே எடுத்தது. பல மாநிலங்களிலும் நடந்த இந்த சர்வேயில் பங்கேற்றது 17 ஆயிரத்து 45 பேர். இதில் பாதிப்பேர், சென்னை, மும்பை, டில்லி, கொல்கட்டாவை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுபோல, காண்டம் பயன்படுத்துவோரில் சர்வேயில் பங்கேற்றவர்கள் என்று பார்க்கும் போது, சாப்ட்வேர் துறையில் உள்ளவர்கள் தான் அதிகபட்சமாக 17 சதவீதம்பேர் தைரியமாக தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். அடுத்து, மார்கெட்டிங், வர்த்தகத் துறைகளில் உள்ள நிர்வாகிகள், உயர் நிர்வாக பதவியில் உள்ளவர்கள் 13 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர்.

செக்ஸ் உறவு கொள்ள ஏற்ற இடம் என்றால், அது அவரவர் படுக்கை அறைதான். ஆனால் சிலருக்கு அதிலும் குறிப்பாக இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு பிடித்த இடம் என்பது முதலில் கார் தானாம். அடுத்து பாத்ரூம் என்று கூறியுள்ளனர். இன்னும் சில பேர், பூங்கா, தோட்டம் என்று கூறியுள்ளனர்.

சர்க்சைக்கிடமான விஷயம் பற்றியும் இந்த சர்வேயில் மீண்டும் கேட்கப்பட்டது. திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு கொண்டது உண்டா என்று கேட்கப்பட்டதற்கு, 49 சதவீதம் பேர் ஆம் என்று கூறியுள்ளனர். இதில் வேதனை தரத்தக்கது என்னவென்றால், இப்படி கூறியவர்கள் பெரும்பாலோர் 18 முதல் 24 வயது உள்ளவர்கள் தான். இதை விடக்கொடுமை என்னவென்றால், இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், ஒருவருக்கு மேல் செக்ஸ் உறவு கொண்டுள்ளனர் என்பதும் இந்த சர்வேயில் தெரிந்தது. சினிமாக்களாலும், டி.வி தொடர்களாலும் தான், திருமணத்துக்கு முந்தை செக்ஸ் உறவு பற்றி தெரியவந்தது. அது தான் மக்களை கெடுக்கிறது என்று சொல்வதும் எந்தளவு உண்மை என்பதும் இந்த சர்வேயில் தெரிந்தது. பெரும்பாலோர், நண்பர்கள், புத்தகம் படிப்பதன் மூலம், அடுத்து நீலப்படம் பார்ப்பது மூலம் தான் திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் வைத்துக்கொள்ள தூண்டுவதாக கூறியுள்ளனர். இது 73 சதவீதம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அடுத்து ஓரினச்சேர்கையும் சமுதாயத்தில் கணிசமான அளவு அதிகரித்துள்ளது என்பதும் சர்வேயில் தெரியவந்தது.

இந்த சர்வேயில், வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் எச்.ஐ.வி எய்ட்ஸ் பற்றிய பயமும் இளைஞர்களிடம் குறைந்து வருகிறது என்பதுதான். கருத்தடை சாதனம் பயன்படுத்த வேண்டும் என்பது சிலருக்குதான் தெரிகிறது. பல டீன் ஏஜ் வயதினர் வாய் வழிப்புணர்ச்சி கொள்வதில் மகிழ்ச்சி காண்கின்றனர் என்று சொல்கின்றனர். ஆனால் அது நல்லது தானா என்று கேட்டால், அது தானே பாதுகாப்பானது என்கின்றனர். இதுவும் வேதனையான விஷயம். இந்த விஷயத்தில் விழிப்புணர்வு, இளைஞர்களிடம் குறைவுதான் என்று தெரியவந்துள்ளது. வெறும் ஆறு சதவீதப் பேருக்குதான் வாய் வழிப்புணர்ச்சி மூலம் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு என்று தெரிகிறது.

ஆண்களுக்கு பெண்களிடம் பிடித்த கவர்ச்சி உடல் பகுதி எது என்றால், மார்பகங்கள், ஒட்டுமொத்த தோற்றம், பெண்களின் பின்பகுதியில் உள்ள பிட்டம், அது போல பெண்களுக்கு ஆண்களின் உடல்பகுதியில் கவரத்தக்கது என்றால் ஒட்டுமொத்த தோற்றம், கண்கள், புடைதெழும் உடல் அழகு ஆகியவை தானாம். இதுவும் சர்வேயில் கிடைத்த ருசிகரமான தகவல்கள்.

இறங்காத விந்தகங்கள் மற்றும் இடம் மாறும் விந்தகங்கள்

ஆணினுடைய மிக முக்கியமான அடிப்படையான பால் உறுப்புகளின் ஒரு பகுதி இரண்டு விந்தகங்களாகும். இந்த விந்தகங்களைத்தான் தமிழ் மண்ணின் சாதாரண பொதுமக்கள் விதைகள் என்றும், விரைகள் என்றும் கூறுகிறார்கள். இந்த விதை என்ற சொல்லை ஒரு விதத்தில் நோக்கினால் தமிழ் இலக்கணப்படி இதுவும் ஒரு ஆகுபெயர் ஆகும். விதை இல்லையேல் முளை இல்லை. முளை இல்லையேல் செடி இல்லை. செடி இல்லையேல் மரம் இல்லை. மண்ணிலே விதைக்கப்படும் ஒரு பொருள் அது எவ்வளவு நுண்ணியதாக இருந்தாலும் அதனுடைய வெளிப்பாடு எவ்வளவு சிறப்பாக இருக்கிறதோ அதே போன்று மனித உறவிலே உடலிலே விதைக்கப்படு விதை இந்த மண்ணகத்தில் ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ உருவாக்கித் தருகின்ற காரணத்தினால் இந்த விதை அது கோடிக்கணக்கில் உருவாகின்ற உறுப்பான விந்தகம் அதே பெயரோடு விதை என்று சொல்லைத்தான் தமிழ் இலக்கணம் ஆகுபெயர் என்று சொல்லப்படுகிறது. இந்த விதை என்ற சொல் மருவி தமிழகத்தின் பல இடங்களில் விரை என்ற சொல்லாகக் கூறப்படுகின்றது.

சாதாரணமாக ஒரு ஆண் மகனுக்கு இரண்டு விதைகள் அல்லது விந்தகங்கள் இருக்க வேண்டும். வாலிப வயதிற்கு வந்த ஒரு ஆண் மகனை ஆண் என்றும் ஆண்மை உடையவன் என்றும் சொல்லாமல் சொல்லுகின்ற ஒரு நிலையை உண்டாக்குவதே இந்த இரண்டு விந்தகங்களின் செயல்முறையால் என்பதை நாம் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்த இரண்டு விந்தகங்களும் இரு பகுதியின் இணைந்துள்ள ஒரு விந்துப்பையில் தங்கியுள்ளதையும் அந்த விந்துப்பையில் தங்கியுள்ளதையும் அந்த விந்துப்பை எந்த அளவிற்கு பாதுகாப்பாக அமைந்துள்ளது என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். பக்கத்திற்கு ஒன்றாக பாதுகாக்கப்படும் இந்த விந்தகங்கள் அதனுள்ளே உள்ள முக்கியமான பகுதிகள் அந்த பகுதிகளிலிருந்து தொடர்ந்து வெளியேறும் உயிர் அணுக்கள் மற்றும் ஆர்மோன்கள் அல்லது இயக்கநீர்கள் இலைகளைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். கண்ணுக்குத் தெரியாத உயிர் அணுக்கள் கோடிக்கணக்கில் தொடர்ந்து வெளியேறி பலதரப்பட்ட மாற்றங்களை அடைந்து பின்னர் உறவு கொள்ளும் பெண்ணோடு அவளின் கருவறையிலிருந்து வரும் நாதம் என்னும் கருமுட்டையோடு இணைந்து இப்படிபட்ட ஆண், பெண் என்னும் மனித ஓவியங்களை உருவாக்கி இந்த மண்ணகத்திற்கு வெளிக்கொண்டு வருகின்றது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு தாயின் வயிற்றில் உருவாகின்ற கரு, உள்ளிருக்கின்ற பத்து மாதத்தில் கிட்டத்தட்ட 280 நாட்களில் எப்படிப்பட்ட மாற்றங்களை அடைகிறது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். கண்ணுக்குத் தெரியாத ஒரு ஆண் மகனின் விந்தணுவும் ஒரு பெண் மகளின் நாத அணுவும் இணைந்து கருவாகி 9 முதல் 10 மாதங்கள் உள்ளேயே உருவாகி பின்னர் இந்த மண்ணுலகத்தில் வெளியேறி பெற்றவர்களுக்குத் திருவாக காட்சியளிகின்ற அந்த உயிர் ஓவியத்திற்குக் காரணமான இரண்டு அணுக்களில் ஒன்றான ஆணினுடைய விந்தணுவை உற்பத்தி செய்வதுதான் விதை என்றும் விரைப்பை என்றும் சொல்லப்படுகிற விந்தகங்களாகும்.

‘அது’ல ஆண்மகன்கள் பெரும்பாலோர் சரியில்லையாம். சீனப் பெண்களிடம் எடுத்த சர்வேயில் இந்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. திருப்தி இல்லாமல் தான் காலத்தை கழிக்க வேண்டியிருக்கிறது என்று புலம்புகின்றனர்.

செக்ஸ் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஒருவரின் வாழ்க்கையில், வாழ்வில் கணவன் மனைவி இடையே பல வகையில், இணக்கத்தை ஏற்படுத்துகிறது. சீரான வாழ்க்கைக்கு கை கொடுக்கிறது. உடல் ஆரோகியத்துக்கும், மன வலிமைக்கும் உதவுகிறது என்பதெல்லாம் டாக்டர்களின் கருத்து.

பழங்கால சீனாவை பொறுத்தவரை, ரொம்பவும் கட்டுப்பட்டவர்களாக பெண்கள் இருந்துள்ளனர். செக்ஸ் விஷயத்தில் கூட, அதிக அளவில் ஈடுபாடு காட்டாமல் இருந்துள்ளனர். இப்போது சீனப் பெண்களின் செக்ஸ் தாகம் அதிகரித்துள்ளதாக சர்வே தெரிவிக்கிறது. அவர்களின் செக்ஸ் தாகத்தை தீர்க்கும் அளவுக்கு பெரும்பலான சீன ஆண்களால் முடியவில்லை என்று கூறுகிறது.

சீன மருத்துவ சங்கமும், சீன செக்ஸ் அறிவியல் கழகமும் இணைந்து சமீபத்தில் வித்தியாசமான சர்வே எடுத்தது. அதில், சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சர்வே எடுத்ததில் 54.2 சதவீதம் பெண்களுக்கு, திருமணத்துக்குப் பின்னர் செக்ஸ் என்பது பெரிதும் முக்கியமான விஷயம் என்று தெரிகிறது. அது நிச்சயம், முழுமையாக தேவை என்றும் கருதுகின்றனர். அதில் 25 சதவீதம் பேர், தங்கள் கணவனால் தங்களுக்கு முழு செக்ஸ் திருப்தி தர முடியவில்லை என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

செக்சை பொறுத்தவரை, சீனப்பெண்களில் பெரும்பாலோருக்கு தங்கள் கணவர்களால் செக்ஸ் பிரச்னை இருக்கிறது. போதுமான அளவில் திருப்தி இல்லாமல் தான் திருமண வாழ்க்கையில் செக்சை அனுபவிக்கின்றனர். பல துறைகளில் நாட்டம் செலுத்தி, முன்னேறி வரும் சீனா, செக்ஸ் விஷயத்தில் எப்போதும் சோடை போனதில்லை. அதனால் தான் ஜனத்தொகையும் அதிகரித்த நிலையில் உள்ளது. ஆனாலும், நீடித்த செக்ஸ் வாழ்க்கையில் சீனப்பெண்களுக்கு குறை இருக்கிறது என்பது இப்போது தான் மருத்துவ ரீதியாக தெரியவந்துள்ளது.

இது பற்றி சீன செக்ஸ் மருத்துவ கழகம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் அதிக அளவில் சர்வே எடுத்து, சீன தம்பதிகளின் பிரச்னைகளை போக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. மேற்கத்திய கலாச்சார பாதிப்பு இருக்கும் நிலையில், சீனர்கள் மனப்போக்கு மாறியிருக்கும் அளவுக்கு, அவர்களின் தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னைகள் இருப்பது என்பது மருத்துவ உலகில் புது எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனப் பெண்கள் இப்படி வெளிப்படையாக செக்ஸ் விஷயத்தில் இருப்பதும் அவர்களை திகைப்படையச் செய்துள்ளது. செக்ஸ் விஷயத்தில் உரிய அணுகுமுறைகளை கையாள, கணவன்மார்களுக்கு ஆலோசனையும் கூறலாம் என்றும் செக்ஸ் மருத்துவக் கழகம் யோசித்து வருகிறது.

முதன்முறையாக உறவில் ஈடுபடும்போது, வலி ஏற்படுமா?

பெரும்பாலான பெண்கள் முதன்முறை உறவில் ஈடுபடும்போது வலியை உணர்கிறார்கள். வலி உண்டாவதற்கு முதன்மை காரணமாக இருப்பது, பெண் உறுப்பை மூடி இருக்கும், சருமத்தின் உட்புற அடுக்கான ‘கன்னி சவ்வு’ முதன் முறை உறவு கொள்ளும் போது கிழிய நேரிடுவதே ஆகும். ஆனால் இது எல்லா பெண்களுக்கும் ஏற்படுவதில்லை. உங்களுக்கு ‘கன்னி சவ்வு ‘ இருக்குமானால், முதல் உறவின் போது, வலியோ, அல்லது சிறிய அளவிலான இரத்தப்போக்கோ ஏற்படலாம் அல்லது ஏற்படாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. சில பெண்கள் வலியை உணர்வதே இல்லை, அது போல் எல்லா பெண்களுக்கும் ‘கன்னி சவ்வு’ கிழியும் போது இரத்தப் போக்கு நிகழ்வதில்லை. சில பெண்களுக்கு ‘கன்னி சவ்வு’ இல்லாமலே இருக்கும்.

மேலும் சில பெண்களுக்கு, கன்னி சவ்வானது, முதன் உறவுக்கு முன்னரே கிழிந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. இது கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலேயோ, அல்லது விபத்திலோ, சுய இன்பத்தில் ஈடுபடுவதாலோ நிகழலாம். உறவில் ஈடுபட பால் ரீதியாக ஒரு பெண் தயாராகும்போது, அவளுக்கு தானகவே சுரக்கும் திரவமானது , உறவின் போது உராய்வை குறைக்கும். ஆனால் இது எல்லோர்க்கும் நிகழ்வதில்லை, அதே போல் இந்த திரவ சுரப்பு மட்டுமே, உறவினால் ஏற்படும் வலியை குறைக்க போதுமானதல்ல. முதன்முறை உறவுகொள்வோர் தாங்கள் பால் ரீதியாக உĩ