Home சூடான செய்திகள் உடலுறவு மீது அளவுக்கு அதிகமாக ஈடுபாடு உண்டாவது ஏன்?

உடலுறவு மீது அளவுக்கு அதிகமாக ஈடுபாடு உண்டாவது ஏன்?

40

பொதுவாகவே பெரும்பாலான மக்களுக்கு உடலுறவு மீதான ஈர்ப்பு அதிகமாக உள்ளது.

இது ஏன் என்று பெரும்பாலும் நாம் யோசிப்பது இல்லை. இந்த உலகமே அந்த ஒரு விஷயத்தில் கிறங்கி போய் கிடக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆண்கள் தான் உடலுறவில் அதிக ஆர்வம் கொள்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் உண்மை அது அல்ல. ஆண், பெண் அனைவருக்குமே இந்த உணர்ச்சி இருக்கத்தான் செய்கிறது.

யார் வெளிப்படுத்துகிறார்கள், யார் வெளிப்படுத்தவில்லை என்பது கேள்வி. ஆனால் பேதமில்லாமல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு அனைவரும் உடலுறவை கண்களாலும், காதாலும், உணர்வுகளாலும் ருசித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

நமது சமூகம், வாழ்வியல் மற்றும் கல்வி முறையில் நடக்கும் சில தவறுகள் தான் உடலுறவு என்ற விஷயத்தின் மீதான ஈர்ப்பு அதிகமாக காரணமாக உள்ளது.

வாழ்க்கை கல்வி என்பதை செக்ஸ் கல்வி என்ற தவறான பெயரில் கற்பிக்க கூடாது என்ற போராட்டமே நடைபெற்றுள்ளது.

எட்டாம் வகுப்பில் இருந்து இனப்பெருக்க அறிவியல் என்ற பாடப்பகுதி உள்ளது.

ஒரு மாணவன் அல்லது மாணவி அவரது 13 ஆம் வயதை தொடும் போது உணர்சிகள் பற்றியும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் உடல் அறிவியல் பகுதி சேர்க்கப்படுகிறது.

ஆனால், பள்ளிகளில், வகுப்புகளில், ஆசிரியர்கள் அந்த பாடத்தை முழுமையாக தெளிவாக நடத்துவதில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

உயிரியல், வேதியல், இயற்பியல் போல இனப்பெருக்க அறிவியலும் சாதாரணமாக நடத்தப்பட்டாலே பெரும்பாலும் உடலுறவு உணர்சிகள் என்றால் என்ன என்ற அறிவும், தெளிவும் தெரிந்துவிடும்.

அதன் பிறகு மாணவர்கள் தவறான பாதையில் சென்று அதை தேட வேண்டிய நிலை இருக்காது.

புத்தகத்தில் இருந்து நாம் கற்பிக்காமல் சாதரணமாக நீக்கிவிடும் ஒன்று தான், பிள்ளைகள் அதன் மீது அதிக ஆர்வம் காட்ட காரணமாகிவிடுகிறது.

இந்த ஆர்வத்தை சரியான முறையில் கற்பித்துவிட்டால் முளையிலேயே விஷத்தன்மையான எண்ணங்கள் ஒரு குழந்தை மனதில் பரவாமல் தடுக்க முடியும்.

பதின் வயதில் தான் குழந்தைகள் கேள்வி கேட்பதை தவிர்த்து, செயற்முறையில் கற்றுக்கொள்ள அதிக ஈடுபாட காண்பிப்பார்கள்.

இந்த நேரத்தில் செக்ஸ் பற்றிய விஷயங்கள் தெரிந்தோ தெரியாமலோ நண்பர்கள், தெரிந்தவர்கள் மூலம் அறியப்படும் போது, அது சார்ந்த தெளிவு இருந்தால், செயற்முறை படுத்தி பார்க்க வேண்டும் என்ற எண்ணம் யார் மனத்திலும் எழாது.

இது மாணவர்கள் மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் பொருந்தும். இன்றளவும் இருபதுகளில் வாழ்ந்து கொண்டு, உடலுறவு என்றால் என்ன என்ற முழு தெளிவு இல்லாமல் வாழும் நபர்கள் ஏராளம்.

நாம் காதுகள் மூலம் அறியும் அனைத்தும் 100% உண்மையானது. ஒருவரிடம் இருந்து, மற்றொருவருக்கு பரவும் போதே அதில் ஒருசில கலப்பு மற்றும் சுய அனுபவம் என்ற பெயரில் போலித்தனம் சேர்ந்து தான் வரும்.