Home சூடான செய்திகள் ஆபாசப் படங்களை காட்டி, பலாத்காரம்: 13 வயது சிறுமி தற்கொலை முயற்சி – ஆசிரியர் கைது

ஆபாசப் படங்களை காட்டி, பலாத்காரம்: 13 வயது சிறுமி தற்கொலை முயற்சி – ஆசிரியர் கைது

26

கிழக்கு டெல்லியில் உள்ள மண்டவாலி பகுதியில் பெற்றோருடன் வசிக்கும் 13 வயது சிறுமியின் செல்போனுக்கு தொடர்ந்து மெஸேஜ்களாக வந்த ஆபாசப்படங்களை பார்த்த அவரது தாயார் அதிர்ச்சியடைந்தார்.

அவற்றை அனுப்பியது யார்? என்று சிறுமியை மிரட்டி கேட்டபோது, தனக்கு டியூஷன் கற்றுத்தரும் ஆசிரியர் இதைப்போன்ற படங்களை காட்டி, தன்னை பலமுறை கற்பழித்ததாகவும், அவர்தான் இந்தப் படங்களை மெஸேஜ்களாக அனுப்பி வருவதாகவும் தெரிவித்தாள்.

தாயாரிடம் உண்மையை கூறிய பிறகு, வீட்டில் இருந்த பழைய மருந்துகளை குடித்து தற்கொலைக்கு முயன்று, மயங்கி விழுந்த சிறுமியை ஆஸ்பத்திரியில் அனுமதித்த பெற்றோர், அவளது உயிரை காப்பாற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வந்த புகாரையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவள் கற்பழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது, இதையடுத்து, அந்த ஆசிரியரை கைது செய்த போலீசார், பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.