Home சூடான செய்திகள் ஆண்களே உஷார்! பெண்கள் தங்கள் வலையில் உங்களை சிக்க வைக்க இதெல்லாம் செய்வார்கள்…

ஆண்களே உஷார்! பெண்கள் தங்கள் வலையில் உங்களை சிக்க வைக்க இதெல்லாம் செய்வார்கள்…

39

ஆண்கள் எவ்வளவு தான் கோபக்காரர்களாக இருந்தாலும் பெண்களின் சில நடவடிக்கைகள் அவர்களை கூலாக்கிவிடும். அதிலும் இருவருமே ஈகோவால் சண்டை போட்டுக் கொண்டால் பெண்களை ரொம்ப ஈஸியாக ஆண்களைத் தங்கள் வசமாக்கிவிடுவார்கள்.

இப்படி ஆண்களை மடக்கி, தங்கள் வழிக்குக் கொண்டு வருவதற்காகவு சில ட்ரிக்குகளை ஃபாலோ பண்ணுகிறார்கள். எப்படியெல்லாம் தாஜா பண்ணுவார்கள் எனத் தெரிந்து கொண்டு கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்…

ஆண்கள் தங்களுக்கு வெளியில் உண்டாகும் கோபத்தைக் கூட வீட்டில் வந்துதான் காட்டுவார்கள். அதை சமாளிக்க வேண்டிய மனைவியும் பதிலுக்குக் கோபப்பட்டால் வீடு ரெண்டாகி விடும். அப்படி ஆண்களின் கோபத்தைத் தணிக்க பெண்கள் என்னென்ன வித்தைகளெல்லாம் கையில் வைத்திருக்கிறார்கள் என்று தெரியுமா?

ஆண்களுக்கு தங்களை யாராவது அறிவாளி என்று சொல்லிவிட்டால் பெருமை தாங்காது. அதைத்தான் பெண்களும் அடிக்கடி பயன்படுத்துவார்கள். ‘என் சமத்து‘, என் வீட்டுக்காரர் மாதிரி இந்த உலகத்துல யாராவது உண்டா? என்று சொல்லியே ஆண்களை காலி பண்ணிவிடும் அறிவாளிகள் பெண்கள்.

ஆண்கள் அதிகமாகக் கோபப்படுவதே பெண்கள் அதிகமாகப் பேசுவதால் தான். ஆனால் அந்த கோபத்தையும் பெண்கள் பேசி தான் சரி செய்கிறார்கள் என்பது தான் வேடிக்கை. எப்படி கூலாகப் பேச வேண்டுமோ அப்படி பேசி, கோபம் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடுவார்கள்.

தன்னுடைய துணை எப்போதும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் பெண்கள். ஆண்களும் தங்களுடைய திறமையை நான்கு பேர் பார்த்து பாராட்ட வேண்டுமென நினைப்பதுண்டு. பெண்கள் அதை நன்கு கவனித்து தன்னுடைய கணவரின் திறமையைப் பற்றி பெருமைப்பட்டுக் கொண்டாலோ அடுத்தவரிடம் கூறினாலோ எப்படிப்பட்ட கோபமும் ஆண்களுக்குப் பஞ்சாகப் பறந்துபோய்விடும்.

காதலையும் அன்பையும் இருவரும் மாறி மாறி வெளிக்காட்டுவதோடு, தன் மேல் எவ்வளவு காதல் இருக்கிறது என்பதை அடுத்தவரிடம் சொல்வது போல சொல்லி, தனக்கு வேண்டியதை அன்பால் சாதித்துக் கொள்ளும் சாமர்த்தியம் பெண்களுக்கே உரியது.

ஆண்களுக்கு எப்போதுமே ஞாபக மறதி உண்டு. எதையும் நினைத்து குழம்புவதைவிட மறக்கவே விரும்புவார்கள். தன்னுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட முக்கிய நிகழ்வாக இருந்தாலும் அப்படித்தான். அதுபோன்ற இனிய சம்பவங்களை யாராவது நினைவுபடுத்தினால் மகிழ்ச்சியடைவார்கள். அதனாலேயே பெண்கள் இதுபோன்ற விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருந்து ஆண்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக மாற்றுவார்கள்.

நீங்கள் கோபமாக இருக்கும்போது மட்டும் உங்களுக்குப் பிடிக்காததை விட்டுவிட்டு, நீங்கள் அவர்களிடம் எதை ரசிப்பீர்களோ அதை உங்கள் முன் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.

சில பெண்கள் எந்த முயற்சியும் எடுக்காமல் அவராக கோபம் குறைந்து வரட்டும் என்று விட்டுவிடுவார்கள். இந்த வகை பெண்கள் மிகக் குறைவு.

எதற்குமே தணியாத ஆண்களின் கோபத்தை பெண்கள் தங்களிடம் உள்ள பிரம்மாஸ்திரமான கட்டிலைப் பயன்படுத்தி வழிக்கு கொண்டு வந்துவிடுவார்கள். இளகிய மனசு கொண்ட ஆண்களும் வேறு வழியே இல்லாமல் கட்டிலில் தஞ்சம் அடைந்துவிடுவார்கள்.