Home காமசூத்ரா காம சாஸ்திர அறிவு உங்கள் வாழ்க்கைக்கு ஒரு பாடம்

காம சாஸ்திர அறிவு உங்கள் வாழ்க்கைக்கு ஒரு பாடம்

700

காம சாஸ்திரம்:மனிதன் பருவநிலையை அடைந்தவுடன் அல்லது பருவநிலை ஏற்படும் தருவாயில் அந்தரங்கம் பற்றிய சந்தேகங்கள் அவனுக்குள் துளிர்விட துடங்குகிறது .

காலபோக்கில் பல சந்தேகங்களுக்கு தீர்வு கிடைத்தாலும், பலருக்கும் அதைப்பற்றி முழுவதுமாக தெரிந்துகொள்ள வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

இணையதளத்தின் வாயிலாகவும் ,நீல படத்தினாலும் , கேள்வியறிவினாலும் அந்தரங்கம் பற்றிய அடிப்படை அறிவு பலருக்கு கிடைத்தாலும்

அதை பற்றி அரை குறையாக தெரிந்து கொண்டு நீல படங்களை முழுவதுமாக நம்பி அந்தரங்கம் பற்றிய தவறான கருத்துகளை மனதிற்குள் பதியவைத்து கொள்கிறார்கள்.

இதனால் பிற்காலத்தில் தன்களுடைய சொந்த வழ்க்கையிலும் சமூகத்திலும் பல பிரச்சனைகள் உருவாக காரணமகிவிடுகிறார்கள். குறிப்பாக எதிர் பாலினத்தை பற்றி புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள் .

மனிதனுக்கு எற்படும் பெரும்பாலான உளவியல் பிரச்னைகளுக்கு பாலியல் சம்மந்தமான தொடர்பு இருப்பதாக உளவியலின் தந்தை சிக்மென்பிராயிடு கூறுகிறார்.

பாலியல் பற்றிய சரியான அறிவும் புரிதலும் இல்லாதது பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள், வன்கொடுமைகள் நிகழ்வதற்க்கு ஒரு காரணமாக இருக்கிறது

.மனிதடனுடைய பாலியல் எண்ணங்களுக்கு அவனுடைய சிறுவயது வாழ்வின் உளவியல் காரணங்கள் மையமாக அமைகிறது .

பல பெண்களை பாலியல் பலாதாரம் செய்து கொலை செய்த ஆண்களின் கடந்தகால வாழ்க்கையை படித்து பார்த்தால் அவர்கள் சிறுவயதில் எதாவது காரணத்தினால் உளவியல் ரீதியாக பாதிக்கபட்டவர்களாக இருகிறார்கள்.

பாலியல் பற்றிய தெளிவான அறிவுடையவர்கள் இருபாலரும் இது மாதிரியான சூழ்நிலைக்கு ஆளாவதிலை.

அந்தரங்க அறிவு மனிதனுக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை புரிந்திருந்த நம் முன்னோர்கள் அயகலை அறுபத்திநாலில் காமத்தையும் (காம சாஸ்திரம்) ஒன்றாக சேர்த்திருந்தனர் .

அதை பற்றிய தெளிவான அறிவும் அவர்களிடம் இருந்தது .சுமார் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் கலவியல் பற்றி தெளிவாகவும் முழுவதுமாக சொல்லும் காமசூத்திரம் வாச்சயாரால் எழுதபட்டிருக்கிறது .

அதில் அறம் , பொருள் அதற்க்கு பிறகு காமம் பற்றி தெளிவாக சொல்லபட்டிருக்கிறது. உலகின் வேறு எந்த நாட்டிலும் எந்த மொழியிலும் இத்தனை ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு சிறந்த நூலை யாரும் எழுதியதில்லை .

இன்று உலகின் பெரும்பான்மை மொழிகளில் இந்நூல் மொழிபெயர்க்கபட்டிருகிறது . பார்ப்பது, கேட்பது, தொடுவது, வாசனை இந்த நான்கு காரணிகளை மையமாக வைத்தே பாலியல் ஆசை தூண்டபடுகிறது.

ஆண்களுக்கு பெண்ணின் வெற்று உடம்பை பார்த்தால் மோகம் ஏற்படுகிறது , பெண்ணின் கவர்ச்சியான உடம்பை பார்ப்பதால் ஆணின் உடம்பு கலவிய லுக்கு தயார் ஆகிறது .

பெண்களுக்கு வெற்று உடம்பை பார்ப்பதால் மட்டும் பெரிதாக எந்த பாலியல் கிளர்சியும் ஏற்படுவதில்லை. இதனால் தான் கவர்ச்சியான ஆடை அணியும் பெண்களை கண்டதும் ஆண்களுக்கு கிளர்ச்சி ஏற்படுகிறது .

அதனால் ஆண்களின் பார்வையில் இது ஆபாசமாக தெரியலாம்; ஆனால் பெண்ணை பொறுத்தவரையில் ஆடை என்பது வசதியையும் உரிமையையும் பொறுத்ததாக பார்க்கபடுகிறது .

இதில் பெண்களின் பார்வையில் ஆபாசம் ஏதும் தெரிவதில்லை . பார்ப்பது தவிர மற்ற மூன்று காரணிகளும் பொதுவாக இருபாலிர்க்கும் கிளர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. சத்தம் ; அழுத்தமான முத்தத்தின் ஓசை, மோகமமூட்டும் வார்தைகள், எதிர் பாலினத்தின் முனங்கல்கள்.

வாசம்:

இது நபர்களை பொறுத்து மாறுபடுகிறது சிலருக்கு மல்லிகை பூவின் வாசனை கூட பாலியல் மோகத்தை தூண்டலாம். பொதுவாக சொன்னால் ஆணின் வாசம் பெண்ணிற்கும், பெண்ணின் வாசம் ஆணிற்கும் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது . அது வியர்வை வாசனையாக கூட இருக்கலாம்.

தொடுதல் :

மெல்லிய தழுவல், அழுத்தமான அணைப்பு , காதுமடல் பரிசம் இன்னும் இது போல எராளம் . எதில் ஏதாவது ஒரு காரணி போதும் அணின் உடல் எளிதில் மோகம் கொள்வதற்க்கு .

அனல் பெண்ணிற்கு மோகம் ஏற்பட அதிக நேரம் ஆகிறது .ஆணின் கலவியல் வீரிய வெளிப்பாடான விரைப்பு தன்மை பெண்ணின் கவர்ச்சியான உடம்பை பார்தவுடன் ஏற்படுகிறது.

பெண்ணின் கலவியல் வீரிய வெளிப்பாடான ஜனன குழாய் ஈரம் ஆணின் பாசத்தாலும், தொடுதலாலும், மோகத்தை தூண்டும் பேச்சாலும், பரவசத்தை ஏற்படுத்தும் தழுவலாலும் மட்டும் ஏற்படுகிறது.

இதை பெரும்பாலான ஆண்கள் புரிந்துகொள்வதில்லை தங்களுடைய தேவையை மட்டும் நிறைவேற்றுபவர்களாக இருக்கிறார்கள் .

இதனால் பலபொழுதும் பெண்கள் கலைவியலில் உச்சநிலையை அடைவதிலை. பெண் உச்சநிலையை அடையும் நேரம் ஆணின் பரிசம் , வாசனை , பேச்சு ,தழுவல் இதை பொறுத்து மாறுபடுகிறது.

பெண் கலவியலுக்கு முன் அதிக நேரம் பேச விரும்புகிறாள். பெண்ணை படுக்கைக்கு மட்டும் பயன்படும் இயந்திரமாக பார்க்காமல் அதற்க்கு வெளியிலும் பெண்ணின் விருப்பு, வெறுப்புகளை புரிந்து நடந்து கொள்ளும் துணையிடம் பெண் அதிக பாலியல் மோகம் கொள்கிறாள் .

பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து என்பவரால் எழுதப்பட்ட நூல் ” பதினோரு நிமிடங்கள் ” .அதில் அந்த பெண் தன் வாழ்நாளில பலநூறு ஆண்களிடம் உறவு கொண்டபோதும் ஒருவரிடமும் உச்சத்தை அடைந்ததில்லை என்றும் .

ஆனால் வடிக்கையாளரிடம் தான் உச்சத்தை அடைந்தது போல ஒவ்வரு முறையும் நடிக்க வேண்டியவளாய் இருந்தேன் என்றும் இதனால் ஆண்கள் முழு திருப்தி அடைவதாகவும், தன்ணை ஒரு சாதனையாளனாக தனக்குள் கருதுவதாகவும் சொல்கிறாள்.

ஆனால் உறவுகொள்ளும் முந்தைய நிலையிலே ஒரு ஆணிடம் உச்ச நிலையை அடைகிறாள் .ஏனெனில் அவள் அவனது தொடுகையில் காதலை உணர்ந்தவளாய் இருக்கிறாள் . பெண்ணின் மார்பகங்கள் ஆணின் பாலியல் மோகத்தை தூண்டும் ஒரு உறுப்பு .

சிறு வயதில் வறுமை, ஏமாற்றம், நிராகரிப்பு, தனிமை இவ்வாறான சுழ்நிலையில் வாழ்ந்த ஆண்களுக்கு சராசரிக்கு மிகுதியான மார்பகங்களும் ,

சிறுவயதில் செழிப்பான சுழ்நிலையில் வாழ்ந்த ஆண்களுக்கு சராசரி அளவும், நேர்த்தியான சிந்தனை வாதிகளான ஆண்களுக்கு சராசரியை விட சிறிய அளவும் பிடிபதாக ஆய்வுகள் சொல்கிறது.

பல ஆண்களுக்கு அதிகாலையில் பாலியல் கிளர்ச்சி ஏற்படுகிறது அதற்க்கு காரணம் ஆண்களுக்கு டெஸ்டோஸ்ரோன் { ஆண்பால் ஹெர்மோன் } அதிகாலையில் அதிகமாக சுரக்கிறது .

இதானால் தான் ஆண்களுக்கு பெரும்பாலும் கலவியல் கொள்ள வாய்ப்பு இல்லாத ஆண்களுக்கு அதிகாலை நேரம் பாலியல் கனவுகள் ஏற்படுகிறது. தானாக சில நேரம் விந்துவும் வெளியேறி விடுகிறது .

இது இயல்பான ஒன்று இதற்க்காக அவர்கள் வருந்தவேண்டியதில்லை. ஆண் களுக்கு பதினாறு வயது முதல் இருபத்தி ஒன்று வயதுவரை கலவியல் வீரியம் ஆதிகமாக இருக்கும்.

இந்த வயதில் டெஸ்டோஸ்ரோன் உற்பத்தி அதிகமாக இருப்பதால் கட்டு பாடை யும் மீறி அதிக தவறுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளது .உறவுமுறை கூட சில நேரங்களில் தெரியாமல் போய்விடுகிறது .

மனமுதிர்ச்சி அடைந்து போக போக டெஸ்டோஸ்ரோனை கட்டுபடுத்த பழகி விடுகிறார்கள். முப்பதி ஐந்து வயதிற்கு பிறகு கலவியல் வீரியம் ஆண்களுக்கு படிப்படியாக குறைய தொடங்கி விடும்.

சில உணவு முறைகள் பழக்கவழக்கங்கள், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் உளவியல் காரணிகள் போன்றவைகளும் ஆண்களுக்கு கலவியல் வீரியம் குறைந்து விட காரணமாக அமைந்து விடுகிறது .

மது பழக்கம் அந்த நேரத்திற்கு மட்டும் பாலியல் ஆசையை தூண்டலம் ,சில சமயம் செயல்பட முடியாமலும் போகலாம்.

தொடர்ந்து மது அருந்துவர்களுக்கு கலவியல் வீரியம் மற்றும் பாலியல் ஆசை நிரந்தரமாக குறைந்து விடுகிறது. பெண்களுக்கு இருபத்தி ஐந்து வயதிற்கு பிறகோ அல்லது முப்பதுகளின் தொடக்கதிலோ தான் கலவியல் வீரியம் அதிகரிக்கிறது .

மாதவிலக்கு ஏற்படும் வரை பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் { பெண்பால் ஹெர்மோன் } அதிகமாக இருக்கும் மாதவிலக்கு நின்று போன பிறகு ஈஸ்ட்ரோஜன் சுரப்பது நின்றுவிடுகிறது .

பிறகு டெஸ்டோஸ்ரோன் {ஆண்பால் ஹெர்மோன் } முன்பைவிட பெண்களுக்கு அதிக அளவில் சுரக்கிறது இதனால் மாதவிலக்கு நின்றபிறகு பெண்களுக்கு களவியலில் அதிக ஆர்வம் ஏற்படுகிறது.

அநேக பெண்களுக்கும் ஐம்பது வயது அருகாமையில் மாதவிலக்கு நின்று விடுகிறது. பிறகு கலவியல் ஆர்வம் இருந்தாலும் ஜனன குழாய் வழவழப்பு தன்மையை இழந்து விடுகிறது.

எண்ணெய் போன்ற பொருட்களை பயன்படுத்தி உறவு கொள்ளலாம் . பெண்க ளுக்கு மதத்தில் ஒருமுறை தான் கருமுட்டை உருவாகிறது .

அதுவும் குறிப்பிட்ட வயதிற்க்கு பிறகு {மாதவிலக்கு நின்ற பிறகு} கரு முட்டை உருவாவதில்லை .ஆணை பொறுத்தவரையில் தினமும் விந்தணு உருவாகிறது .ஆணிற்கு வயதளவில் எல்லையும் இல்லை அதனால் எந்த வயதிலும் ஆண்களால் தந்தை ஆக முடியும்.

ஆனால் பெரும்பாண்மை ஆண்களுக்கு வயதாகும் போது பாலியல் வீரியமும் ஆசையும் குறைந்து விடுகிறது. காமம் மலரினும் மென்மையானது அதில் காதல் என்ற வாசம் வீசும்போது தான் அந்த மலர் அழகாக மலர்கிறது.