Home பெண்கள் தாய்மை நலம் அறிவாளி பிள்ளை வேண்டுமா?அப்போ இந்த வயசுல குழந்தை பெத்துக்கோங்க…!!

அறிவாளி பிள்ளை வேண்டுமா?அப்போ இந்த வயசுல குழந்தை பெத்துக்கோங்க…!!

41

pregதங்களுடைய 30 வயதில் தாய்மையடையும் பெண்களின் குழந்தைகள் நல்ல அறிவுத்திறனோடு இருப்பதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்லூரி, அந்நாட்டின் உள்ள 18,000 குழந்தைகளை இந்த ஆய்வில் ஈடுபடுத்தியது.18,000 குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் செயல்பாடு குறிப்பிட்ட காலத்திற்கு கண்காணிக்கப்பட்டது.குழந்தையின் அறிவுத்திறன் மற்றும் செயல்திறன், தாயின் வயது ஆகியவையும் இந்த ஆய்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.பல கட்டமாக நடத்தப்பட்ட இந்த ஆய்வுகளின்படி,30 வயதுகளில் தாய்மை அடையும் பெண்களின் குழந்தைகள் குழந்தைகள்,மற்ற குழந்தைகளை விட அறிவாளிகளாக இருப்பது தெரியவந்துள்ளது.

30 வயதுகளில் இருக்கக் கூடிய பெண்கள் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை,உயர்கல்வி, நிலையான உறவுமுறை மற்றும் நல்ல வாழ்க்கை முறையுடன் வாழ்கின்றனர்.இதனால் அந்த வயதில் தாய்மையடையும் பெண்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகள் சுறுசுறுப்பாகவும், அறிவுத்திறனுடனும் இருப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.அதே வேளையில் 40 வயதுகளில் தாய்மையடையும் பெண்களின் குழந்தைகள்,உடல் பருமன் பிரச்சனைகளால் அதிகம் அவதிப்படுவதாகவும் இந்த ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.