Home பாலியல் உடலுறவில் ஈடுபடுவதில் பிரச்னை:கரு உருவாதலில் ஆண், பெண்குறி

உடலுறவில் ஈடுபடுவதில் பிரச்னை:கரு உருவாதலில் ஆண், பெண்குறி

57

சந்ததி உருவாக்குதல், இன்பம் அடைதல், உறவு களின் கட்டமை ப்பு என செக்ஸுக்கு மூன்றுவித நோக்கங்கள் உண்டு. செக்ஸின் முதன் மையான, முக்கியமான நோக்கம்& சந்ததியை உருவாக்கு வது தான். இனப்பெருக்கம் ஒன்று க்காகத்தான் செக்ஸ். எல்லா உயிரினங்களும் உலகில் பல்கிப் பெருகிக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற இயற்கையின் ஏற்பாடுதா ன் இது. வெறும் இனப்பெருக்கம் என்றால், மனிதனுக்கு அதில் பெரிய ஈடுபாடு இருக்காது என்பதால், அதனுடன் ஒருவிதமான இன்ப த்தையும் இணைத்து வைத்துள் ளது இயற்கை! செக்ஸ் இன்பத் துக்காக இணை சேரும் ஆணின் உயிரணு பெண்ணின், ஜனன உறுப்பில் தங்கி சந்ததியை உருவாக்குகிறது.

சில தம்பதிகளில், கணவனின் உயிரணு மனைவியின் உறுப்பில் தங்கா த சூழலில், குழந்தை பிறக்காமல் போய் விடலாம். இப்படி யொரு நிலை ஏற்பட சில காரணங்கள் உள்ளன. ஆண் உறுப்பில் விறைப்புத் தன்மை இல்லாதிருப்பது, தீவிரமான துரித ஸ்கலிதம் காரணமாக ஆண் உறுப்பு பெண் உறுப்புக்குள் நுழைந்தாலும் பெண் உறுப்புக்கு வெளியிலேயே விந்து வெளியேறி விடுவது, நல்ல விறைப்புடன் பெண் உறுப்புக்குள் நுழைந்தும் விந்து வெளியேறா மல் போவது போன்ற காரணங்களால் விந்து, பெண் உறுப்புக்குள் தங்காமல் போகலாம்.

உடலுறவுகொள்ளும் கால அவகாசத்தில் பிரச்னை:

ஒரு நாளில் முதல் தடவை உடலுறவு கொள்ளும் போதுதான்போது மான அள வில் விந்தும் அதில் போதுமான அளவு உயிரணுவும் இருக்கும். அதேநாளில் அடுத்தடுத்த முறை உடலுறவு கொள்ளு ம்போது வெளிப்படும் விந்தின் அளவு குறைவதுடன், அதில் போதுமான அளவி ல் உயிரணுவும் இருக்காது. அதேபோல் நிறைய நாட்கள் இடை வெளி விட்டு உறவு கொள்வதால், உயிரணுவின் மூவ்மென்ட் பாதிக்கப்பட்டு, நீந்தும் திறன் குறைந்துவிடும். அது மட்டுமல்லாமல், உயிருடன் இருக் கும் உயிரணுவின் எண்ணிக்கையும் குறை ந்துவிடும்.

செக்ஸில் தவறான டெக்னிக்குகளைப் பின்பற்றுவது:

பெண்ணை உடலுறவிற்கு தயார்நிலை க்குக் கொண்டுவராமல் உடலுறவில் ஈடுபடும் போது, பெண் பிறப்புறுப்பு ஈரப்பதமின்றி இருக்கும். பெண் பிற ப்புறுப்புல் ஈரப்பதம் முன்விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் இயற் கையாகவே உண்டாக்குகின்றன. இதை தவிர்த்து செயர்க்கையாக ஈரப் பதத்தை உண்டாக்க எண்னை போன்ற சில பொருட்களை பயன்படுதுவதால் இவை, உயிரணுவைக் கர்ப்பப் பைக்கு ள் போகவிடாமல் தடுக்கின்றன. மேலு ம், இவை கர்ப்பப்பை, பெலோப்பியன் குழாய் போன்றவற்றில் கிருமித் தொற் றையும் உண்டாக்குகின்றன. இதனால் கருமுட்டை வெளிவருவதும் தடுக்கப்படும். சமயத்தில், கரு உருவானால்கூட அது கர்ப்பப்பையில் தங்கி வளர முடியாத நிலையை இந்தக் கிருமித் தொற்று ஏற்படுத்தி வி டும்.

ஆண் ஜனன உறுப்பில் பிறவிக் கோ ளாறு இருப்பது:

பெண்குறிக்குள் ஆண்குறி நுழைந் து உயிரணு வெளிப்படும் போதுதா ன் கரு உருவாகும். ஆனால், சில ஆண்களுக்குப் பிறவியிலேயே ஆண்குறியின் முனையில் இருக்க வே ண்டிய துவாரம் கீழ்ப்பக்கம் தள்ளி இருக்கும். இதனால் ஆண்குறி, பெண் குறிக்குள் நுழைந்தாலும், உயிரணு கர்ப்பப் பைக்குள் போகாமல் வெளி யிலேயே வெளியேறிவிடும். இது ஒரு பிறவிக்குறை. இதற்கு ஹை போஸ்பேடியாஸ் என்று பெயர். இன் றைய நவீன மருத்துவ விஞ்ஞான த்தில் இக்குறையை நீக்க ஆபரேஷன் இருக்கிறது. இதன் மூலம் இக் குறையை நிவர்த்தி செய்துவிடலாம். சில ஆண்களுக்கு, பிறவிக் குறைபாட்டால் ஆண்குறி அளவுக்கதிகமாக வளைந்திருக்கும். இதனால் ஆண் குறி, பெண்குறிக்குள் போகவே போ காது. இந்தக் குறையையும் ஆபரே ஷன்மூலம் சரிசெய்துவிட முடியும்.

பெண் சார்ந்த காரணங்கள்:

கருமுட்டை வெளியாகும் போதுதா ன் ஒரு பெண்ணால் கர்ப்பம் தரிக்க முடியும். சில பெண்களுக்குக் கரு முட்டை வெளியாகாமல்கூட இரு க்கலாம். சில பெண்களுக்குக் கருமுட்டையும், உயிரணுவும் சந்தித்து கரு உருவானாலும் கூட& உருவான கரு, பெலோப்பியன் டியூப்பிலிரு ந்து நகர்ந்து கருப்பைக்கு வராமலேகூட இருந்து விட லாம். அப்படியே வந்தாலும் கர்ப்பப் பையில் தங்கி வளர முடியாத நிலைமை ஏற்பட லாம். இதனால் இந்தப் பெண் களுக்குக் குழந்தை பிறக்காம ல் போகும்.

உயிரணுவானது கருப்பாதை, பெலோப்பியன் டியூப், கர்ப்பப்பை போன்ற இடங்களை நீந்திச் சென்றா ல்தான் கர்ப்பம் தரிக்க முடியும். ஆனால், சில பெண்களுக்கு உயிரணு வானது நீந்திச்செல்ல முடியாத அளவுக்குத்தடைகள் ஏற்பட்டு, அதனா ல் குழந்தை இல்லாமல் போகலாம். இன்னும் சில பெண்களுக்கு ஃபெ லோப்பியன் டியூப்பில் அடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக குழந்தை பாக்கியமற்றுப் போ கலாம். அல்லது ஜனன உறுப்பில் கிருமி தொற்றிப் பாதிப்பு ஏற்பட்டு இக்குறை ஏற்படலாம்.

ஹார்மோன் கலாட்டா:

பொதுவாக ஒரு பெண்ணுக்கு இருபத்தெட்டு நாட்களுக்கு ஒரு தட வை மாதவிடாய் வந்தது என்றால், பதினான்காம் நாள் கருமுட்டை வெளி வரும். அப்படி வரும் கருமுட்டையின் ஆயுட் காலம் 24 மணி நேரம்தான். இந்தத் தருணத்தில் உடல் உறவு கொண்டால்தான் கரு உருவாக வாய்ப்பு உண்டு. ஆனால், சில பெண்களுக்கு கரு முட்டையே வெளிவ ராமல் கரு உருவாவது தடைபடுகிறது. கருமுட்டை வெளிவராமல் போ வதற்குக் காரணம் ஹார்மோன் குறைபாடுகள் தான். உடல் எடை கூடுதலாக இருக்கும் பெண்களில் சிலருக்கும் குழந் தை இல்லாமல் இருக்கும். இவர் களுக்கு ஹார்மோன் குறை பாட்டால் கருமுட்டை வெளிவரா மல் போய்விடலாம். இதுமட்டுமி ல்லை, தீவிர மன அழுத்தம்கூட கருமுட்டையை வெளிவராமல் செய்துவிடும் என் பது மருத்துவ உண்மை.

பொதுவாக கரு ஃபெலோப்பியன் டி யூப்பில்தான் உருவாகும். அதன் பின்னர், நான்கிலிருந்து ஏழு நாட்களுக்குள் கரு நகர்ந்து கர்ப்பப் பைக்கு ள் வர வேண்டும். ஒருவேளை கருப்பையின் உட்சுவர் (எண் டோமெட் ரியம்) பலவீனமாகிப்போனால், பெலோப் பியன் டியூப்பிலிருந்து நகர்ந்து கர்ப்பப் பைக்கு வரும் கருவானது, அங்கு தங்கி வளர முடியாத சூழல் ஏற்படும். இந்த எ ண்டோமெட்ரியம் ஆரோக்கியமில்லாம ல் போவதற் குரிய காரணங்களில், ஹார் மோன் கலாட்டாவு ம் ஒன்று.

பெண் குறியின் பாதை எப்போதும் அமில த்தன்மை கொண்டிருக்கும், இந்த அமிலத் தன்மையை விந்தில் உள்ள காரத்தன் மை மட்டுப்படுத்திவிடும். சில பெண்களுக்குக் கிருமித்தொற்றால், அமி லத் தன்மை அதி கரித்துவிடும். இதனால் உயிரணுக்கள் இறந்து விடும்.

கர்ப்பப் பையின் வாசலில் மியூக்கஸ் என்கிற அடர்த்தியான சளிப் படலம் ஒரு கதவுபோல இருக்கும். கருமுட் டை வெளியாகும் தருணத்தில் இது நீர்த்துப்போய் கசிந்து வெளியேறிவிடு ம். ஆனால், சில பெண்களுக்குக் கரு முட்டை வெளிவரும் நாளில் இந்த சளிப்படலத்தின் அடர்த்தி குறையாமல் போய்விடும். அப்போது இதுவே கர்ப்பப் பையின் வாசலி ல் தடையாக இருந்து& உயிரணுவைப் பைக்குள் செல்ல விடாமல் தடு த்து நிறுத்தி விடும். இதன் காரணமாக வும் குழந்தைப் பிறப்பு தடைப டும்.

சில பெண்களுக்கு பெண்குறி பாதையிலு ம், கர்ப்பப்பை வாசலிலும் உயிரணுவை எதிர்க்கிற ஒருவித ரசாயனம் சுரக்கும். இதனால் உள் ளே வரும் உயிரணுவின் வீரியம் குறைந்துவிடும் அல்லது உயிர ணு இறந்து விடலாம்.

ஃபெலோப்பியன் டியூப் பிளாக்:

கரு முட்டையும், உயிரணுவும் சந்தி க்கும் ஃபெலோப்பியன் டியூப்பில் அடைப்பு இருந்தாலும் கரு உருவாகா மல் போகலாம். பிறவி குறைபா டு, பால் வினை நோய், காசநோய் போன்றவற் றால் ஃபெலோப்பியன் குழாயில் அடைப் பு ஏற்படலாம். மிகவும் அரிதாக, சில பெண்களுக்கு மன அழுத்தத்தால் ஃபெ லொப்பியன் டியூப்பில் பிளாக் ஏற்பட லாம்.

கர்ப்பப் பைக்கு இரண்டு பக்கமும் உள்ள இரண்டு ஃபெலோப்பியன் டியூ ப்களில் ஏதாவது ஒன்றில் அடைப்பு இருந்தால், குழந்தை பிற க்க 50 சத விகிதம் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இரண்டிலும் அடைப் பு இருந்தால், அந்தப் பெண்ணுக்குக் குழந் தை பிறக்க நிச்சயம் வாய்ப்பே இல்லை.

பெண் ஜனன உறுப்பில் பிறவிக் குறை பாடு:

பிறவியிலேயே கரு முட் டைப்பை, கர்ப் ப ப்பை, பெண்குறி பாதை போ ன்றவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாமல் குறைபாட்டுடன் பிறந்திருக் கும் பெண்களுக்கும் குழந் தை பாக்கியம் எட்டாக் கனவுதான். இன்னும் சில பெண்களுக்கு ஜனன உறுப்பு படைக்க ப்பட்டிருக்கும். ஆனால், சரியாக வளர்ச் சி அடைந்திருக்காது. சில பெண்களுக்கு ஜனன உறுப்பு சரியாகவும் உரிய வளர்ச் சியும் பெற்றிருக்கும். ஆனால், பிறவியி லேயே ஜனன உறுப்புக்குப்பாதை இருக் காது. சில ருக்கு ஜனன உறுப்பில் பாதை இருக்கும். ஆனால், அது அடைபட்டிருக் கலாம். இதுபோன்றவர் களுக்கு உடலுற விலும் பிரச்னை இருக்கும். இக்குறை யை ஆபரேஷன் மூலம் குணப்படுத்தலாம்.

செக்ஸ் பிரச்னையால் குழந்தை இல்லாமை:

சிலபெண்களுக்கு செக்ஸ் ஆசை இருக்கும். உணர்ச்சிவசப்படவும் செய்வார்கள். ஆனால், உட ல் உறவில் ஈடுபட்டால் வலி எடுக்குமோ என்ற தேவையற்ற பயத்தில் உழல்வார்கள். அதன் காரணமாக அவர்களையும் அறியாம ல் பெண்குறி பாதையை இறுக்கமாக்கி விடு வார்கள். திருமணமான புதிதில் சில பெண் களுக்கு இப்பிரச்னை இருக்கும். சில பெண்க ளின் இல்லற வாழ்வில் இதுவே தொடர்கதை யாகவும் இருக்கும். இதன் காரணமாகவும் குழந்தை பிறப்பு தடைபட்டுப் போகும்.

இருவருக்குமான காரணங்கள்:

குழந்தையின்மையைப் பொறுத்தவரை, கண வன் &மனைவி இருவருக்குமான காரணங் கள் 5 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகித ஜோடிகளுக்கு இருக்கும். சில தம்பதிகளில் கணவருக்கும் சரி, மனைவிக்கும் சரி, எந்த பிரச்னையும் இருக்காது..ஆனால், குழந்தை பிறக்கா மல் இருக்கும். இதற்கு மருத்துவரீதி யில் இடியோபதிக் இன்ஃபெர்டிலிட்டி என்றுபெயர். இன்னாதென்று அறியவே முடியாத ஏதோ ஒரு காரணத்தால்தான் இந்த நிலை ஏற்படு கிறது. இதற்கான காரணத்தை இன்றைய அதிநவீன மருத் துவ விஞ்ஞா னத்தால்கூட கண்டுபிடிக் கமுடியவில்லை. ஒருவேளை, எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம்.