Home ஆரோக்கியம் ‘மந்திரம்’ போடும் தலையணைகள் – அதிரச்சி தகவல்…!

‘மந்திரம்’ போடும் தலையணைகள் – அதிரச்சி தகவல்…!

33

நாள் முழுவதும் வேலை. ரொம்பவும் களைத்துப்போகிறோம். வீடு திரும்பியதும், அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விடுகிறோம். சற்று நேரம் படுத்தால் உடலும், மனதும் ‘ரிலாக்ஸ்’ ஆகும் என்று நினைத்து படுக்கை அறைக்குள் புகுந்துவிடுவோம்.

படுக்கையில் என்றாலும், இருக்கையில் என்றாலும் சற்றே ஓய்வெடுக்கவோ, படுத்து தூங்கவோ சவுகரியத்திற்கு தலையணை தேவைப்படுகிறது. சரியான தலையணை இல்லாவிட்டால் தூங்கவே முடியாமல் அவதிப்படுகிறவர்கள் நிறைய பேர் உண்டு.

தலையணையில் தலை வைத்து உடலை நேர் வாக்கில் வைத்துப் படுக்கும்போது, உடல் ரிலாக்ஸாகும். அந்த ரிலாக்ஸ் நேரத்தில் எதை கேட்டாலும் அது வேகமாக மூளைக்கு செல்லும். நன்றாக பதிந்தும் போய்விடும். திருமணமானவர்களைப் பொறுத்தவரையில் படுக்கை அறையில் தலையணை மட்டுமல்ல!

மனைவியும் இருப்பார். கணவர் ரிலாக்ஸ் ஆக தலையணையில் தலை சாய்த்திருக்கும்போது, மனைவி போட வேண்டிய விஷயங்களை எல்லாம் தனக்கு சாதகமாக போட்டுவைத்துவிடுவார். அதனால்தான் மனைவி சொற்படி நடக்கும் கணவனைப் பார்த்து ‘தலையணை மந்திரம் வேலை செய்யத் தொடங்கி விட்டது’ என்று சொல்வதுண்டு.

ஆழ்ந்த உறக்கத்திற்கு தலையணை மிகவும் உதவியாக உள்ளது. ஆனால் அதற்கு தேவையான முக்கியத்துவத்தை பலரும் கொடுப்பதில்லை என்றுதான் சொல்லவேண்டும். அதை இரவில் மட்டும்தான் தேடுகிறோம். தலையணை தலைக்கு மட்டுமல்ல, உடலின் பல பாகங்களுக்கும் பக்கபலமாக இருக்கிறது.

முதுகு, கழுத்து, வயிறு, கால், கை என எல்லாவற்றிற்கும் முட்டுக் கொடுத்து நம்மை ஆனந்தமாக தூங்கவைப்பது அதுதான். தலையணை தூக்கத்திற்கான சுகத்தை தந்தாலும் அதிலிருந்து நோய்க்கிருமிகள் பரவவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் அவ்வப்போது தலையணை உறையை மாற்ற வேண்டியது அவசியம்.

தொற்று நோய் உள்ளவர்களுக்கு பயன்படுத்திய தலையணைகளை, அவர் தான் குணமாகிவிட்டாரே என்று மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. அதன் மூலம் நோய் அடுத்தவர்களையும் தாக்கக்கூடும். ஆகையால் நோயாளிகள் பயன்படுத்திய தலையணையை எரித்துவிடுவது நல்லது.

தலையணையை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வெயிலில் காயவைக்க வேண்டும். இல்லையென்றால் ஈரமோ, பிசுபிசுப்போ இருந்து கிருமிகள் உருவாகி உடல் நலத்தை பாதிக்கும். நமது தலையணையை உடலுக்கு ஏற்ப அமைத்து, பயன்படுத்தவேண்டும்.

அதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. எல்லாருக்கும் ஒரே மாதிரி தலையணை ஒத்துவராது. அவரவர் உடலுக்கு ஏற்ப, வசதியானதை தேர்வு செய்யவேண்டும். இரவில் வெகுநேரம் தூக்கம் வராதவர்கள், தங்கள் தலையணை அமைப்பு சரியாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். சரியான தலையணையை வைத்து படுத்தால்தான் தூக்கமும் வரும்.

மறுநாளுக்கு தேவையான புத்துணர்ச்சியும் கிடைக்கும். தூக்கத்திற்கு மாத்திரை சாப்பிடுகிறவர்கள், அதை நிறுத்திவிட்டு உங்கள் தலையணை சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். இன்னொரு கூடுதல் விஷயம், நாம் சாப்பிடும் மாத்திரைகள் பலவும், நாம் தூங்கும்போதுதான் வேலை செய்கிறது.

மருந்தின் முழு பலனை அடைய நல்ல ஓய்வும், தூக்கமும் அவசியம். அதற்கு தலையணை மிகவும் அவசியம். தலையணை வைப்பது ஒருபுறம் இருக்கட்டும். படுக்கையில் சரியாக படுக்க உங்களுக்கு தெரியுமா? நேராக முதுகுத் தண்டு தரையில் படும்படி படுக்கவேண்டும்.

தலையின் பின்புறமும், முதுகெலும்பும் ஒரே நேர்கோட்டில் இருக்கும்படி படுக்கவேண்டும். அதிக உயரம் இல்லாத தலையணையை பயன்படுத்துங்கள். தூக்கத்தில் தலையணை நழுவி விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

ஒரு பக்கமாக படுக்கும் வழக்கமிருந்தால் காது, தோள்பட்டைக்கு அழுத்தம் ஏற்படாத அளவுக்கு மென்மையான தலையணையை பயன்படுத்தி படுக்கவேண்டும். கைகால், வலி உள்ளவர்கள் சற்று கடுமையான, படுக்கும் போது உள்ளே அழுத்தம் ஏற்பட்டு குழிவிழாத தலைய ணையை வைத்து படுக்கவேண்டும்.

அப்போதுதான் ரத்த ஓட்டம் அதிகரித்து வலிக்கு இதமாக இருக்கும். ‘பெதர்’ எனப்படும் இறகு போன்ற தலையணைகள் உடலின் அழுத்தத்திற்கேற்ப செயல்பட்டு உடலை மென்மை யாக வைத்திருக்கும் ‘மெமரி போம்’ தலையணைகள் தூக்கத்தில் உருண்டு படுக்கும்போது ஏற்படும் அழுத்தத்திற்கேற்ப மாறும் வடிவமைப்பைக் கொண்டது.

குழந்தைகளுக்கென அழகாகவும், மென்மையாகவும், வண்ண வண்ண நிறங்களில் தலையணை தயாரிக்கப்படுகிறது. அதில் மிக்கி மவுஸ், சின்ட்ரெல்லா படங்களும் பல வண்ணங்களில் வரையப்பட்டிருக்கும். வண்ண வண்ண பூக்கள், பட்டாம் பூச்சிகள் என எண்ணிலடங்கா படங்களுடன் புதுமையான தலையணைகள் குழந்தைகளுக்காக உள்ளன.

அதை குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்துகொடுக்கவேண்டும். உடலுக்கு குளிர்ச்சியை தரும் பிரம்பு நார் தலையணை, ஆக்யூப்ரஷர் தலைய ணைகளும் உள்ளன. நோய்களுக்குதக்க வாறும், உடல் வலிகளுக்கு தக்கவாறும் பலவித தலையணைகள் உள்ளன. பயன்படுத்திப்பார்த்து தங்களுக்கு பொருத்தமானதை நிரந்தரமாக்கிக்கொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் சில ஓட்டல்களில் வாடிக்கையாளர்களிடம் நிறைய தலையணைகளை காட்டுகிறார்கள். படுத்துப் பார்த்து, இதமானவற்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளும்படி கூறுகிறார்கள். வெகு நேரம் சாய்ந்து கொண்டு படிக்க, கால்வலி, முதுகு வலிக்கு முட்டுக்கொடுக்க என்று தனித்தனி தலையணை வைத்திருக்கிறார்கள்.

ஓட்டலில் தங்க பெற்றோரோடு வரும் குழந்தைகளிடமும் விதவிதமான தலையணைகளை கொடுத்து, பிடித்ததை எடுத்துக்கொள்ளும்படி சொல்கிறார்கள். கர்ப்பிணிகளுக்காகவும், கைக்குழந்தைகளை பராமரிக்கும் தாய்மார்களுக்கும் தனித்தனியாக தலையணைகள் வடிவமைக்கப்படுகின்றன.

பெண்கள் எப்போதும் மென்மையான தலையணைகளைத்தான் விரும்புகிறார்கள். அதிலும் இலவம் பஞ்சு தலையணைகளே அவர்களை கவர்கிறது. கேரளாவில் விதவிதமான ‘ஸ்பா’ தலையணைகள் கிடைக்கும். அங்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக நிறைய வெளிநாட்டு பயணிகள் வருகிறார்கள்.

அவர்கள் விடுதிகளில் தங்குகிறார்கள். அவர்களின் வசதிக்கேற்ப தலையணைகளை உருவாக்கி வழங்குகிறார்கள். அது அவர்கள் உடல் நலத்திற்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டதாகும்.