Home அந்தரங்கம் பாலுறவு ஆனந்தத்தை அடைய சில யோசனைகள்

பாலுறவு ஆனந்தத்தை அடைய சில யோசனைகள்

42

neked-gierlfriend-sex-picsபாலுறவுப் புணர்ச்சி கொள்வதில் நீங்கள் போதிய திறன் (அனுபவம்) கொண்டவர் இல்லையென்றாலும் அல்லது நிபுணத்துவம் படைத்தவராக இருப்பினும், உங்களது துணையுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும்போது, சில நேரங்களில் ஒருவிதமான சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

அதுபோன்ற சங்கடங்களில் இருந்து மீண்டு, தொந்தரவில்லா முழு பாலுறவு ஆனந்தத்தை அடைய சில யோசனைகள் :

பாலுறவுப் புணர்ச்சியின் போது உங்களை அறியாமலேயே ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொள்ள நேரிடலாம். அதாவது தலையுடன் தலை முட்டிக் கொள்ளும், முடியைப் பிடித்து இழுக்க நேரிடும். அல்லது ஒருவரின் கை எதிர் பாலினத்தவரின் கண்களில் பட்டு விடலாம். என்றாலும், ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்து மேற்கொள்ளும் உறவை அதுபோன்றவை கட்டுப்படுத்தி விடாமல் பார்த்துக் கொண்டால், முழு அளவிலான உறவை அனுபவிக்கலாம்.

கணவன் – மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் சிறுநீர் கழிக்காமல் இருந்தால் முழு மகிழ்ச்சி கிடைக்காது. சிறுநீர்ப்பை காலியாக இருக்குமாறு பார்த்துக் கொள்தல் வேண்டும். சிறுநீர் கழிக்காமல் பாலுறவு கொள்வோருக்கு சில நேரங்களில் வலி ஏற்படக்கூடும். எனவே சிறுநீர் கழிக்கத் தோன்றினால் அதனை முடித்து விட்டு தொடங்குங்கள்.

இருவருமே ஆடைகளின்றி உறவு கொள்ளும்போது, சுவாரஸ்யம் அதிகரிக்கும். பாலுறவுக்கு முன் ஒருவரோடு ஒருவர் உரசிக் கொள்தல், உறவின்போது ஒலி எழுப்புதல் போன்றவையும் முழு சுகத்தை அளிக்கக்கூடும்.

பாலுறவு கொள்ளும் முறைகள் பல இருப்பினும் பழகப் பழக வரும் வித்தைகள் போன்றதே பாலுறவும். பயிற்சியின் மூலம் மட்டுமே அதிக நேரம் உறவு கொள்ளக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தலாம். முடிந்தால், பாலுறவு வைத்துக் கொள்ளும் முன்பே சிறிய ஒத்திகை பாருங்கள்.

உங்களின் சுவாசக் காற்று எதிர்பாலினத்தவர் மீது படும்போது, வெறுப்பை ஏற்படுத்துவதாக இருக்காமல் பார்த்துக் கொள்தல் வேண்டும். முடிந்தால் வாயில் போட்டு மெல்லும் சில வகை `மவுத் ரெப்ரஷனர்’ பயன்படுத்திய பின் உறவு கொள்ளலாம். அதிக முத்தங்களை பரிமாறிக் கொள்ளும் போது இருவருக்குமே மகிழ்ச்சியை அளிக்கும்.

பொதுவாகவே பாலுறவுக்கு முன் மது அருந்துதல் போன்ற தூண்டுதல் பானங்களை உபயோகிக்காமல் இருப்பது நல்லது. இயல்பான பாலுறவுப் புணர்ச்சியை அது தவிர்த்து விடும்.

கணவன் – மனைவி இடையேயான தாம்பத்யம் என்பது புனிதமான ஒரு உறவு என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

பாலுறவுப் புணர்ச்சி கொள்ளாதவர்கள் வீட்டில் மகிழ்ச்சி இல்லை என்பார்கள். திருமணமானவுடன் புதுமணத் தம்பதிகள் ஆரம்பத்தில் அதிக நேரம் (முறை) பாலுறவுப் புணர்ச்சி கொள்வர். அதுவே ஓரிரு ஆண்டுகள் போய், ஒன்றோ, இரண்டோ குழந்தைகள் என்றானவுடன் பாலுறவில் நாட்டம் குறைவது இயற்கையே.

ஆனால், குறிப்பிட்டதொரு இடைவெளியில் பாலுறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், இது நபருக்கு, நபர் வேறுபடும். தம்பதிகள் செய்யும் தொழில், பணி போன்றவற்றைப் பொருத்து, பாலுறவு கொள்ளும் இடைவெளி வேறுபடலாம்.

கணவன் – மனைவி இருவருமே வேலைக்குச் செல்பவராக இருந்தால், இருவருக்கும் பொதுவான விடுமுறை அல்லது வார விடுமுறை நாட்களில் உறவு கொள்ளலாம்.

திருமணமாகி 25-30 ஆண்டுகளாகியும் இணைபிரியாத தம்பதிகளைப் பற்றியும் கேள்விப்படுகிறோம். ஒரே ஆண்டில் ஒரு குழந்தை பிறந்தவுடனேயே அலுத்துப் போய் பாலுறவை தவிர்ப்பவர்களையும் பார்க்கிறோம். இதில் கணவனுக்கு அதிக நாட்டம் இருக்கும், மனைவி விருப்பமில்லாமல் இருப்பார். வேறு சில சம்பவங்களில் மனைவிக்கு நாட்டம் இருந்தும் கணவனுக்கு அதிக நாட்டமில்லாமல் போகும் வாய்ப்பும் உண்டு.

எனவே பாலுறவு என்பது மனித வாழ்க்கைக்கும், அமைதியான மனநலத்தை பேணுவதற்கும், புத்துணர்ச்சிக்கும் அவசியம் என்பதை அறிந்து உறவு கொள்தல் வேண்டும்.

எனவே, அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப, திருமணமாகி ஆண்டுகள் பலவாயினும் அவ்வப்போது பாலுறவுப் புணர்ச்சியை வைத்துக் கொள்தல் மனதிற்கும், உடலுக்கும் மகிழ்ச்சி தரும் என்பதில் ஐயமில்லை.