Home பெண்கள் உடல் கட்டுப்பாடு துர்நாற்ற வியர்வையால் அவஸ்தயா?

துர்நாற்ற வியர்வையால் அவஸ்தயா?

33

கோடை வந்தால் போதும், அதுவும் அக்னி நட்சத்திர வெயில் என்றால் அழையா விருந்தாளியாக வியர்வையும் சேர்ந்து வந்துவிடும். அப்படி வரும் வியர்வை-ல ஒரு சிலரது வியர்வை நாற்றத்தை தாங்க முடியாது. இதில் சிலர் வியர்வை நாற்றம் தெரியக்கூடாது என்பதற்காக வாசனைத் திரவியங்களை உடம்பில் தேவைக்கு அதிகமாகவே தெளித்திருப்பார்கள். ஆனால் அதையும் தாண்டி நாற்றம் வருவது தான் கொடுமை. இந்த கொடுமையிலிருந்து விடுபட நிறைய பேர் ஏ.சி-யே கதி என்று இருக்கிறார்கள்.

அனைவருக்கும் வியர்வை சுரப்பி ஒரே அளவு தான் இருக்கும். அந்த வியர்வையை பாடி டெம்பரேச்சரை வைத்துத்தான் சொல்ல முடியும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இந்த வியர்வை ஒரு சிலருக்கு அதிகமாகவும், ஒரு சிலருக்கு குறைவாகவும் சுரக்கும். வியர்வையானது அதிகமாகவும் சுரக்கக் கூடாது, குறைவாகவும் சுரக்கக் கூடாது. அப்படி இருந்தால் காரணத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

சொல்லப்போனால் துர்நாற்றம் வியர்வையினால் வருவதில்லை. நம் உடலில் உள்ள நச்சுப்பொருள் வியர்வையில் கலப்பதாலேயே துர்நாற்றம் வருகிறது. இந்த துர்நாற்ற வியர்வை வராமல் இருக்க என்ன பண்ணலாம்?

துர்நாற்ற வியர்வை வராமல் இருக்க…

1. மசாலா நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிடக்கூடாது. மேலும் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

2. இளநீர், நுங்கு, பதநீர் ஆகியவற்றை பருகலாம். இதனால் வியர்வை கட்டுப்படுவதோடு, நாற்றம் இல்லாமலும் இருக்கும்.

3. பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படுவதாலும் வியர்வையில் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனை மருத்துவரிடம் சென்று உரிய மருத்துவ ஆலோசனை பெற்றால், வியர்வையை நாற்றம் இல்லாததாக மாற்றலாம்.

4. வியர்த்து விட்டால் உடனே குளிப்பவர்கள், நீரில் ஒரு மாத்திரை அளவு கற்பூரத்தை போட்டு, முகத்தில் படாமல் உடலுக்கு மட்டும் அந்த நீரை ஊற்றிக் குளிக்கலாம். இதனால் வியர்வை நாற்றம் விலகி விடும்.