Home ஜல்சா குளித்துவிட்டு இண்டர்வியூக்கு ரெடியாக இருக்க சொல்லி விட்டு இந்தப்பெண்ணை கற்பழித்த காமக் கொடூரங்கள்!!

குளித்துவிட்டு இண்டர்வியூக்கு ரெடியாக இருக்க சொல்லி விட்டு இந்தப்பெண்ணை கற்பழித்த காமக் கொடூரங்கள்!!

35

பெங்களூரில் 27 வயதான திருமணமான பெண்ணை வேலை வாங்கி தருவதாக கூறி 4 பேர் கூட்டாக கத்தி முனையில் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு தெரிந்த மஞ்சு என்ற பெண் மூலம் வேலை தேடி வந்துள்ளார் 27 வயதான திருமணமான கர்நாடக பெண் ஒருவர். இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை அந்த பெண்ணுக்கு போன் செய்த மஞ்சு தகுதியான வேலை ஒன்று இருப்பதால் உடனே பெங்களூருக்கு கிளம்பி வர கூறியுள்ளார். இதனை நம்பி பெங்களூருக்கு கிளம்பி சென்றுள்ளார் அந்த பெண்.

பின்னர் அவந்த பெண்ணை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுக்கு அழைத்து சென்ற 4 பேர் குளித்துவிட்டு இண்டர்வியூக்கு ரெடியாக இடுக்குமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கு வந்த அவர்கள் அந்த பெண்ணை கத்தி முனையில் மிரட்டி ஒருவர் பின் ஒருவராக மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். காலையில் ஆரம்பித்து மாலை 5.30 மணி வரை அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர் அவர்கள்.

6 மணியளவில் அதில் 3 பேர் வெளியே செல்ல காவலில் இருந்த நான்காவது நபரை சாமர்த்தியமாக ஏமாற்றிவிட்டு அங்கிருந்து தப்பித்த அந்த பெண் மறுநாள் காலை தனது சொந்த ஊருக்கு சென்று காவல் நிலையத்தில் நடந்தவற்றை கூறி புகார் அளித்துள்ளார். அந்த 4 பேரையும் காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர்.